Blogger இயக்குவது.
| புதிய நூல்கள்: பயங்கரவாதி - டிஸ்வரி புக்பேலஸ் | நான் ஸ்ரீலங்கன் இல்லை - யாவரும் பப்ளிசர்ஸ் | நடுகல் டிஸ்வரிபுக் பேலஸ் | deebachelvan@gmail.com | 0772487257

சனி, 10 அக்டோபர், 2009

அபிராஜ் புத்தகங்களை மறந்துபோயிருக்கிறான்


o தீபச்செல்வன்
----------------------------------------------------------------

லூர்த்தம்மா! காலம் பற்றி என்ன சித்தரிப்புக்களை
நான் செய்ய வேண்டியிருக்கிறது?
நாறி வதைத்துக்கொண்டிருக்கும்
எல்லாச் சொற்களையும்
உனக்காக அசைத்து கொட்டுகிறேன்.
மழைக் காலத்திற்கிடையில்
நமது காணியில் மேடு ஒன்றில் வீடு ஒன்றை
அமைப்பதற்காகவே இரவுகளில்
கற்களைத் தேடிக்கொண்டிருக்கிறேன்.

நான் அவர்களிடம் சொன்னேன்
குழந்தைகள் ஒரு பொழுதும் விரும்பி
துப்பாக்கிளை தூக்கி வரவில்லை என்பதை.
அபிராஜிடம் துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டதாக சொல்லுகிறார்கள்.

அபிராஜை இன்னும் நான் பார்க்கவிலை.
வெயில் கொட்டிக்கிடந்த நாளில்
மிகத் தெலைவுக்குச் சென்றும் அவனை பார்க்கமுடிவில்லை.
யாரையும் குறைகூறக்கூடாது?
எதைப் பற்றியும் விபரிக்க முடியாதிருக்கிறது.
நேற்றிரவு
கூடாரத்தை காற்று பிடுங்கிக்கொண்டு போயிற்று.
புழுதி முடிய உன் தங்கைகளை
காலையில் கிளிறியே எடுத்துக்கொண்டோன்.
நீங்கள் இப்பொழுது துப்பாக்கிளையெல்லாம்
மறந்துபோயிருப்பதாக
எனது வாக்கு மூலத்தில் தெரிவித்திருக்கிறேன்.
நான் எப்படி எல்லாம் பேசுகிறேன்!
வியப்பாகவும் ஆச்சரியமாகவும் இருக்கிறது.

எல்லாவிதமான சொற்களையும் மறுப்பின்றி
ஏற்றதனால் அபிராஜை பார்க்க முடியும் போலிருக்கிறது.
அவனுக்கு வழங்கிய புத்தகங்களில்
தொழிற் கருவிகள் வரைந்துகொடுக்கப்பட்டுள்ளன.
மரவேலைகளை செய்யவும் பழக்கப்படுகிறான்.

உங்களைப்போலவே ஒவ்வொரு
காலையிலும் ஏற்றப்படும் சிங்கக்கொடியின் முன்னிற்கிறேன்.
சிங்கள தேசியகீதத்தை தவறாது பாடுகிறேன்.
ஜனாதிபதியின் புகைப்படங்களை
கூடாரத்தில் மாட்டி வைத்திருக்கிறேன்.
இப்படி
குருதி கொட்டாமலே எல்லாக்கொலைகளும் நிகழுகின்றன.
நீங்கள் துப்பாக்கி பற்றி பேசாதிருங்கள்.
பெரிய கிடங்கில் தள்ளுப்பட்டு விழுந்து கிடக்கிறோம்.
மண் நிரவிக்கொண்டிருக்கிறது.
நான் குறிப்பிட்ட வீடு நம்மை தேடியலைந்துகொண்டிருக்கிறது.

நான் மீளவும் மீளவும் பேசுகிறேன்.
பல்வேறு வருணங்களை கலந்த சொற்களை வைத்து.
குருதி பிறண்ட கோப்பைகளில் கைகளை நீட்டி அழைகிறேன்.
முயற்சியின்
எல்லையில் குவிந்துகிடக்கிற குப்பைபகள்
புகைந்துகொண்டிருக்கின்றன.
அபிராஜ் புத்தகங்களை மறந்துபோயிருக்கிறான்.

எந்த ஓட்டைகளுமில்லை.
வழி என்பது வேறு ஒரு பக்கத்திற்கு இழுத்துச் செல்லுகிறது.
மிகவும் இறுக்கமாக பின்னப்பட்டிருக்கின்றன அரண்கள்.
எனக்குப் பதில் எழுதாதே!
மீண்டும் உன்னைப் பார்க்க வேண்டும்,
லூர்த்தம்மா,
கனவுகள் எப்படி வருக்கின்றன என்பதை எழுதமுடியவில்லை.
அபிராஜின் கைகளில்
உழிகளும் பலகைத்துண்டுகளும் நிரம்பியுள்ளன.
____________________
06.10.2009

1 கருத்துகள்:

Sri Rangan சொன்னது…

உண்மைகளின் முன் என்னிடம் வார்த்தைகள் இல்லை!மனிதத்துக்காகப் போராடவேண்டிய நிலையில் நாம்...

வன்னி வளைப்புப் பற்றிய கவிதைகள்

# ஆட்களை இழந்த வெளி
# அடருகிற இரவொன்றில் தின்னப்பட்ட கடல்
# பதுங்குகுழியைவிட்டு அலைகிற வெளி
# பந்துகள் கொட்டுகிற காணி
# மணலில் தீருகிற துயர்
# நிலம் பெயர்ந்தலைய வந்துவிடு
# பயமுறுத்துகிற இருள்
# சுற்றி வளைக்கப்பட்ட பாதுகாப்பு வலயம்
# ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்
# எலும்புக்கூடுகளை வெளியேற்றுவதற்கான வழி
# கடல் நுழைகிற மணற் பதுங்குகுழி
# அறிவிக்கப்பட்ட வலயத்தில் நிறைகிற சுடுமணல்
# தாகம் பாய்கிற நதிக்கான கனவு
# யாருமற்ற நகரின் தெருவினை மிதிக்கிற கொடு நிழல்
# சொற்ப எண்ணிக்கையாக்கப்பட்ட குழந்தைகள்
# சுற்றி வளைக்கப்பட்ட கிராமத்தின் சரணடைகிற பொதிகள்
# மரண நெடில் வெளி இரவு
# கைப்பற்றப்பட்ட நகரம் பற்றியெழுகிற பெருந்துயர்
# மற்றொரு நகரத்தை நோக்கி நடைபெறுகிற படையெடுப்புகள்
# மலைப்பாம்பு காப்பாற்றப்போகிற முட்டைகள்
# மாதா அழைத்து வைத்திருந்த மாடுகள்
# நீர் அறிந்திருக்காத சிலுவைகள்
# தேங்காய்களை தின்று அசைகிற கொடி
#முற்றுகையிடப்பட்ட நகரத்தின் பதுங்குகுழி
#மனிதாபிமானத்திற்கான படைநடவடிக்கை
#அண்மையில் மிதிபடுகிற கடல்
#மரங்கள் பின்வாங்குகிற இன்றிரவு
#நம்மைத் தொடருகிற போர்
#குழந்தைகளை இழுத்துச் செல்லும் பாம்புகள்
#அழிப்பதற்கு பிரகடனம் செய்யப்பட்ட நகரத்தின் கதிரைகள...
#அவகாசத்திற்குப் பிறகான படைநடவடிக்கை.
#பெரிய நகரை தின்கிற படைகள்
#போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்
#போர் தொடங்கும் குழந்தைகளின் கனவுகள்

வலைப்பதிவு பட்டியல்

Related Posts Plugin for WordPress, Blogger...