இயக்குவது Blogger.
|'ஈழத்து மக்களும் அவர்களது கனவுமே எனது ஆதர்சம் - தீபச்செல்வன் ' ஷோபாசக்திக்கு வழங்கிய நேர்காணல் வெளியாகியிருக்கிறது|2012 ஜனவரியில் நடந்த 34வது சென்னைப் புத்தகக் கண்காட்சியில் தோழமை பதிப்பக வெளியிடாக ஈழம் போர் நிலம், ஆழி பதிப்பக வெளியிடாக மரணத்தில் துளிர்க்கும் கனவு புத்தகங்கள் வெளியாகியுள்ளன - , தொடர்புகளுக்கு deebachelvan@gmail.com

சனி, 24 செப்டம்பர், 2011

பூமிக்கு கொண்டு வரப்பட்ட பூதங்கள்

தீபச்செல்வன்

பூதங்களின் காலடியில் கரையும் வாழ்வில்
நாம் சூரியனை இழந்து
இருள்தேசத்து வாசிகளானோம்
ஒன்றுமில்லாது அழிந்த பொழுதும்
பூதங்கள் விடுவதாயில்லை
கால்களைப் பிடித்து இழுத்து வீழ்த்துகின்றன.

பூதங்கள் நடத்திய போரில்
நாம் தோற்றுப் போயிருந்த பொழுதும்
அவைகளின் பசி அடங்குவதாயில்லை
இரத்தமும் சதைகளும்
பிணங்களாய் நாறி விழைந்த களத்தில்
பூதங்கள் தின்றாடிய பொழுதும்
அவைகளின் பசி தீருவதாயில்லை
எங்களை பலியிட்டுத் தீர்க்க
பூதங்கள் எங்கள் பூமிக்கு கொண்டு வரப்பட்டன

பூதங்களை நீ பார்த்தருக்கிறாயா?
கைகளில் உள்ள கிண்ணங்களில்
குழந்தைகளின் பிடுங்கப்பட்ட கண்களை
நிரப்பித் தின்று கொண்டிருக்கின்றன.

பூதங்கள் கழுத்தில் சிவப்புப் பட்டியையோ
உடலில் இராணுவச் சீருடையையோ அணிந்து கொண்டு
பூத உடைகளைப் போர்த்தியிருக்கின்றன
நாம் குழந்தைகளின் கண்களை
பொத்தியிருந்த பொழுதுகளில்
எங்கள் மார்பை கிழித்து அவை குருதியை உறிஞ்சின.

எலும்புகளில் வடியும் குருதியை
பருகி அழிப்பின் போதையுடன்
அலையும் பூதங்கள்
சாலைகளில் இடித்தழிக்கப்பட்ட கட்டிடங்களில்
தொங்கிக் கொண்டு நிற்கின்றன
நமது தெருக்களில் வண்டிகளில் செல்லுகின்றன
அழிந்த தேசத்திலும்
நாம் வாழ்வை விடுவதாயில்லை என்ற பொழுது
பூதங்கள் எங்களை விடுவதாயில்லை
என்று துரத்திக் கொண்டிருக்கின்றன.

பூதங்கள் கொண்டு வரப்பட்ட எங்கள் பூமியில்
ஏதுவுமில்லை
எல்லாம் உறிஞ்சப்பட்ட வெறும் கூடுகளிருக்கின்றன
குழந்தைகள் இழந்தவைகளைப் பெறும்
காலத்தில் வாழ்வார்களா?
எங்கள் பூமிக்கு சூரியன் எப்பொழுது வரும்?
____________________________
10.09.2011

0 கருத்துகள்:

வன்னி வளைப்புப் பற்றிய கவிதைகள்

# ஆட்களை இழந்த வெளி
# அடருகிற இரவொன்றில் தின்னப்பட்ட கடல்
# பதுங்குகுழியைவிட்டு அலைகிற வெளி
# பந்துகள் கொட்டுகிற காணி
# மணலில் தீருகிற துயர்
# நிலம் பெயர்ந்தலைய வந்துவிடு
# பயமுறுத்துகிற இருள்
# சுற்றி வளைக்கப்பட்ட பாதுகாப்பு வலயம்
# ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்
# எலும்புக்கூடுகளை வெளியேற்றுவதற்கான வழி
# கடல் நுழைகிற மணற் பதுங்குகுழி
# அறிவிக்கப்பட்ட வலயத்தில் நிறைகிற சுடுமணல்
# தாகம் பாய்கிற நதிக்கான கனவு
# யாருமற்ற நகரின் தெருவினை மிதிக்கிற கொடு நிழல்
# சொற்ப எண்ணிக்கையாக்கப்பட்ட குழந்தைகள்
# சுற்றி வளைக்கப்பட்ட கிராமத்தின் சரணடைகிற பொதிகள்
# மரண நெடில் வெளி இரவு
# கைப்பற்றப்பட்ட நகரம் பற்றியெழுகிற பெருந்துயர்
# மற்றொரு நகரத்தை நோக்கி நடைபெறுகிற படையெடுப்புகள்
# மலைப்பாம்பு காப்பாற்றப்போகிற முட்டைகள்
# மாதா அழைத்து வைத்திருந்த மாடுகள்
# நீர் அறிந்திருக்காத சிலுவைகள்
# தேங்காய்களை தின்று அசைகிற கொடி
#முற்றுகையிடப்பட்ட நகரத்தின் பதுங்குகுழி
#மனிதாபிமானத்திற்கான படைநடவடிக்கை
#அண்மையில் மிதிபடுகிற கடல்
#மரங்கள் பின்வாங்குகிற இன்றிரவு
#நம்மைத் தொடருகிற போர்
#குழந்தைகளை இழுத்துச் செல்லும் பாம்புகள்
#அழிப்பதற்கு பிரகடனம் செய்யப்பட்ட நகரத்தின் கதிரைகள...
#அவகாசத்திற்குப் பிறகான படைநடவடிக்கை.
#பெரிய நகரை தின்கிற படைகள்
#போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்
#போர் தொடங்கும் குழந்தைகளின் கனவுகள்

முகப்பு

.

வலைப்பதிவு பட்டியல்

பக்கங்கள்