Blogger இயக்குவது.
| புதிய நூல்கள்: பயங்கரவாதி - டிஸ்வரி புக்பேலஸ் | நான் ஸ்ரீலங்கன் இல்லை - யாவரும் பப்ளிசர்ஸ் | நடுகல் டிஸ்வரிபுக் பேலஸ் | deebachelvan@gmail.com | 0772487257

செவ்வாய், 6 டிசம்பர், 2011

கொல்ல முடியாத நாட்டில் குழந்தைகள் பிறக்கிறார்கள்


நேற்றும் சில குழந்தைகள் பிறந்தனர்
அவர்கள் அழுகிறார்கள்
அவர்கள் பெரிதாய் சத்தத்தோடு சிரிக்கிறார்கள்
குழந்தைகள் வளர்ந்து கொண்டிருக்கிறார்கள்
குழந்தைகள் தங்கள் கண்களால்
இந்த நாட்டைப் பார்க்கிறார்கள்
கைகளை அசைத்து கால்களால்
நடக்கத் தொடங்குகிறார்கள்
லட்சம்பேர் இறந்த பிறகும்
கொல்லப்பட முடியாத நாட்டில்
அங்கங்கள் பறிக்கப்பட்டவர்களின் குழந்தைகள்
ஆரோக்கியமாகப் பிறக்கின்றனர்
இந்தக் குழந்தைகள்
இப்பொழுதே பேசத் தொடங்குகிறார்கள்
நான் கேட்காத இன்னும் பல்லாயிரம் கேள்விகளை
அவர்கள் கேட்பார்கள்
நான் காணாத வாழ்வின் பகுதிகளை
அவர்கள் காண்பார்கள்
அவர்கள் சுகந்திரத்தைப் பெறுவார்கள்
ஏனெனில் கொல்லப்பட முடியாத
நாட்டின் செடிகளாக அவர்கள் பிறந்திருக்கிறார்கள்.

தீபச்செல்வன்

நன்றி : கல்கி

4 கருத்துகள்:

பேனாமனோகரன் சொன்னது…

திருத்தி எழுத முடியாத தீர்ப்பினை எழுதி இருக்கிறது உங்கள் பேனா.பேனாவின் பெருமிதமான வாழ்த்துக்கள்.

Pena சொன்னது…

திருத்தி எழுத முடியாத தீர்ப்பினை எழுதி இருக்கிறத் உங்கள் பேனா.அதற்கு பேனாவின் பெருமிதமான் வாழ்த்துக்கள்.

leo சொன்னது…

very good.

http://leo-malar.blogspot.com/2011/12/04.html

கவிஞர்வாலிதாசன் சொன்னது…

ஆழ்ந்த மனதின் குமுறலின் சீறும் சயனைடுக்கோபம்

வன்னி வளைப்புப் பற்றிய கவிதைகள்

# ஆட்களை இழந்த வெளி
# அடருகிற இரவொன்றில் தின்னப்பட்ட கடல்
# பதுங்குகுழியைவிட்டு அலைகிற வெளி
# பந்துகள் கொட்டுகிற காணி
# மணலில் தீருகிற துயர்
# நிலம் பெயர்ந்தலைய வந்துவிடு
# பயமுறுத்துகிற இருள்
# சுற்றி வளைக்கப்பட்ட பாதுகாப்பு வலயம்
# ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்
# எலும்புக்கூடுகளை வெளியேற்றுவதற்கான வழி
# கடல் நுழைகிற மணற் பதுங்குகுழி
# அறிவிக்கப்பட்ட வலயத்தில் நிறைகிற சுடுமணல்
# தாகம் பாய்கிற நதிக்கான கனவு
# யாருமற்ற நகரின் தெருவினை மிதிக்கிற கொடு நிழல்
# சொற்ப எண்ணிக்கையாக்கப்பட்ட குழந்தைகள்
# சுற்றி வளைக்கப்பட்ட கிராமத்தின் சரணடைகிற பொதிகள்
# மரண நெடில் வெளி இரவு
# கைப்பற்றப்பட்ட நகரம் பற்றியெழுகிற பெருந்துயர்
# மற்றொரு நகரத்தை நோக்கி நடைபெறுகிற படையெடுப்புகள்
# மலைப்பாம்பு காப்பாற்றப்போகிற முட்டைகள்
# மாதா அழைத்து வைத்திருந்த மாடுகள்
# நீர் அறிந்திருக்காத சிலுவைகள்
# தேங்காய்களை தின்று அசைகிற கொடி
#முற்றுகையிடப்பட்ட நகரத்தின் பதுங்குகுழி
#மனிதாபிமானத்திற்கான படைநடவடிக்கை
#அண்மையில் மிதிபடுகிற கடல்
#மரங்கள் பின்வாங்குகிற இன்றிரவு
#நம்மைத் தொடருகிற போர்
#குழந்தைகளை இழுத்துச் செல்லும் பாம்புகள்
#அழிப்பதற்கு பிரகடனம் செய்யப்பட்ட நகரத்தின் கதிரைகள...
#அவகாசத்திற்குப் பிறகான படைநடவடிக்கை.
#பெரிய நகரை தின்கிற படைகள்
#போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்
#போர் தொடங்கும் குழந்தைகளின் கனவுகள்

வலைப்பதிவு பட்டியல்

Related Posts Plugin for WordPress, Blogger...