Blogger இயக்குவது.
| புதிய நூல்கள்: பயங்கரவாதி - டிஸ்வரி புக்பேலஸ் | நான் ஸ்ரீலங்கன் இல்லை - யாவரும் பப்ளிசர்ஸ் | நடுகல் டிஸ்வரிபுக் பேலஸ் | deebachelvan@gmail.com | 0772487257

வியாழன், 27 அக்டோபர், 2011

குழந்தைகளைத் தின்னும் பூதங்கள்

அச்சத்தை தவிர எதையும் அறியாத
குழந்தைகள் படிக்கும் கதைகளை கழித்துக்கொண்டு
கொடும் பூதங்கள் வந்து வாழ்வை உலுப்புகின்றன
இரத்தம் குடிக்கும் பூதங்கள்
குழந்தைகளுக்குப் பாலூட்டும் மார்புகளை
அறுத்து விழுங்குகின்றன
பூதங்கள் நிலத்தோடு
குழந்தைகளை தேடி விழுங்குகின்றன.

இருளைக் கண்டஞ்சிய குழந்தைகளின்
கண்களை பிடுங்கிச் செல்ல
இராணுவ உடைகளையும்
சிவப்புத் தோல்பட்டியையும் மறைத்து
குரூர உடைகளை அணிந்து
கூரிய கத்திபொருத்தப்பட்ட நகங்களுடன்
பூதங்கள் நிலத்திற்குள் நுழைந்து மிதந்தன.

பூதங்களை குறித்து குழந்தைகள் அறிந்திருக்காத
செயல்களினால் இன்னுமின்னும் மிரட்டப்படுகின்றனர்
சுவர்கரையோரமாகவும் அதன் பின்பக்கமாகவும்
கதவிற்குப் பின்னாலும் பூதங்கள் மறைந்திருந்து
வீடுகளை தின்பதாய் குழந்தைகள் அஞ்சுகின்றனர்
கிணற்றுள்குள் தங்கி வெறியேறும் பூதங்களால்
பயத்தோடும் பசியோடும்
பொழுதுகளை குழந்தைகள் கழிக்கின்றனர்.

அதிகாரம் கொளுத்து நடனமாடும்
கதிரைகளிலிருந்து கிளம்பும் பூதங்கள்
நாம் பார்த்திருக்க கிளம்பி மறைகின்றன
பேய் ஆள பூதங்கள் அலைகின்றன
ப+தங்கள் ஆள பேய்கள் அலைகின்றன.

பூதங்கள் பெரும்பசியோடு அலையும் தெருவில்
நசிந்து கிடக்கின்றன குரல்வளைகள்
இரத்தத்தோடு வார்த்தைகளையும் தின்னும்
பூதங்கள் மரங்களில் ஏறி ஒளிந்து
நிலத்தோடு எல்லாவற்றையும் உலுப்பியசைக்கின்றன
எந்தத் தாய்மார்களும் குழந்தைகளும்
பார்த்திராததும் கதைகளில் படித்திராததுமான பூதங்களை
இந்தக் குழந்தைகள் எதிர்கொள்ளச் சபிக்கப்பட்டுள்ளனர்.
_____________________
18.08.2011

தீபச்செல்வன்

(நன்றி : தீராநதி அக்டோபர் 2011)

0 கருத்துகள்:

வன்னி வளைப்புப் பற்றிய கவிதைகள்

# ஆட்களை இழந்த வெளி
# அடருகிற இரவொன்றில் தின்னப்பட்ட கடல்
# பதுங்குகுழியைவிட்டு அலைகிற வெளி
# பந்துகள் கொட்டுகிற காணி
# மணலில் தீருகிற துயர்
# நிலம் பெயர்ந்தலைய வந்துவிடு
# பயமுறுத்துகிற இருள்
# சுற்றி வளைக்கப்பட்ட பாதுகாப்பு வலயம்
# ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்
# எலும்புக்கூடுகளை வெளியேற்றுவதற்கான வழி
# கடல் நுழைகிற மணற் பதுங்குகுழி
# அறிவிக்கப்பட்ட வலயத்தில் நிறைகிற சுடுமணல்
# தாகம் பாய்கிற நதிக்கான கனவு
# யாருமற்ற நகரின் தெருவினை மிதிக்கிற கொடு நிழல்
# சொற்ப எண்ணிக்கையாக்கப்பட்ட குழந்தைகள்
# சுற்றி வளைக்கப்பட்ட கிராமத்தின் சரணடைகிற பொதிகள்
# மரண நெடில் வெளி இரவு
# கைப்பற்றப்பட்ட நகரம் பற்றியெழுகிற பெருந்துயர்
# மற்றொரு நகரத்தை நோக்கி நடைபெறுகிற படையெடுப்புகள்
# மலைப்பாம்பு காப்பாற்றப்போகிற முட்டைகள்
# மாதா அழைத்து வைத்திருந்த மாடுகள்
# நீர் அறிந்திருக்காத சிலுவைகள்
# தேங்காய்களை தின்று அசைகிற கொடி
#முற்றுகையிடப்பட்ட நகரத்தின் பதுங்குகுழி
#மனிதாபிமானத்திற்கான படைநடவடிக்கை
#அண்மையில் மிதிபடுகிற கடல்
#மரங்கள் பின்வாங்குகிற இன்றிரவு
#நம்மைத் தொடருகிற போர்
#குழந்தைகளை இழுத்துச் செல்லும் பாம்புகள்
#அழிப்பதற்கு பிரகடனம் செய்யப்பட்ட நகரத்தின் கதிரைகள...
#அவகாசத்திற்குப் பிறகான படைநடவடிக்கை.
#பெரிய நகரை தின்கிற படைகள்
#போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்
#போர் தொடங்கும் குழந்தைகளின் கனவுகள்

வலைப்பதிவு பட்டியல்

Related Posts Plugin for WordPress, Blogger...