Blogger இயக்குவது.
| புதிய நூல்கள்: பயங்கரவாதி - டிஸ்வரி புக்பேலஸ் | நான் ஸ்ரீலங்கன் இல்லை - யாவரும் பப்ளிசர்ஸ் | நடுகல் டிஸ்வரிபுக் பேலஸ் | deebachelvan@gmail.com | 0772487257

ஞாயிறு, 19 ஜூலை, 2009

குழந்தைகள் தோற்கடிக்கப்படுகிற சமாதானத்தின் நிழல்


o தீபச்செல்வன்
----------------------------------------------------------------
போர் தின்ற நகரத்தை
சமாதானத்தின் கடதாசி கட்டி எழுப்புகிறது.
பூக்களும் பறவைகளும்
நிலத்திலிருந்து பிடுங்கி எறியப்பட்டிருந்த நாளில்
வெள்ளைவீதி திறந்திருக்கிறது.
எல்லோருடைய கண்களிலும் போர் நிரம்பியிருக்க
கவிழ்ந்த கைகள்
நமது நகரத்தில் உலவித்திரிகின்றன.

சூழ்ச்சிகளால் வடிவமைக்கப்பட்ட
சொற்களை
மாறி மாறி பேசிக்கொண்டிருந்த
வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட காலத்தில்
சீமெண்ட் சுவர் வளர்ந்து
மனதை மூடிக்கொண்டிருக்கிறது.
காலங்களின் ஒளியை
முழுவதுமாய் சுறண்டி எடுத்திருக்க
பொலித்தீன் பைகளில்
அலையும் கனவை அடைத்துக் கட்டப்படுகிறது.

தோற்றுத் தோல்வியின் துயரில்
முடிந்து விடுகிறது நிலத்தின் அடங்காத வாசனை.
எல்லோரும் பேசிவிட்டுப் போன பிறகு
கதிரைகள் வெடித்துச் சிதற
ஏங்கிக்கொண்டிருந்தது சொற்கள்.

போரை கொண்டாடிக்கொண்டிருக்கிற
சமாதானத்தின் கீழ்
பயங்கரம் நிரம்பியிருந்ததைக்
குழந்தைகள் கண்டனர்.
எல்லோரையும் மூடிக்கொண்டிருக்கிறது.
சமாதானத்தின் நிழல்.
குழந்தைகளின் கண்களை மெல்ல
சமாதானம் தின்கிறது.
மணல் நகரங்கள் எழும்பிக்கொண்டிருக்கிறது.

கிராமங்கள் புதைந்துபோக
முடிவற்ற பெயர்வு நிலத்தை வரைந்துகொண்டிருக்கிறது.
ஆற்றில் நகரத்தை அள்ளும்
படகு மிதக்கிறது.
முதலில் சொற்களின் ஒளி
மீள முடியாத சகதியில் ஒளித்து வைக்கப்பட்டிருக்க
காலம் தோற்க்கடிக்கப்பட்ட
வானம் முழுவதும் இருள் பொழிகிறது.

சமாதானத்தின் நிழலில்
எரிந்து கருகுகிறது கடதாசி நகரம்.
குழந்தைகள் துப்பாக்கிகளால் மடக்கிப்பிடிக்கப்பட்டு
கவச வாகனங்களில் நிரப்பப்படுகின்றனர்.
முன்னால் நிற்கிறது
ஷெல்களை பொழியத் தயாராக இருக்கிற பீரங்கிகள்.

நம்பிக்கைகளை ஏமாற்றியபடி
எதிர்பார்ப்புக்களை சிதைத்தபடி
சொற்கள் போர் வளர்த்துக்கொண்டிருக்கின்றன.
காத்திருப்புக்களின்மீது
மிதிக்க வெடிக்கிறது புதிய வெடிகள்.
குழந்தைகள்
எல்லாவற்றையும் கண்டு அஞ்சிக்கொண்டிருக்கிறார்கள்.

வாசனையை உணர்ந்த கிழவன்
திண்ணையை மேய்ந்த பின்மாலைப்பொழுதில்
தோற்கடிக்கப்படுகிறான்.
காலத்தின்மீது
நஞ்சுக் கனிகள் காய்த்து முற்றுகிறது.
துவக்குகள் ஆட்களைத்தேட
மரணம் அண்மையை சுலபப்படுத்துகிறது.
மரம் முழுவதும் பாம்புகள்
பூத்து அடர
குளத்தில் விஷம் நிரம்புகிறது.
ஆறுகளின்மீது
பெருமெடுப்பில் பாய்கிறது வீழ்ச்சியின் இலக்கு.

பீரங்கிகள் தயாராக இருக்கின்றன.
டாங்கிகள் புறப்படத் தொடங்குகின்றன.
துவக்குகள் நிமிர்ந்து நேராக நிற்கின்றன.

சொற்களைப் பிய்த்தெறிந்துவிட்டு
குண்டுகளை ஏற்றி வந்து இறக்குகிறது
பயண விமானங்கள்.
வெள்ளைவீதிளில் சமாதானம்
போரை வடிவமைக்கிறது.
குழந்தைகள் ஒழித்துக்கட்டப்பட்ட நகரத்தில்
அவர்கள் தோற்றதை
அறிவித்துக்கொண்டிருக்கிறது சமாதானத்தின் கடதாசி.
______________

0 கருத்துகள்:

வன்னி வளைப்புப் பற்றிய கவிதைகள்

# ஆட்களை இழந்த வெளி
# அடருகிற இரவொன்றில் தின்னப்பட்ட கடல்
# பதுங்குகுழியைவிட்டு அலைகிற வெளி
# பந்துகள் கொட்டுகிற காணி
# மணலில் தீருகிற துயர்
# நிலம் பெயர்ந்தலைய வந்துவிடு
# பயமுறுத்துகிற இருள்
# சுற்றி வளைக்கப்பட்ட பாதுகாப்பு வலயம்
# ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்
# எலும்புக்கூடுகளை வெளியேற்றுவதற்கான வழி
# கடல் நுழைகிற மணற் பதுங்குகுழி
# அறிவிக்கப்பட்ட வலயத்தில் நிறைகிற சுடுமணல்
# தாகம் பாய்கிற நதிக்கான கனவு
# யாருமற்ற நகரின் தெருவினை மிதிக்கிற கொடு நிழல்
# சொற்ப எண்ணிக்கையாக்கப்பட்ட குழந்தைகள்
# சுற்றி வளைக்கப்பட்ட கிராமத்தின் சரணடைகிற பொதிகள்
# மரண நெடில் வெளி இரவு
# கைப்பற்றப்பட்ட நகரம் பற்றியெழுகிற பெருந்துயர்
# மற்றொரு நகரத்தை நோக்கி நடைபெறுகிற படையெடுப்புகள்
# மலைப்பாம்பு காப்பாற்றப்போகிற முட்டைகள்
# மாதா அழைத்து வைத்திருந்த மாடுகள்
# நீர் அறிந்திருக்காத சிலுவைகள்
# தேங்காய்களை தின்று அசைகிற கொடி
#முற்றுகையிடப்பட்ட நகரத்தின் பதுங்குகுழி
#மனிதாபிமானத்திற்கான படைநடவடிக்கை
#அண்மையில் மிதிபடுகிற கடல்
#மரங்கள் பின்வாங்குகிற இன்றிரவு
#நம்மைத் தொடருகிற போர்
#குழந்தைகளை இழுத்துச் செல்லும் பாம்புகள்
#அழிப்பதற்கு பிரகடனம் செய்யப்பட்ட நகரத்தின் கதிரைகள...
#அவகாசத்திற்குப் பிறகான படைநடவடிக்கை.
#பெரிய நகரை தின்கிற படைகள்
#போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்
#போர் தொடங்கும் குழந்தைகளின் கனவுகள்

வலைப்பதிவு பட்டியல்

Related Posts Plugin for WordPress, Blogger...