Blogger இயக்குவது.
| புதிய நூல்கள்: பயங்கரவாதி - டிஸ்வரி புக்பேலஸ் | நான் ஸ்ரீலங்கன் இல்லை - யாவரும் பப்ளிசர்ஸ் | நடுகல் டிஸ்வரிபுக் பேலஸ் | deebachelvan@gmail.com | 0772487257

வியாழன், 4 பிப்ரவரி, 2010

தோற்கடிக்கப்பட்ட மக்களால் நிராகரிக்கப்பட்ட அரசன்

o தீபச்செல்வன் ------------------------------------------------------------------

நாங்கள் ஆதியிலேயே தோற்றுப்போயிருந்தோம்.
தன் அதிகாரம் மிகுந்த செயல்களுக்காக
நிராகரித்த சிறு மக்களை
அரசன்
தோற்கடித்து அரியனையில் ஏறியிருக்கிறான்.
மோசடிகளிலிருந்து அவன் பரிபூரண உருவத்தைப் பெற்றிருக்கிறான்.
நிரந்தராமாக முகங்கள் கருகிவிட்டன.
யார் வென்றார்கள்
யார் வீழ்ந்தார்கள் என்பதை
குழந்தைகள் அறிவிக்கத் தொடங்குகிறார்கள்.
எல்லா அரசர்களின் முன்பாகவும்
எல்லா வெற்றிகளின் முன்பாகவும்
முடிவுகளுக்கு முன்பாகவே நாம் தோற்றுப்போயிருக்கிறோம்.
எங்கள் வானம் வீழ்ந்து படுகிறது.

மோசடிகளால் செய்யப்பட்ட கதிரையில்
அரசன் அமர்ந்திருக்க
அஞ்சும் காலங்களிலிருந்து
மிக அஞ்சி ஒடுங்கி தீர்ந்துபோகும் நெருக்கடியான காலத்திற்குள்
கலைக்கப்படுகிறோம்.
இதுவும் சபிக்கப்பட்ட மாலையாக பதிந்திருக்கிறது.
வாக்குறுதிகளால் அழித்து முடிக்கப்பட்ட
ஒப்பந்தங்களால் கையாண்டு ஏமாற்றப்பட்ட
அதிகாரத்தின் போட்டியில்
வாழ்வு கிழித்தெறியப்பட்டிருக்கிறது.

எல்லாவற்றுக்காகவும் அவனிடம்
மண்டியிடப்போகிறோம்.
குரல்களை தின்றவன் எங்களுக்காக பாடுகிறான்.
சொற்களை செவிமடுக்க மறுத்தவன்
நாளை சொற்களை அள்ளி வீசப்போகிறான்.
திரும்பவும் புன்னகைக்கப்போகிறான்.
நமது மொழியிலேயே நம்மைச் சபிக்கப்போகிறான்.
முளைக்க வேண்டிய பயிர்கள் பறிபோய்விட்டன.
விளையும் காலம் அவனால் தின்னப்பட்டிருக்கிறது.

சனங்கள் ஆதியிலிருந்து தோற்று வருகிறார்கள்.
வீழ்ந்த சந்ததியிலிருந்து
எதைத் தன்னும் நேர்மையுடன் செய்ய சின்ன இடைவெளியுமில்லை.
நமது தெருவுக்கும் முற்றத்திற்கும்
அவனிடம் கெஞ்ச வேண்டியிருக்கிறது.
நாம் வாழ அவனுக்கு பிரதிபலனளிக்க வேண்டியிருக்கிறது.
முதலில் நாங்கள் எங்களுக்குள்
பெரிய தோல்வியைச் சந்திருந்தோம்.
அதன் பிறகு தொடர்ந்து அவர்களிடம் தோற்றுக்கொண்டிருக்கிறோம்.
திசைகளும் கணங்களும் சொற்களும் மனங்களும்
வெளிகளும் துளைகளும்
வேறுவேறாக பலியிடப்படுகின்றன.

அவனால் தீர்மானிக்கப்படுகிறது காலம்.
அரசனின் மேய்ச்சல் வெளியில்
திசைகளற்றதும் பட்டியகளற்றதுமான
ஆடுகளாக அலைந்துகொண்டிருக்கிறோம்.
சொற்களைத் தடுத்து வாயைக் கட்டி விட்டிருக்கிறான்.
இன்று யாரே வென்றிருக்கிறார்கள்
யாரோ தோற்றிருக்கிறார்கள்.
காலத்தை நிரந்தரமாய் இழந்து குழந்தைகள் தொடர்ந்து ஏமாற்றப்படுகிறார்கள்.
தோல்வி நம்மிடம் ஆதியிலிருந்து வருகிறது.
________________________
28.01.2010

0 கருத்துகள்:

வன்னி வளைப்புப் பற்றிய கவிதைகள்

# ஆட்களை இழந்த வெளி
# அடருகிற இரவொன்றில் தின்னப்பட்ட கடல்
# பதுங்குகுழியைவிட்டு அலைகிற வெளி
# பந்துகள் கொட்டுகிற காணி
# மணலில் தீருகிற துயர்
# நிலம் பெயர்ந்தலைய வந்துவிடு
# பயமுறுத்துகிற இருள்
# சுற்றி வளைக்கப்பட்ட பாதுகாப்பு வலயம்
# ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்
# எலும்புக்கூடுகளை வெளியேற்றுவதற்கான வழி
# கடல் நுழைகிற மணற் பதுங்குகுழி
# அறிவிக்கப்பட்ட வலயத்தில் நிறைகிற சுடுமணல்
# தாகம் பாய்கிற நதிக்கான கனவு
# யாருமற்ற நகரின் தெருவினை மிதிக்கிற கொடு நிழல்
# சொற்ப எண்ணிக்கையாக்கப்பட்ட குழந்தைகள்
# சுற்றி வளைக்கப்பட்ட கிராமத்தின் சரணடைகிற பொதிகள்
# மரண நெடில் வெளி இரவு
# கைப்பற்றப்பட்ட நகரம் பற்றியெழுகிற பெருந்துயர்
# மற்றொரு நகரத்தை நோக்கி நடைபெறுகிற படையெடுப்புகள்
# மலைப்பாம்பு காப்பாற்றப்போகிற முட்டைகள்
# மாதா அழைத்து வைத்திருந்த மாடுகள்
# நீர் அறிந்திருக்காத சிலுவைகள்
# தேங்காய்களை தின்று அசைகிற கொடி
#முற்றுகையிடப்பட்ட நகரத்தின் பதுங்குகுழி
#மனிதாபிமானத்திற்கான படைநடவடிக்கை
#அண்மையில் மிதிபடுகிற கடல்
#மரங்கள் பின்வாங்குகிற இன்றிரவு
#நம்மைத் தொடருகிற போர்
#குழந்தைகளை இழுத்துச் செல்லும் பாம்புகள்
#அழிப்பதற்கு பிரகடனம் செய்யப்பட்ட நகரத்தின் கதிரைகள...
#அவகாசத்திற்குப் பிறகான படைநடவடிக்கை.
#பெரிய நகரை தின்கிற படைகள்
#போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்
#போர் தொடங்கும் குழந்தைகளின் கனவுகள்

வலைப்பதிவு பட்டியல்

Related Posts Plugin for WordPress, Blogger...