Blogger இயக்குவது.
| புதிய நூல்கள்: பயங்கரவாதி - டிஸ்வரி புக்பேலஸ் | நான் ஸ்ரீலங்கன் இல்லை - யாவரும் பப்ளிசர்ஸ் | நடுகல் டிஸ்வரிபுக் பேலஸ் | deebachelvan@gmail.com | 0772487257

சனி, 15 அக்டோபர், 2011

தீப்பூமி

கொலைகளுக்கு எதிராய்
தீப் பிழம்புகளைத் தின்று
செங்கொடி உயிரில் உக்கிரம் கொண்டாடினாள்
அதிகாரம் மூடியிருந்த பொழுது
எரிக்க முடியாத பூமியில் கலந்து விளைந்த
அதிகாரத்தை எரிக்க தன்னை எரித்தாள்
அன்றும் ஒருத்தி  கொலைக்கெதிராய்
பெரும் நகரத்தோடு எரிந்தாள்
செங்கோல்கள் உயிர்களை
குடிக்கும் பொழுதெல்லாம்
பூமியை காக்க எரித்தாடுகிறாள்
கொலைக்கத்திகள் எல்லோரையும் நோக்கின
உயிர் குடிக்கும் கயிறுகள்
எல்லோரையும் சுற்றின
இனம் திண்ணும்
வாய்கள் பெரும்பசியோடு நீண்டன
அரசர்கள் உயிரைக் கொல்லும் தீர்ப்பெழுதினர்
கருணையை நிராகரித்து
மரணத்தை பிரகடனம் செய்தனர்
கொதித்த நிலத்திற்காய்
செங்கொடி உடல்த் தீமரமாய்
எரிந்து பரவி கிளைகள் உலுப்பினாள்
சலங்கைகள் வெடித்துச் சிதறுண்டன
பறைகள் அதிர முழங்கின
பூமிக்காய் அவள் தீயில் நுழைந்த பொழுது
பூமி தீப்பிடித்தெரிந்தது.
_______________________
செங்கொடிக்கு

தீபச்செல்வன்

1 கருத்துகள்:

அம்பலத்தார் சொன்னது…

நல்லதொரு உணர்வு பூர்வமான கவிதை. செங்கொடியன் தியாகத்திற்கு தலை வணங்குகிறேன். தவறுக்கெதிராக உயிர்கொடை செய்வதைவிட உயிருடன் இருந்து இறுதிவரை போராடுவது நல்லதென நினைக்கிறேன்

வன்னி வளைப்புப் பற்றிய கவிதைகள்

# ஆட்களை இழந்த வெளி
# அடருகிற இரவொன்றில் தின்னப்பட்ட கடல்
# பதுங்குகுழியைவிட்டு அலைகிற வெளி
# பந்துகள் கொட்டுகிற காணி
# மணலில் தீருகிற துயர்
# நிலம் பெயர்ந்தலைய வந்துவிடு
# பயமுறுத்துகிற இருள்
# சுற்றி வளைக்கப்பட்ட பாதுகாப்பு வலயம்
# ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்
# எலும்புக்கூடுகளை வெளியேற்றுவதற்கான வழி
# கடல் நுழைகிற மணற் பதுங்குகுழி
# அறிவிக்கப்பட்ட வலயத்தில் நிறைகிற சுடுமணல்
# தாகம் பாய்கிற நதிக்கான கனவு
# யாருமற்ற நகரின் தெருவினை மிதிக்கிற கொடு நிழல்
# சொற்ப எண்ணிக்கையாக்கப்பட்ட குழந்தைகள்
# சுற்றி வளைக்கப்பட்ட கிராமத்தின் சரணடைகிற பொதிகள்
# மரண நெடில் வெளி இரவு
# கைப்பற்றப்பட்ட நகரம் பற்றியெழுகிற பெருந்துயர்
# மற்றொரு நகரத்தை நோக்கி நடைபெறுகிற படையெடுப்புகள்
# மலைப்பாம்பு காப்பாற்றப்போகிற முட்டைகள்
# மாதா அழைத்து வைத்திருந்த மாடுகள்
# நீர் அறிந்திருக்காத சிலுவைகள்
# தேங்காய்களை தின்று அசைகிற கொடி
#முற்றுகையிடப்பட்ட நகரத்தின் பதுங்குகுழி
#மனிதாபிமானத்திற்கான படைநடவடிக்கை
#அண்மையில் மிதிபடுகிற கடல்
#மரங்கள் பின்வாங்குகிற இன்றிரவு
#நம்மைத் தொடருகிற போர்
#குழந்தைகளை இழுத்துச் செல்லும் பாம்புகள்
#அழிப்பதற்கு பிரகடனம் செய்யப்பட்ட நகரத்தின் கதிரைகள...
#அவகாசத்திற்குப் பிறகான படைநடவடிக்கை.
#பெரிய நகரை தின்கிற படைகள்
#போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்
#போர் தொடங்கும் குழந்தைகளின் கனவுகள்

வலைப்பதிவு பட்டியல்

Related Posts Plugin for WordPress, Blogger...