Blogger இயக்குவது.
| புதிய நூல்கள்: பயங்கரவாதி - டிஸ்வரி புக்பேலஸ் | நான் ஸ்ரீலங்கன் இல்லை - யாவரும் பப்ளிசர்ஸ் | நடுகல் டிஸ்வரிபுக் பேலஸ் | deebachelvan@gmail.com | 0772487257

சனி, 13 பிப்ரவரி, 2010

ரொட்டித் துண்டுகளை அவள் வெறுக்கிறாள்

o தீபச்செல்வன் ------------------------------------------------------------------

ரொட்டிகளை தூக்கி வைத்திருந்த குழந்தைகளிடமிருந்து
அவற்றை விலக்கும்படி கூறுகிறாள்.
உணவுக்கோப்பையை தூக்கும்பொழுதெல்லாம்
ரொட்டித்துண்டுகளே அவளின் முன்னால் விழுகின்றன.
குருதியுறியதும் ஊறைந்ததுமான
ரொட்டித்துண்டுகள் ஏப்பொழும் மணந்தபடியிருக்கின்றன.

அந்தப் பதுங்குகுழியை குருதியுறியபடி
அன்றிரவு முழுக்க கழிக்க வேண்டியிருந்தது.
குழந்தைகள் ரொட்டித்துண்டுகளுக்கு
ஆசைப்பட்டிருக்காது விட்டிருக்கலாம் என சொல்லுகிறாள் தாய்.
வெளியில் யாரும் செல்லவில்லை.
பதுங்குகுழியின் இரண்டாவது படியிலேயே
அடுப்பு எரிந்துகொண்டிருந்தது.
குழந்தைகள் பட்டினியால் துடித்து
உணவுக்காக காத்திருந்தார்கள்.
அம்மா ஒவ்வொரு ரொட்டிகளாக தட்டிக்கொண்டிருந்தாள்.

குழந்தைகள் முதல் ரொட்டி சுடப்படடு முடிந்ததும்
ஓவ்வொருவருக்காக கிடைத்துக்கொண்டிருந்தது.
அம்மாவுக்கான ரொட்டியே
தகரத்தில் வேகிக்கொண்டிருந்தது.
மிக இலகுவாக அந்த ரொட்டியையும் தகரத்தையும்
அப்பாவையும்
ஷெல் வந்து கிழித்துவிட்டது.
அம்மாவின் ரொட்டியை ஷெல் தின்றுவிட்டது.
அப்பாவின் குருதியால்
நனைத்து ஊறியப்போயிருந்தது அன்றிரவு.

எல்லோருடைய ரொட்டிகளிலும் குருதி பட்டுத் தெறித்தது.
யாரும் அறியாத அவளின் பசியையும்
ரொட்டி பற்றிய கதைகளையும் குழந்தைகள்
கேட்டு அதிர்ந்து போயினர்.
பல்வேறு வடிவிலான கதைகளை ரொட்டித்துண்டுகளில்
வாசித்த குழந்தைகள்
அவற்றை உண்ணாமலே வைத்து பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.
__________________________
12.11.2009

நன்றி: ஆதவன்   பெப்ரவரி

1 கருத்துகள்:

என்னைப்பற்றி... சொன்னது…

குழந்தைகள் முதல் ரொட்டி சுடப்படடு முடிந்ததும்
ஓவ்வொருவருக்காக கிடைத்துக்கொண்டிருந்தது.
இங்கு சொல்லப்படவந்தவிடயம் தெளிவில்லாமல் குழம்பிப்போயிருப்பதாக உணர்கிறேன். தவிர கவிதை சிறப்பாகஇருக்கிறது.

வன்னி வளைப்புப் பற்றிய கவிதைகள்

# ஆட்களை இழந்த வெளி
# அடருகிற இரவொன்றில் தின்னப்பட்ட கடல்
# பதுங்குகுழியைவிட்டு அலைகிற வெளி
# பந்துகள் கொட்டுகிற காணி
# மணலில் தீருகிற துயர்
# நிலம் பெயர்ந்தலைய வந்துவிடு
# பயமுறுத்துகிற இருள்
# சுற்றி வளைக்கப்பட்ட பாதுகாப்பு வலயம்
# ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்
# எலும்புக்கூடுகளை வெளியேற்றுவதற்கான வழி
# கடல் நுழைகிற மணற் பதுங்குகுழி
# அறிவிக்கப்பட்ட வலயத்தில் நிறைகிற சுடுமணல்
# தாகம் பாய்கிற நதிக்கான கனவு
# யாருமற்ற நகரின் தெருவினை மிதிக்கிற கொடு நிழல்
# சொற்ப எண்ணிக்கையாக்கப்பட்ட குழந்தைகள்
# சுற்றி வளைக்கப்பட்ட கிராமத்தின் சரணடைகிற பொதிகள்
# மரண நெடில் வெளி இரவு
# கைப்பற்றப்பட்ட நகரம் பற்றியெழுகிற பெருந்துயர்
# மற்றொரு நகரத்தை நோக்கி நடைபெறுகிற படையெடுப்புகள்
# மலைப்பாம்பு காப்பாற்றப்போகிற முட்டைகள்
# மாதா அழைத்து வைத்திருந்த மாடுகள்
# நீர் அறிந்திருக்காத சிலுவைகள்
# தேங்காய்களை தின்று அசைகிற கொடி
#முற்றுகையிடப்பட்ட நகரத்தின் பதுங்குகுழி
#மனிதாபிமானத்திற்கான படைநடவடிக்கை
#அண்மையில் மிதிபடுகிற கடல்
#மரங்கள் பின்வாங்குகிற இன்றிரவு
#நம்மைத் தொடருகிற போர்
#குழந்தைகளை இழுத்துச் செல்லும் பாம்புகள்
#அழிப்பதற்கு பிரகடனம் செய்யப்பட்ட நகரத்தின் கதிரைகள...
#அவகாசத்திற்குப் பிறகான படைநடவடிக்கை.
#பெரிய நகரை தின்கிற படைகள்
#போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்
#போர் தொடங்கும் குழந்தைகளின் கனவுகள்

வலைப்பதிவு பட்டியல்

Related Posts Plugin for WordPress, Blogger...