Blogger இயக்குவது.
| புதிய நூல்கள்: பயங்கரவாதி - டிஸ்வரி புக்பேலஸ் | நான் ஸ்ரீலங்கன் இல்லை - யாவரும் பப்ளிசர்ஸ் | நடுகல் டிஸ்வரிபுக் பேலஸ் | deebachelvan@gmail.com | 0772487257

சனி, 9 ஜூலை, 2011

தமிழ்ச்செல்வியின் யாருமற்ற நிலம்

தீபச்செல்வன்

தமிழ்ச்செல்விக்கு ஒரு கூடாரம் இருக்கிறது
இழந்த வாய்க்கால்களையும் மணல்தரைகளையும்
அவள் திரும்பிப்பார்ப்பதில்லை
தெருக்களில் அழியாத நினைவுகள் வாடியிருப்பதையும்
அவள் பார்ப்பதில்லை
யாரிடமும் கருணையையும்
அரவணைப்பையும் எதிர்பார்ப்பதில்லை
தமிழ்ச்செல்விக்கு முன்பு அம்மா இருந்தார்.

தமிழ்ச்செல்விக்கு ஒரு குடும்பப்பதிவு அட்டை இருக்கிறது
நிவாரணங்களுக்காக அவள் முண்டியடிப்பதில்லை
அவளுக்காக வழங்கப்படும்
அரிசிப் பொதிகளையும் சுமக்க முடிவதில்லை
அவளுக்காக வழங்கப்படும் தறப்பாலையும் தகரங்களையும்
கொண்டுவர முடிவதில்லை
தமிழ்ச்செல்விக்கு முன்பு அப்பா இருந்தார்.

தமிழ்ச்செல்விக்கு முன்பு இரண்டு சகோதரர்கள் இருந்தனர்
இப்பொழுது வீட்டின் பின்பக்கமாவே முற்றித்திலோ
அவள் விளையாட நினைப்பதில்லை
அவள் மண்வீடுகளை கட்டுவதில்லை
கண்கள் மூடித் திறக்கும் பொம்மைகளை விரும்புவதில்லை
தமிழ்ச்செல்வியிடம் முன்பு சில பொம்மைகள் இருந்தன.

தமிழ்ச்செல்விக்கு முன்பு ஒரு கடவுள் இருந்தது
இப்பொழுது அவளிடம் கோயில்களும் இல்லை
செய்வதற்கு எந்தப் பிரார்த்தனைகளும் இல்லை
கடாட்சங்களையும் திருவருள்களையும் அவள் அறிந்ததில்லை
தமிழ்ச்செல்வியிடம் முன்பு அழகான உலகம் இருந்தது
இப்பொழுது அவளிடம் யாருமற்ற நிலம் இருக்கிறது.
__________________________________

நன்றி - கல்கி 


புகைப்படம் : கொக்கிளாய், புளியமுனைக் குழந்தை

வன்னி வளைப்புப் பற்றிய கவிதைகள்

# ஆட்களை இழந்த வெளி
# அடருகிற இரவொன்றில் தின்னப்பட்ட கடல்
# பதுங்குகுழியைவிட்டு அலைகிற வெளி
# பந்துகள் கொட்டுகிற காணி
# மணலில் தீருகிற துயர்
# நிலம் பெயர்ந்தலைய வந்துவிடு
# பயமுறுத்துகிற இருள்
# சுற்றி வளைக்கப்பட்ட பாதுகாப்பு வலயம்
# ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்
# எலும்புக்கூடுகளை வெளியேற்றுவதற்கான வழி
# கடல் நுழைகிற மணற் பதுங்குகுழி
# அறிவிக்கப்பட்ட வலயத்தில் நிறைகிற சுடுமணல்
# தாகம் பாய்கிற நதிக்கான கனவு
# யாருமற்ற நகரின் தெருவினை மிதிக்கிற கொடு நிழல்
# சொற்ப எண்ணிக்கையாக்கப்பட்ட குழந்தைகள்
# சுற்றி வளைக்கப்பட்ட கிராமத்தின் சரணடைகிற பொதிகள்
# மரண நெடில் வெளி இரவு
# கைப்பற்றப்பட்ட நகரம் பற்றியெழுகிற பெருந்துயர்
# மற்றொரு நகரத்தை நோக்கி நடைபெறுகிற படையெடுப்புகள்
# மலைப்பாம்பு காப்பாற்றப்போகிற முட்டைகள்
# மாதா அழைத்து வைத்திருந்த மாடுகள்
# நீர் அறிந்திருக்காத சிலுவைகள்
# தேங்காய்களை தின்று அசைகிற கொடி
#முற்றுகையிடப்பட்ட நகரத்தின் பதுங்குகுழி
#மனிதாபிமானத்திற்கான படைநடவடிக்கை
#அண்மையில் மிதிபடுகிற கடல்
#மரங்கள் பின்வாங்குகிற இன்றிரவு
#நம்மைத் தொடருகிற போர்
#குழந்தைகளை இழுத்துச் செல்லும் பாம்புகள்
#அழிப்பதற்கு பிரகடனம் செய்யப்பட்ட நகரத்தின் கதிரைகள...
#அவகாசத்திற்குப் பிறகான படைநடவடிக்கை.
#பெரிய நகரை தின்கிற படைகள்
#போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்
#போர் தொடங்கும் குழந்தைகளின் கனவுகள்

வலைப்பதிவு பட்டியல்

Related Posts Plugin for WordPress, Blogger...