Blogger இயக்குவது.
| புதிய நூல்கள்: பயங்கரவாதி - டிஸ்வரி புக்பேலஸ் | நான் ஸ்ரீலங்கன் இல்லை - யாவரும் பப்ளிசர்ஸ் | நடுகல் டிஸ்வரிபுக் பேலஸ் | deebachelvan@gmail.com | 0772487257

ஞாயிறு, 21 பிப்ரவரி, 2010

பூங்காவில் உறங்கிச் செல்லுகிற வீடற்ற குழந்தைகள்


o தீபச்செல்வன் ------------------------------------------------------------------

தூக்கம் கண்களை நிறைத்த பொழுது
குழந்தைகள் இலவசமாக அனுமதிக்கப்படும்
பூங்காவுக்கு வருகின்றனர்.
கைகளை இழந்த சிறுவன் செயற்கை கைகளுக்காய்
மீதித் துண்டங்களால் ஏந்திக்கொண்டிருக்கிறான்.
கைகள் பற்றிய கனவுடன் அலைந்துகொண்டிருந்தான்.
சிதைக்கப்பட்ட முகத்தையும்
பிரித்தெடுக்கப்பட்ட கைகளின் மிகுதிப் பகுதியையும்
புகைப்படங்களாக்கி
உதவி கோரிக்கொண்டிருக்கிறான்.
எல்லாமே
எட்டாத தூரத்திலிருந்து தூங்கிக்கொண்டிருக்கிறது.
அந்தச் சிறுவன்
கைளோடு தன் புன்னகையையும் இழந்துபோயிருந்தான்.


பள்ளிக்கூடம் சென்ற ஒன்பது வயதுச் சிறுமி
மிருகங்களாகிய
படைகளால் வன்புணரப்படுகையில்
இந்தக் குழந்தைகள் வழியிலிருக்கும் பூங்காவில்
உறங்கிக்கொண்டிருக்கின்றனர்.
இரத்தம் கொட்டிப் படிந்துகொண்டிருக்கிறது
குழந்தைகளின் புத்தகம்.
இந்தக் குழந்தைகள்
ஐஸ்பழத்தை பார்த்து ஆசைப்பட்டுக்கொண்டிருக்கின்றனர்.
இரத்தம் சொட்டச் சொட்ட
பழங்களை தின்றுகொண்டிருக்கிறது காலம்.
அவர்கள் தமக்குள்ளாகவே
எல்லா மீறல்களையும் பகிர்ந்துகொண்டிருக்கின்றனர்.

குழந்தைககளிடமிருந்து பறித்தெடுக்கப்பட்டு
மிகப்பெரிய ஏற்பாட்டில்
பழுதாக்கப்பட்ட அவர்களின் உலகத்தை
மிகப்பெரிய செலவில்
பிய்த்தெறியப்பட்ட குழந்தைகளின் கனவுகளை
வைத்துப் பிய்த்துக்கொண்டிருக்கின்றன
பூங்காவில் தொடர்ந்து கதையளந்துகொண்டிருக்கும் குரங்குகள்.
வீடற்ற குழந்தைகள்
மாலையானதும் எங்கோ திரும்பிக்கொண்டிருக்கின்றனர்.

வீடற்ற குழந்தைகள்
எனக்கருகில் அன்றைய பகல் முழுவதும்
விளையாடிக்கொண்டிருந்தனர்.
அவர்கள் வைத்திருந்த
புது உலகத்திற்கான புன்னகையாலும் நம்பிக்கையாலும்
ஈரத்தாலும் விண்ணப்பங்களை நிரப்பிக்கொண்டிருந்தனர்.

குழந்தைகள் ஒரு நாள் முழுவதும்
அமர்ந்திருந்து எழுதி அனுப்பிய
விண்ணப்பங்களை
பழுதடைந்த புகையிரத வீதியில்
அவசர அவசரமாக
கழிவுகளோடு கழிவுகளாக எறியப்பட்டிருக்கிறது.
குழந்தைகள் கொண்டு வந்த புத்தகங்களிலிருந்து
இரத்தம் கசிந்துகொண்டிருப்பதை
கண்டு துடிக்கத் தொடங்குகின்றர் தாய்மார்கள்.
குழந்தைகள் உறங்கிச் சென்ற
பூங்காவின் மரங்கள் வாடி விழுந்து கொண்டிருக்கின்றன.
_______________________
மாசி 2010

3 கருத்துகள்:

இளைய அப்துல்லாஹ் சொன்னது…

மனதை நெருடுகிறது

என்னைப்பற்றி... சொன்னது…

குழந்தைகள் உறங்கிச் சென்ற
பூங்காவின் மரங்கள் வாடி விழுந்து கொண்டிருக்கின்றன.
இந்த வரிகள் மிகவும் சிறப்பாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.
மருதம்-கேதீஸ்

கி.சார்லஸ் சொன்னது…

அருமையான வரிகளோடு புகைப்படமும் நன்றாக இருக்கிறது.வாழ்த்துக்கள்.
கி.சார்லஸ்
ckicharles@yahoo.com

வன்னி வளைப்புப் பற்றிய கவிதைகள்

# ஆட்களை இழந்த வெளி
# அடருகிற இரவொன்றில் தின்னப்பட்ட கடல்
# பதுங்குகுழியைவிட்டு அலைகிற வெளி
# பந்துகள் கொட்டுகிற காணி
# மணலில் தீருகிற துயர்
# நிலம் பெயர்ந்தலைய வந்துவிடு
# பயமுறுத்துகிற இருள்
# சுற்றி வளைக்கப்பட்ட பாதுகாப்பு வலயம்
# ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்
# எலும்புக்கூடுகளை வெளியேற்றுவதற்கான வழி
# கடல் நுழைகிற மணற் பதுங்குகுழி
# அறிவிக்கப்பட்ட வலயத்தில் நிறைகிற சுடுமணல்
# தாகம் பாய்கிற நதிக்கான கனவு
# யாருமற்ற நகரின் தெருவினை மிதிக்கிற கொடு நிழல்
# சொற்ப எண்ணிக்கையாக்கப்பட்ட குழந்தைகள்
# சுற்றி வளைக்கப்பட்ட கிராமத்தின் சரணடைகிற பொதிகள்
# மரண நெடில் வெளி இரவு
# கைப்பற்றப்பட்ட நகரம் பற்றியெழுகிற பெருந்துயர்
# மற்றொரு நகரத்தை நோக்கி நடைபெறுகிற படையெடுப்புகள்
# மலைப்பாம்பு காப்பாற்றப்போகிற முட்டைகள்
# மாதா அழைத்து வைத்திருந்த மாடுகள்
# நீர் அறிந்திருக்காத சிலுவைகள்
# தேங்காய்களை தின்று அசைகிற கொடி
#முற்றுகையிடப்பட்ட நகரத்தின் பதுங்குகுழி
#மனிதாபிமானத்திற்கான படைநடவடிக்கை
#அண்மையில் மிதிபடுகிற கடல்
#மரங்கள் பின்வாங்குகிற இன்றிரவு
#நம்மைத் தொடருகிற போர்
#குழந்தைகளை இழுத்துச் செல்லும் பாம்புகள்
#அழிப்பதற்கு பிரகடனம் செய்யப்பட்ட நகரத்தின் கதிரைகள...
#அவகாசத்திற்குப் பிறகான படைநடவடிக்கை.
#பெரிய நகரை தின்கிற படைகள்
#போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்
#போர் தொடங்கும் குழந்தைகளின் கனவுகள்

வலைப்பதிவு பட்டியல்

Related Posts Plugin for WordPress, Blogger...