Blogger இயக்குவது.
| புதிய நூல்கள்: பயங்கரவாதி - டிஸ்வரி புக்பேலஸ் | நான் ஸ்ரீலங்கன் இல்லை - யாவரும் பப்ளிசர்ஸ் | நடுகல் டிஸ்வரிபுக் பேலஸ் | deebachelvan@gmail.com | 0772487257

திங்கள், 3 அக்டோபர், 2011

இல்லாத அறை


உயிர்த்தெழாது வாடிய
குருத்தோலையை மட்டும் விட்டுச் செல்கிறேன்
சுவர்களில் பதுங்குமளவுக்கு விழுந்த
குழிகளில் எல்லாம்
என் கனவுகள் நிறைக்கப்பட்டிருக்கின்றன
எப்பொழுதுமில்லாமல்
பல்லிகள் விழுந்து வெருண்டோடுகின்றன
வேண்டுமானால் விட்டுச் செல்கிறேன்
தேனீர் காயாத கோப்பைகளையும்
வாடிய பலகாரத் துண்டுகளையும்
கனவைத் துரத்தும் பயங்கரங்கள்
கொண்டாடிப் பருகுகின்றன என் காயாத குருதியை
கிழிக்கப்பட்ட கவிதைகளை பல்லிகள் சுமக்கின்றன
காயும் சவற்காரக் குறையை
குழாயில் கசியும் நீர்த்துளிகள் ஈரமாக்கின்றன
இல்லாத அறையில்
நான் திரிகிறேன்
நினைவுகள் கழற்றப்பட்ட சுவரில்
பிரியாத பாதிச் சித்திரத்தில்
சாம்பல் கொட்டுகிறது
அச்சுறுத்தல்களால் செய்யப்பட்ட
அறையில் இருந்து
துப்பாக்கிக் குண்டுகளால் செய்யப்பட்ட
கொடும் வெளிக்குச் செல்கிறது உயிர்த்தெழாத பறவை
இரத்தம் சொட்டும் கனவுகளால்
ஈரமாகும் என் முகத்தை துடைக்க யாருமில்லை!
_________________________
30.05.2011

நன்றி : மறுபாதி 

0 கருத்துகள்:

வன்னி வளைப்புப் பற்றிய கவிதைகள்

# ஆட்களை இழந்த வெளி
# அடருகிற இரவொன்றில் தின்னப்பட்ட கடல்
# பதுங்குகுழியைவிட்டு அலைகிற வெளி
# பந்துகள் கொட்டுகிற காணி
# மணலில் தீருகிற துயர்
# நிலம் பெயர்ந்தலைய வந்துவிடு
# பயமுறுத்துகிற இருள்
# சுற்றி வளைக்கப்பட்ட பாதுகாப்பு வலயம்
# ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்
# எலும்புக்கூடுகளை வெளியேற்றுவதற்கான வழி
# கடல் நுழைகிற மணற் பதுங்குகுழி
# அறிவிக்கப்பட்ட வலயத்தில் நிறைகிற சுடுமணல்
# தாகம் பாய்கிற நதிக்கான கனவு
# யாருமற்ற நகரின் தெருவினை மிதிக்கிற கொடு நிழல்
# சொற்ப எண்ணிக்கையாக்கப்பட்ட குழந்தைகள்
# சுற்றி வளைக்கப்பட்ட கிராமத்தின் சரணடைகிற பொதிகள்
# மரண நெடில் வெளி இரவு
# கைப்பற்றப்பட்ட நகரம் பற்றியெழுகிற பெருந்துயர்
# மற்றொரு நகரத்தை நோக்கி நடைபெறுகிற படையெடுப்புகள்
# மலைப்பாம்பு காப்பாற்றப்போகிற முட்டைகள்
# மாதா அழைத்து வைத்திருந்த மாடுகள்
# நீர் அறிந்திருக்காத சிலுவைகள்
# தேங்காய்களை தின்று அசைகிற கொடி
#முற்றுகையிடப்பட்ட நகரத்தின் பதுங்குகுழி
#மனிதாபிமானத்திற்கான படைநடவடிக்கை
#அண்மையில் மிதிபடுகிற கடல்
#மரங்கள் பின்வாங்குகிற இன்றிரவு
#நம்மைத் தொடருகிற போர்
#குழந்தைகளை இழுத்துச் செல்லும் பாம்புகள்
#அழிப்பதற்கு பிரகடனம் செய்யப்பட்ட நகரத்தின் கதிரைகள...
#அவகாசத்திற்குப் பிறகான படைநடவடிக்கை.
#பெரிய நகரை தின்கிற படைகள்
#போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்
#போர் தொடங்கும் குழந்தைகளின் கனவுகள்

வலைப்பதிவு பட்டியல்

Related Posts Plugin for WordPress, Blogger...