Blogger இயக்குவது.
| புதிய நூல்கள்: பயங்கரவாதி - டிஸ்வரி புக்பேலஸ் | நான் ஸ்ரீலங்கன் இல்லை - யாவரும் பப்ளிசர்ஸ் | நடுகல் டிஸ்வரிபுக் பேலஸ் | deebachelvan@gmail.com | 0772487257

சனி, 28 ஜனவரி, 2012

பறவைகள் வீழ்ந்த நிலம்

தீபச்செல்வன்

நான் எதுவரை நிலம் பற்றியே பாடிக் கொண்டிருப்பேன்?
நிலத்திலிருந்து பிடுங்கி எறியப்படும்வரை
குழந்தைகளின் கைகளில் நிலத்தை 
உறுதியாய் பிடித்து வைத்திருக்கும்வரை
நான் நிலம் பற்றி பாடிக் கொண்டிருப்பேன்
பறவைகளின் காட்டில் குழந்தைகள்
நிலத்தின் வார்த்தைகளை ஒளித்து வைத்திருந்தனர்.

இன்று அந்த நிலத்தில் பறவைகள்
துடித்து விழ அந்நியக் குடிகள்
நிலமூன்றிக் கொண்டன
வெட்டிக் காயப்படுத்தப்பட்டு
நலிந்த மரங்களில் இன்னும் ஏதேனும் பறவைகள்
தொங்கிக் கொண்டிருக்கின்றனவா 
என்று தேடும் குழந்தைகள் 
நிலம் அள்ளப்பட்ட அரசியல்க் குழிகளில் வீழ்கின்றனர்.

நிலத்திலிருந்து நாம் துரத்தப்படுகையில்
எல்லாப் பறவைகளும் வீழந்த
நிலத்தின் இருதயத்தைத் தின்னும்
அந்நியக் குடிகள் விழுங்கினர் கடல்வெளிகளை
பொறியாய் நுழைந்த
சிங்கங்கள் நிலத்தை வேட்டையாடின.

மணல்வெளியில் புதிதாய் பதியும்
கால்கள் எழுதும் கதைகளால் 
சிறுவன் குளத்து மீன்கள் துடித்திறந்தன
அந்நியப் பெயர்களால்
கொல்லப்பட்ட கிராமங்களில் 
புத்தரின் ஞானம் அமைதியைத் தின்கிறது.

எல்லாம் பட்டு வீழந்த பிறகும்
குழந்தைகள் நிலத்தின் பாடல்களை 
பாடிக் கொண்டிருக்கின்றனர்
குழந்தைகள் நிலத்தை இழந்ததை
நான் எப்படி பாடாமலிருக்க முடியும்?

நன்றி - புது எழுத்து மார்கழி 2011

புதன், 25 ஜனவரி, 2012

சிறுவர்கள் பீரங்கிகளை முறிப்பார்கள்

சிறுவர்களுக்கு எதிராக நிற்கின்றன
பீரங்கிகளும் துப்பாக்கிகளும் விமானங்களும்

துப்பாக்கிகள் என்ன செய்யப்போகின்றன?
ஒன்றில் அவை சோர்வடைந்து சரிந்து போகும்
அல்லது கூர்மையடைந்து முகங்களைக் கிழிக்கும்

நீதான் புரட்சியை ஆயுதமாக்குபடி நிர்பந்திக்கறாய்
எதிர்ப்பை கிளப்பும் களத்தை திறக்கிறாய்
புரட்சியையும் எதிர்ப்பையும் எப்படிக் கொல்வது?
சனங்களை அடக்கும்பொழுது
குருதியில் புரட்சி பெருக்கெடுக்கிறது

வாழ்வின் இனிய பாடலை
நாம் பாடிக் கொண்டிருக்கும் நிலத்தைவிட்டு
அந்நியப்படைகளே
எப்பொழுது வெளியேறிச் செல்வீர்கள்?
வாழ்வை மூடியிருக்கும்
உங்கள் அதிகார நிழலை
எப்பொழுது விலக்கிக் கொள்வீர்கள்?

முதியவர்கள் சோர்வடைந்து
முடங்கியபடி காலத்தை கடக்கும் பொழுது
சிறுவர்கள் வளர்ந்து
நீங்கள் கொண்டு வந்த துப்பாக்கிகளையும்
பீரங்கிகளையும் முறித்துப் போடுவார்கள்

இந்தத் நிலத்தின் எல்லாத் தலைமுறைகளும்
நீயே யுத்தத்தை கையளிக்கிறாய்

எங்கள் சிறுவர்கள்மீது
துப்பாக்கிகளை நீட்டும்பொழுதில்
நடுநடுங்கித் துடிப்பார்கள் மூதாதையர்கள்

எனினும் சிறுவர்களுக்கு எதிராக
பீரங்கியை இந்நிலத்திற்கு
நீங்கள் கொண்டு வரும்பொழுது
கிளர்ந் தெழும் எங்கள் சிறுவர்கள்
முறித்துப் போடுவார்கள் அதை.

தீபச்செல்வன்

நன்றி : புது எழுத்து மார்கழி 2011

வன்னி வளைப்புப் பற்றிய கவிதைகள்

# ஆட்களை இழந்த வெளி
# அடருகிற இரவொன்றில் தின்னப்பட்ட கடல்
# பதுங்குகுழியைவிட்டு அலைகிற வெளி
# பந்துகள் கொட்டுகிற காணி
# மணலில் தீருகிற துயர்
# நிலம் பெயர்ந்தலைய வந்துவிடு
# பயமுறுத்துகிற இருள்
# சுற்றி வளைக்கப்பட்ட பாதுகாப்பு வலயம்
# ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்
# எலும்புக்கூடுகளை வெளியேற்றுவதற்கான வழி
# கடல் நுழைகிற மணற் பதுங்குகுழி
# அறிவிக்கப்பட்ட வலயத்தில் நிறைகிற சுடுமணல்
# தாகம் பாய்கிற நதிக்கான கனவு
# யாருமற்ற நகரின் தெருவினை மிதிக்கிற கொடு நிழல்
# சொற்ப எண்ணிக்கையாக்கப்பட்ட குழந்தைகள்
# சுற்றி வளைக்கப்பட்ட கிராமத்தின் சரணடைகிற பொதிகள்
# மரண நெடில் வெளி இரவு
# கைப்பற்றப்பட்ட நகரம் பற்றியெழுகிற பெருந்துயர்
# மற்றொரு நகரத்தை நோக்கி நடைபெறுகிற படையெடுப்புகள்
# மலைப்பாம்பு காப்பாற்றப்போகிற முட்டைகள்
# மாதா அழைத்து வைத்திருந்த மாடுகள்
# நீர் அறிந்திருக்காத சிலுவைகள்
# தேங்காய்களை தின்று அசைகிற கொடி
#முற்றுகையிடப்பட்ட நகரத்தின் பதுங்குகுழி
#மனிதாபிமானத்திற்கான படைநடவடிக்கை
#அண்மையில் மிதிபடுகிற கடல்
#மரங்கள் பின்வாங்குகிற இன்றிரவு
#நம்மைத் தொடருகிற போர்
#குழந்தைகளை இழுத்துச் செல்லும் பாம்புகள்
#அழிப்பதற்கு பிரகடனம் செய்யப்பட்ட நகரத்தின் கதிரைகள...
#அவகாசத்திற்குப் பிறகான படைநடவடிக்கை.
#பெரிய நகரை தின்கிற படைகள்
#போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்
#போர் தொடங்கும் குழந்தைகளின் கனவுகள்

வலைப்பதிவு பட்டியல்

Related Posts Plugin for WordPress, Blogger...