Blogger இயக்குவது.
| புதிய நூல்கள்: பயங்கரவாதி - டிஸ்வரி புக்பேலஸ் | நான் ஸ்ரீலங்கன் இல்லை - யாவரும் பப்ளிசர்ஸ் | நடுகல் டிஸ்வரிபுக் பேலஸ் | deebachelvan@gmail.com | 0772487257

சனி, 27 நவம்பர், 2010

எருக்கலை பூ நிலம்

எருக்கலை நிலத்தில் அலைந்து கொண்டிருக்கும்
குரல்களை நீ கேட்கிறயா?
அம்மா! என்றும் தாய் நிலமே!! என்றும்
இடிந்து மூடுண்டிருக்கும்
கல்லறைகளின் கற்குவியல்களிற்கிடையிலிருந்து எழும்
அடங்காத வார்த்தைகள் எனக்குக் கேட்கின்றன.

மாபெரும் சனங்களின் கண்ணீர் நிறைக்கப்பட்ட
விதை குழியில் இரத்தம் கசிகிறது
மரணமற்றவர்களையே நீ கொலை செய்தாய்
என்பது உனக்குத் தெரிகிறதா?
எலும்புத்துண்டுகள் மேலெழுந்து உடைந்து போயிருக்கிறது
சிதைக்கப்பட்ட எலும்புத்துண்டுகளையும்
கல்லறைத் துண்டுகளையும்
எங்களிடம் தந்து விடு
என்று தாய்மார்கள் மாரடிப்பது எனக்குக் கேட்கிறது.

எருக்கலைக் கன்றுகள் பெருகுகின்றன.

கைகளில் எந்த மரக்கன்றுகளும் இல்லை
தென்னை மரங்களோ கன்றுகளைத் தரும் நிலையில்லை
கன்றுகள் இறந்து கருகிக் கிடக்கும் நிலத்தில்
காயங்களுடன் நிற்கின்றன பெருமரங்கள்.

கல்லறைகள் பூப்பூக்கும் என்று நம்பியிருந்த தாய்மார்கள்
கல்லறைகள் உங்களால் கொல்லப்பட்டதை நம்ப மறுக்கின்றனர்
விளக்குகளால் சிவந்திருந்த நிலம்
இப்பொழுது கல்லறை உடைபட்டு கொலையுண்ட
குருதியால் சிவக்கிறது.

எருக்கலை பூக்களை சூடியபடி எனது காதலி
குழிகளில் இருந்து எழும்பி வருகிறாள்
எருக்கலை மரத்தின் வேர்களில்
சகோதரனோ முகத்தை பரவியிருக்கிறான்
குழந்தைகளோ எருக்கலை இலைகளை வாசிக்கின்றனர்
மண்ணுக்கடியில் அவர்கள் இருக்கிறார்கள் என்று
பிதட்டுகின்றன குழந்தையாகிய தாயின் வார்த்தைகள்.

இந்தப் பெருநிலம் எருக்கலைப் பூ நிலமாகிறது
நீ கேட்டாயா மண்ணுக்கடியில் திரிபவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று?
நீ பார்த்தாயா அவர்கள் என்ன கனவோடிருக்கிறார்கள் என்று?
வெட்ட வெட்ட கார்த்திகை பூக்கள் பூக்கின்றன.

உறங்காத உயிர்கள் படிய முடியாது அலைகின்றன
கொல்லப்பட்ட கல்லறைகளில் வெட்டப்பட்ட தீராக் கனவு வழிகிறது
சிதைக்கப்பட்ட துகள்களில்
ஏன் எருக்கலைகள் பூத்திருக்கின்றன?
நமது கனவைப்போல எருக்கலை செழித்தடருகிறது
__________________

புகைப்படம் : கிளிநொச்சியில் மாவீர்ர் துயிலும் இல்லம் அழிக்ப்பட்டிருக்கிறது


வைகாசி-கார்த்திகை 2010

2 கருத்துகள்:

சென்னை பித்தன் சொன்னது…

படித்தபின் மனம் கனக்கிறது.

அ.முத்து பிரகாஷ் சொன்னது…

உயிர்மையில் படித்து அழுதிருந்த கணங்கள் இங்கும் தொடர்கின்றன ....

வன்னி வளைப்புப் பற்றிய கவிதைகள்

# ஆட்களை இழந்த வெளி
# அடருகிற இரவொன்றில் தின்னப்பட்ட கடல்
# பதுங்குகுழியைவிட்டு அலைகிற வெளி
# பந்துகள் கொட்டுகிற காணி
# மணலில் தீருகிற துயர்
# நிலம் பெயர்ந்தலைய வந்துவிடு
# பயமுறுத்துகிற இருள்
# சுற்றி வளைக்கப்பட்ட பாதுகாப்பு வலயம்
# ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்
# எலும்புக்கூடுகளை வெளியேற்றுவதற்கான வழி
# கடல் நுழைகிற மணற் பதுங்குகுழி
# அறிவிக்கப்பட்ட வலயத்தில் நிறைகிற சுடுமணல்
# தாகம் பாய்கிற நதிக்கான கனவு
# யாருமற்ற நகரின் தெருவினை மிதிக்கிற கொடு நிழல்
# சொற்ப எண்ணிக்கையாக்கப்பட்ட குழந்தைகள்
# சுற்றி வளைக்கப்பட்ட கிராமத்தின் சரணடைகிற பொதிகள்
# மரண நெடில் வெளி இரவு
# கைப்பற்றப்பட்ட நகரம் பற்றியெழுகிற பெருந்துயர்
# மற்றொரு நகரத்தை நோக்கி நடைபெறுகிற படையெடுப்புகள்
# மலைப்பாம்பு காப்பாற்றப்போகிற முட்டைகள்
# மாதா அழைத்து வைத்திருந்த மாடுகள்
# நீர் அறிந்திருக்காத சிலுவைகள்
# தேங்காய்களை தின்று அசைகிற கொடி
#முற்றுகையிடப்பட்ட நகரத்தின் பதுங்குகுழி
#மனிதாபிமானத்திற்கான படைநடவடிக்கை
#அண்மையில் மிதிபடுகிற கடல்
#மரங்கள் பின்வாங்குகிற இன்றிரவு
#நம்மைத் தொடருகிற போர்
#குழந்தைகளை இழுத்துச் செல்லும் பாம்புகள்
#அழிப்பதற்கு பிரகடனம் செய்யப்பட்ட நகரத்தின் கதிரைகள...
#அவகாசத்திற்குப் பிறகான படைநடவடிக்கை.
#பெரிய நகரை தின்கிற படைகள்
#போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்
#போர் தொடங்கும் குழந்தைகளின் கனவுகள்

வலைப்பதிவு பட்டியல்

Related Posts Plugin for WordPress, Blogger...