Blogger இயக்குவது.
| புதிய நூல்கள்: பயங்கரவாதி - டிஸ்வரி புக்பேலஸ் | நான் ஸ்ரீலங்கன் இல்லை - யாவரும் பப்ளிசர்ஸ் | நடுகல் டிஸ்வரிபுக் பேலஸ் | deebachelvan@gmail.com | 0772487257

புதன், 20 ஜனவரி, 2010

அதே முட்கம்பிகள் - அதே பயங்கரம்


o தீபச்செல்வன் ------------------------------------------------------------------

எல்லா அறிவிப்புகளும் முடிந்துவிட்டன.
செய்திகளும் புகைப்படங்களும் எல்லோரையும்
நம்பவைத்து சென்றுவிட்டன.
அதே முட்கம்பிகளுக்குள்
அம்மாவின் முகம் சுருங்கிக்கிடக்கிறது.
தங்கையின் கூந்தல் வளராமலிருக்கிறது.
எங்களுக்கிடையில் அதே முட்கம்பிச் சுருள்கள்
அம்மாவின் அருந்திக்கொண்டு வந்த புன்னகையை
காயப்படுத்திக்கொண்டிருக்கிறது.
தங்கையின் கையிலிருக்கிற புத்தகத்தை
கிழித்துக்கொண்டிருக்கிறது.
எனக்காக அம்மா பிட்டினைச் சுமந்து வந்தாள்.
காத்திருப்பின் எல்லைகளை
வீடு செல்லுகிற கனவினை நகரத்திற்கு மீள்கிற
நம்பிக்கையை
அம்மா முட்கம்பிகளில் சொருகியிருக்கிறாள்.
நுளம்புகள் கூடாரத்தை தூக்கிச் செல்லும் இரவில்
முட்கம்பிகளில் மின் விளக்குகள் பொருத்தப்பட்டிருக்க
காலாவதியான அதே கூடாரத்திற்குள்
கால்களை மடக்கி அம்மா அடைந்து கொள்கிறாள்.
நீண்ட தூரத்திலுள்ள நகரத்தின் கடைக்குச் செல்லுவதற்காக
அம்மா கோரிய அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது.
நெருங்கவும் தழுவிக்கொள்ளவும்
அனுமதிக்கப்படாத
வாசலில் முகாங்கள் என்றோ திறந்துவிடப்பட்டன
என்று எழுதப்பட்டுள்ளன.
முகாங்கள் திறந்து விடப்பட்டதற்காக
பத்திரிகையில் எழுதப்பட்ட
நன்றிகளை நான் உட்பட பலர் வசித்துக்கொண்டிருக்கிறார்கள்.
முட்கம்பிகளைப்பற்றியும்
கூடாரங்களைப்பற்றியும் நிறையவே பேசி விட்டோம்.
எல்லா அறிவிப்புகளும் போராட்டங்களும் முடிந்துவிட்டன.
நான் எப்பொழுதும் சொல்லிக்கொண்டிருக்கும்
அந்தப் பயங்கரமான முட்கம்பிகளால்
சூழப்பட்ட வேலிகளுக்குள்
குழந்தைகள் விளையாடுவதைக் கண்டேன்.
______________________
02.01.2010

0 கருத்துகள்:

வன்னி வளைப்புப் பற்றிய கவிதைகள்

# ஆட்களை இழந்த வெளி
# அடருகிற இரவொன்றில் தின்னப்பட்ட கடல்
# பதுங்குகுழியைவிட்டு அலைகிற வெளி
# பந்துகள் கொட்டுகிற காணி
# மணலில் தீருகிற துயர்
# நிலம் பெயர்ந்தலைய வந்துவிடு
# பயமுறுத்துகிற இருள்
# சுற்றி வளைக்கப்பட்ட பாதுகாப்பு வலயம்
# ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்
# எலும்புக்கூடுகளை வெளியேற்றுவதற்கான வழி
# கடல் நுழைகிற மணற் பதுங்குகுழி
# அறிவிக்கப்பட்ட வலயத்தில் நிறைகிற சுடுமணல்
# தாகம் பாய்கிற நதிக்கான கனவு
# யாருமற்ற நகரின் தெருவினை மிதிக்கிற கொடு நிழல்
# சொற்ப எண்ணிக்கையாக்கப்பட்ட குழந்தைகள்
# சுற்றி வளைக்கப்பட்ட கிராமத்தின் சரணடைகிற பொதிகள்
# மரண நெடில் வெளி இரவு
# கைப்பற்றப்பட்ட நகரம் பற்றியெழுகிற பெருந்துயர்
# மற்றொரு நகரத்தை நோக்கி நடைபெறுகிற படையெடுப்புகள்
# மலைப்பாம்பு காப்பாற்றப்போகிற முட்டைகள்
# மாதா அழைத்து வைத்திருந்த மாடுகள்
# நீர் அறிந்திருக்காத சிலுவைகள்
# தேங்காய்களை தின்று அசைகிற கொடி
#முற்றுகையிடப்பட்ட நகரத்தின் பதுங்குகுழி
#மனிதாபிமானத்திற்கான படைநடவடிக்கை
#அண்மையில் மிதிபடுகிற கடல்
#மரங்கள் பின்வாங்குகிற இன்றிரவு
#நம்மைத் தொடருகிற போர்
#குழந்தைகளை இழுத்துச் செல்லும் பாம்புகள்
#அழிப்பதற்கு பிரகடனம் செய்யப்பட்ட நகரத்தின் கதிரைகள...
#அவகாசத்திற்குப் பிறகான படைநடவடிக்கை.
#பெரிய நகரை தின்கிற படைகள்
#போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்
#போர் தொடங்கும் குழந்தைகளின் கனவுகள்

வலைப்பதிவு பட்டியல்

Related Posts Plugin for WordPress, Blogger...