Blogger இயக்குவது.
| புதிய நூல்கள்: பயங்கரவாதி - டிஸ்வரி புக்பேலஸ் | நான் ஸ்ரீலங்கன் இல்லை - யாவரும் பப்ளிசர்ஸ் | நடுகல் டிஸ்வரிபுக் பேலஸ் | deebachelvan@gmail.com | 0772487257

வெள்ளி, 10 ஜூலை, 2009

முட்கம்பிக்குள் மண்மூடிய கிராமம்


o தீபச்செல்வன்
----------------------------------------------------------------
எலலோருக்கும் பகிரமுடியாத
ஒற்றைக் கிணற்றையும்
முட்கம்பி சுற்றி எடுத்திருக்கிறது.
தென்னோலைகள் தலைகீழாக தூங்க
கண்களுக்கு எட்டிய இடமெல்லாம்
வெடித்துச் சிதறிய
குண்டுகளின் வெற்றுக் கோதுகள் கிடக்கிறது.

வெயில் வந்து
கூடாரங்களை மேய்ந்துகொண்டிருக்கிறது.
முடி பறிக்கப்பட்ட தலைகளை
சூரியன் தின்று கொண்டிருக்க
முட்கம்பிகளில் தொங்கிக்கொண்டிருக்கிறது
காலம் பற்றிய சொற்கள்.

குண்டுகளற்ற பெட்டியை தட்டி விரித்து செய்யப்பட்ட
இருக்கையில்
நீயும் நானும் வைக்கப்பட்டிருக்கிறோம்.
தரப்பட்ட நேரங்களை
நாமறியாதபடி தின்றுகொண்டிருக்கிறது கடிகாரம்.
எப்பொழுதும் வெடிக்க தயாராக
ஒரு குண்டு
இருக்கையின் கீழிருப்பதைப்போலிருக்கிறது.
மீளவும் மீளவும்
மனம் வெடித்து சிதறி எங்கும் கொட்டிக்கொண்டிருக்கிறது.

எப்பொழுதும் இலங்கங்களை
அறிவித்துக் கொண்டிருக்கும் ஒலிபெருக்கியில்
யாரோ சொல்லத் துடிக்கிற
சொற்கள்
வாசலில் வந்து பொறுத்து நிற்கின்றன.
எப்பொழுதும் ஒலிபெருக்கிகளுக்கு கொடுத்துவிட்ட
காதுகளுக்கு
யாரோ அழைப்பது போல கேட்கிறது.

திசை பிரித்து கொண்டு செல்லப்பட்டவர்களாய்
இன்னும் தேடிக்கிடைக்கப் பெறாதவர்களுக்காய்
விசாரித்துக்கொண்டிருக்கிற
தனித்துவிடப்பட்ட சிறுவன் எல்லோரையும் பார்க்கிறான்.
மீள்வதற்கு எந்த வழிகளுமற்றுப்போக
முட்கம்பி எங்கும் இழுத்துக் கட்டப்படுகிறது.

துவக்குகள் வரிசையில் நின்று பார்த்துக்கொண்டிருக்க
ஒடுங்கிய முகங்களில்
பயங்கரத்துள் கைவிடப்பட்ட துயரம் ஒழுகுகிறது.
யாரும் கண்களுக்கு எட்டடிவிடாத முடிவில்
தலையை முட்கம்பியில்
தொங்கப்போடுகிறான் அந்தச் சிறுவன்.

யாரையும் சந்திக்காத வெறுமையில்
வெயில் நிரம்பியிருக்கிறது.
ஒலிபெருக்கி களைத்து அடங்கிவிட
வெயில் இந்தத் தனிக்கிராமத்தை கடந்து சரிகிறது.
இரவானதும்
மனம் எப்பொழுதும் சிக்குப்பட்டுக்கிடக்கும்
அந்தக் கிராமத்தை மண் மூடிக்கொண்டிருக்கிறது.
_____________
05.07.2009

0 கருத்துகள்:

வன்னி வளைப்புப் பற்றிய கவிதைகள்

# ஆட்களை இழந்த வெளி
# அடருகிற இரவொன்றில் தின்னப்பட்ட கடல்
# பதுங்குகுழியைவிட்டு அலைகிற வெளி
# பந்துகள் கொட்டுகிற காணி
# மணலில் தீருகிற துயர்
# நிலம் பெயர்ந்தலைய வந்துவிடு
# பயமுறுத்துகிற இருள்
# சுற்றி வளைக்கப்பட்ட பாதுகாப்பு வலயம்
# ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்
# எலும்புக்கூடுகளை வெளியேற்றுவதற்கான வழி
# கடல் நுழைகிற மணற் பதுங்குகுழி
# அறிவிக்கப்பட்ட வலயத்தில் நிறைகிற சுடுமணல்
# தாகம் பாய்கிற நதிக்கான கனவு
# யாருமற்ற நகரின் தெருவினை மிதிக்கிற கொடு நிழல்
# சொற்ப எண்ணிக்கையாக்கப்பட்ட குழந்தைகள்
# சுற்றி வளைக்கப்பட்ட கிராமத்தின் சரணடைகிற பொதிகள்
# மரண நெடில் வெளி இரவு
# கைப்பற்றப்பட்ட நகரம் பற்றியெழுகிற பெருந்துயர்
# மற்றொரு நகரத்தை நோக்கி நடைபெறுகிற படையெடுப்புகள்
# மலைப்பாம்பு காப்பாற்றப்போகிற முட்டைகள்
# மாதா அழைத்து வைத்திருந்த மாடுகள்
# நீர் அறிந்திருக்காத சிலுவைகள்
# தேங்காய்களை தின்று அசைகிற கொடி
#முற்றுகையிடப்பட்ட நகரத்தின் பதுங்குகுழி
#மனிதாபிமானத்திற்கான படைநடவடிக்கை
#அண்மையில் மிதிபடுகிற கடல்
#மரங்கள் பின்வாங்குகிற இன்றிரவு
#நம்மைத் தொடருகிற போர்
#குழந்தைகளை இழுத்துச் செல்லும் பாம்புகள்
#அழிப்பதற்கு பிரகடனம் செய்யப்பட்ட நகரத்தின் கதிரைகள...
#அவகாசத்திற்குப் பிறகான படைநடவடிக்கை.
#பெரிய நகரை தின்கிற படைகள்
#போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்
#போர் தொடங்கும் குழந்தைகளின் கனவுகள்

வலைப்பதிவு பட்டியல்

Related Posts Plugin for WordPress, Blogger...