Blogger இயக்குவது.
| புதிய நூல்கள்: பயங்கரவாதி - டிஸ்வரி புக்பேலஸ் | நான் ஸ்ரீலங்கன் இல்லை - யாவரும் பப்ளிசர்ஸ் | நடுகல் டிஸ்வரிபுக் பேலஸ் | deebachelvan@gmail.com | 0772487257

செவ்வாய், 4 செப்டம்பர், 2012

அகதியின் பள்ளிக்கூடம்


அகதிமுகாமாக்கப்பட்ட பள்ளியின்
கதிரை மேசைகள் அள்ளியேற்றப்பட்ட
ஒருநாள் புத்தகங்கள் தொலைந்துபோயின
யாரும் திரும்பாத காலத்தில்
போர்க்களத்தில் நிற்கையில்
காயங்கள் மிகுந்த பள்ளியின் மணியை அசைத்திருப்பாயா?
நொந்த உள்ளத்தோடு கிழிந்த சீருடைகளுடன்
நான் அகதியான பொழுது
நிமிர்ந்திருந்த நம்; பள்ளியும் அகதியானது
ரொட்டிகளை பரிசளிக்கும் பசியாறும் கதைகளை
படித்த மரநிழலின் நினைவுகளை பொழியும்
சேலைகள் கட்டப்பட்ட
மரங்களாலான வீடுகளில்
என்னிடம் புத்தகங்கள் இருக்கவில்லை
அகதி முத்திரை குத்தப்பட்ட பள்ளிக்கு
உன்னைப்போலவே எந்தத் தோழர்களும் திரும்பவில்லை
யாரும் திரும்பாத வகுப்பறையில்
பாடல்கள் ஒலிக்கவேயில்லை
பேரீட்சைப் பழங்களில்லை
ஒட்டகங்களில்லை
எண்ணெய் கிணறுகளில்லை
சிறுவர்கள் சாகடிக்கப்படும் யுகத்தில்
ஒரு பாலஸ்தீனச் சிறுவனைப்போல
நான் ரொட்டிக்கு அலைந்தேன்
இறுதிவரை
கிழிந்த என் அகதிப் புத்தகப் பையிற்குள்
உனக்காக சில ரொட்டித் துண்டுகளிருந்தன.

தீபச்செல்வன்

*** 
நன்றி - மலைகள் இணைய இதழ்

2 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

வருத்தப்பட வைக்கும் வரிகள். மனம் கனத்தது.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/09/blog-post_5410.html) சென்று பார்க்கவும்...

நன்றி…

வன்னி வளைப்புப் பற்றிய கவிதைகள்

# ஆட்களை இழந்த வெளி
# அடருகிற இரவொன்றில் தின்னப்பட்ட கடல்
# பதுங்குகுழியைவிட்டு அலைகிற வெளி
# பந்துகள் கொட்டுகிற காணி
# மணலில் தீருகிற துயர்
# நிலம் பெயர்ந்தலைய வந்துவிடு
# பயமுறுத்துகிற இருள்
# சுற்றி வளைக்கப்பட்ட பாதுகாப்பு வலயம்
# ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்
# எலும்புக்கூடுகளை வெளியேற்றுவதற்கான வழி
# கடல் நுழைகிற மணற் பதுங்குகுழி
# அறிவிக்கப்பட்ட வலயத்தில் நிறைகிற சுடுமணல்
# தாகம் பாய்கிற நதிக்கான கனவு
# யாருமற்ற நகரின் தெருவினை மிதிக்கிற கொடு நிழல்
# சொற்ப எண்ணிக்கையாக்கப்பட்ட குழந்தைகள்
# சுற்றி வளைக்கப்பட்ட கிராமத்தின் சரணடைகிற பொதிகள்
# மரண நெடில் வெளி இரவு
# கைப்பற்றப்பட்ட நகரம் பற்றியெழுகிற பெருந்துயர்
# மற்றொரு நகரத்தை நோக்கி நடைபெறுகிற படையெடுப்புகள்
# மலைப்பாம்பு காப்பாற்றப்போகிற முட்டைகள்
# மாதா அழைத்து வைத்திருந்த மாடுகள்
# நீர் அறிந்திருக்காத சிலுவைகள்
# தேங்காய்களை தின்று அசைகிற கொடி
#முற்றுகையிடப்பட்ட நகரத்தின் பதுங்குகுழி
#மனிதாபிமானத்திற்கான படைநடவடிக்கை
#அண்மையில் மிதிபடுகிற கடல்
#மரங்கள் பின்வாங்குகிற இன்றிரவு
#நம்மைத் தொடருகிற போர்
#குழந்தைகளை இழுத்துச் செல்லும் பாம்புகள்
#அழிப்பதற்கு பிரகடனம் செய்யப்பட்ட நகரத்தின் கதிரைகள...
#அவகாசத்திற்குப் பிறகான படைநடவடிக்கை.
#பெரிய நகரை தின்கிற படைகள்
#போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்
#போர் தொடங்கும் குழந்தைகளின் கனவுகள்

வலைப்பதிவு பட்டியல்

Related Posts Plugin for WordPress, Blogger...