Blogger இயக்குவது.
| புதிய நூல்கள்: பயங்கரவாதி - டிஸ்வரி புக்பேலஸ் | நான் ஸ்ரீலங்கன் இல்லை - யாவரும் பப்ளிசர்ஸ் | நடுகல் டிஸ்வரிபுக் பேலஸ் | deebachelvan@gmail.com | 0772487257

வெள்ளி, 1 ஜனவரி, 2010

முன்பொரு காலத்தில் இந்த நிலம் எங்களிடமிருந்தது


o தீபச்செல்வன் ------------------------------------------------------------------

எந்தப் பறவைகளும் வந்தமராத மரத்தின்
காய்ந்த கிளைகளில்
பழங்கள் காய்த்து கனியும் என்று நம்பியிருந்தோம்
அம்மா அந்தப் பறவைகளை எங்கேனும் கண்டாயா?
அதன் மரம் நீண்ட காலங்களாய் பட்டுப்போயிருந்தது
தலைகளில்
ஒடிந்து விழுந்துகொண்டிருக்கிற முற்றத்தில்
இப்பொழுது எந்தத் தடிகளும் இல்லை
இந்த வருடம்
எங்கள் வீட்டை உடைத்து வாகனங்களில் ஏற்றிக்கொண்டு சென்றதுடன்
அச்சம் தரும் நாட்களையே
ஒவ்வொன்றாய் விரித்துக்கொண்டிருந்தது.
வெறும் ஒரு இரண்டு தடிகளைத் தவிர ஒன்றுமில்லை.

பறவைகள் மறந்துபோன எங்கள் கிராமத்தில்
சைக்கிள்கள் உடைந்து உக்கிப்போன எங்கள் நகரத்தில்
ஒரு புன்னகையை பரிமாற
கூடியிருந்து ஒரு கோப்பை மதுவை அருந்துவதற்கு
யாரம்மா இருக்கிறார்கள்?
உன் கைகளில் மலை நேரத்தை கொண்டு வருகிற
தேனீர்க்கோப்பைகளை காணவில்லை
திரும்பாத கிராமத்திற்கும்
இறங்காத நகரத்திற்கும் ஊடாக செல்லும் பேரூந்தில்
நாளை நான் பயணிக்கப்போகிறேன்.

இந்த நாள் கழிந்துபோன வருடத்தின்
இனிப்பாயிருந்த நாட்களையே ஞாபகப்படுத்துகிறது
வெடி அதிரும் இரவு
இன்னும் சற்று நேரத்தில் முடிவடைகிறது
யார் யாரே வந்து செல்லுகிறார்கள்
எனக்கு முன்னால் ஏதேதோ கிடக்கிறது
முடிந்து போன இந்த வருடத்தில்
ஏராளமானவற்றை இழந்துபோயிருக்கிறோம்
என் வீடு தேடுகிற தெருக்களில்
வார்த்தைகளற்று என் சைக்கில் அலைகிறது
முன்பொரு காலத்தில் இந்த நாள் எங்களிடமிருந்தது.

அந்தப் பறவைகளையும்
அதன் பட்ட மரத்தையும் அதன் கீழிருந்த எங்கள் வீட்டையும்
எங்களிடம் தருவார்களா?
பட்ட மரம் எரிந்து சாம்பலாகிப்போக
பறவைகள் அதில் புதைந்து போயிருக்கின்றன
வீடு கரைந்துபோன கிராமத்து வெளியில்
எந்த அடையாளங்களுமில்லை
இந்த நாளில் முன்பொரு காலத்தில்
எங்களிடமிருந்த நமது நிலத்தில்
என்னிடமிருந்த புன்னகையையும்
வார்த்தைகளையும் கோரிக்கொண்டிருக்கிறேன்.
 
01.01.2010 

1 கருத்துகள்:

இடைவெளிகள் சொன்னது…

எதிர்காலத்தில்
ஏதேனும் சோகம் வந்தால்
சொல்லி அழ
கொஞ்சமெனும்
மிச்சமிருக்குமா
கண்ணீர்
ஈழத்தமிழரிடம்
எனும் கவிதை வரிகளைப்போல
பறவைகள் வந்தமர மரங்களின்றியும்
அடையாளமற்றதொரு
தெருக்களைகண்டபின்
செத்துப்போன
பறவைகளின்
இறுதி நாட்களை
நினைவூட்டும்
அசத்தலான கவிதை
பாராட்டுக்கள்

வன்னி வளைப்புப் பற்றிய கவிதைகள்

# ஆட்களை இழந்த வெளி
# அடருகிற இரவொன்றில் தின்னப்பட்ட கடல்
# பதுங்குகுழியைவிட்டு அலைகிற வெளி
# பந்துகள் கொட்டுகிற காணி
# மணலில் தீருகிற துயர்
# நிலம் பெயர்ந்தலைய வந்துவிடு
# பயமுறுத்துகிற இருள்
# சுற்றி வளைக்கப்பட்ட பாதுகாப்பு வலயம்
# ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்
# எலும்புக்கூடுகளை வெளியேற்றுவதற்கான வழி
# கடல் நுழைகிற மணற் பதுங்குகுழி
# அறிவிக்கப்பட்ட வலயத்தில் நிறைகிற சுடுமணல்
# தாகம் பாய்கிற நதிக்கான கனவு
# யாருமற்ற நகரின் தெருவினை மிதிக்கிற கொடு நிழல்
# சொற்ப எண்ணிக்கையாக்கப்பட்ட குழந்தைகள்
# சுற்றி வளைக்கப்பட்ட கிராமத்தின் சரணடைகிற பொதிகள்
# மரண நெடில் வெளி இரவு
# கைப்பற்றப்பட்ட நகரம் பற்றியெழுகிற பெருந்துயர்
# மற்றொரு நகரத்தை நோக்கி நடைபெறுகிற படையெடுப்புகள்
# மலைப்பாம்பு காப்பாற்றப்போகிற முட்டைகள்
# மாதா அழைத்து வைத்திருந்த மாடுகள்
# நீர் அறிந்திருக்காத சிலுவைகள்
# தேங்காய்களை தின்று அசைகிற கொடி
#முற்றுகையிடப்பட்ட நகரத்தின் பதுங்குகுழி
#மனிதாபிமானத்திற்கான படைநடவடிக்கை
#அண்மையில் மிதிபடுகிற கடல்
#மரங்கள் பின்வாங்குகிற இன்றிரவு
#நம்மைத் தொடருகிற போர்
#குழந்தைகளை இழுத்துச் செல்லும் பாம்புகள்
#அழிப்பதற்கு பிரகடனம் செய்யப்பட்ட நகரத்தின் கதிரைகள...
#அவகாசத்திற்குப் பிறகான படைநடவடிக்கை.
#பெரிய நகரை தின்கிற படைகள்
#போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்
#போர் தொடங்கும் குழந்தைகளின் கனவுகள்

வலைப்பதிவு பட்டியல்

Related Posts Plugin for WordPress, Blogger...