Blogger இயக்குவது.
| புதிய நூல்கள்: பயங்கரவாதி - டிஸ்வரி புக்பேலஸ் | நான் ஸ்ரீலங்கன் இல்லை - யாவரும் பப்ளிசர்ஸ் | நடுகல் டிஸ்வரிபுக் பேலஸ் | deebachelvan@gmail.com | 0772487257

புதன், 1 ஜூலை, 2009

பாம்புகள் பரிசளித்த சவப்பெட்டிகள்


o தீபச்செல்வன்
----------------------------------------------------------------
கடைசியில் ஒரு நாள் மலசலகூடம்
கட்டி முடித்த போது எறிகனைகள் வந்து கொண்டிருந்தன.
கிணற்றின் ஆழத்தை
அளந்து கொண்டிருந்தபோது வெளியில்
வேவு விமானம் பறந்து கொண்டிருந்தது.

மரணத்தின் தூதுவர்களை வேடிக்கை
பார்த்த நமது வீதிகளை குழந்தைகள் இழந்துவிட
நாம் காணாமலிருக்க
வீடு அதிர்ந்து போயிருந்தது.

சவப்பெட்டிகள் வந்து குவிய
நாம் பூக்களாலான ஊச்சலில் ஆடியபடியிருக்க
பாம்பு முற்றத்தின் மரத்தில் ஏறிக்கொண்டிருந்தது.
விஷத்தின் கனியை
பூசையறையில் வைத்து பூக்களை
படையல் செய்தபோது
மரங்கள் சவப்பெட்டிகளில் நிரப்பப்பட்டது.

ராஜாக்களிடம் ஏமாற்றமடைந்த உரையாடல்களிடம்
என்றைக்குமான சொற்கள் பலியானது.
ஊமையாகிற மேசைகளில்
வைத்து சொற்கள் நசுக்கப்பட்டன.
பறவைகள் பாம்பாகி பறக்க
மேசைகள் சவப்பெட்டியாகி வந்தன.

வாக்குமுலங்களின் மேசையில்
இன்று பிணங்கள் தரப்படுகையில்
நமதாயிருந்த தொன்மையான சொற்களையும்
வாழ்நிலத்தையும்
சவப்பெட்டி பெருமெடுப்புடன் தின்னத்தொடங்கிற்று.

சவப்பெட்டிகள் வாழுகிற ராஜாவின் தீர்ப்பில்
மரணம் விதியால் துரத்துகிற பகுதியில்
யாரும் அறிமாலிருக்க
இனத்தின் நெடுநாளின் வாழ்நிலக்கனவு
ஊசிகளால் குத்தி மெல்ல சிதைக்கப்பட்டது.

மரணத்தின் அறைகளும்
அதிகாரத்தின் மூலைவெளிகளும் அதிகரிக்க
வாழ்வென்று காத்திருந்த ஏக்கம் தகனம் செய்யப்பட
மரங்கள் ஆணிகளாக்கப்பபட்டு
சந்ததியை அறைகிறது.

தெரு கிணற்றுக்குள் தவளையாகிப்போகிறது.

ஈரம் காயுமுன்பே விட்டு வந்த
கட்டிடங்களில் மரணத்தின் படைகள் தமது மொழி எழுத
நீயும் நானும் ஒரு சவப்பெட்டியில் என்றைக்கும்
மீள முடியாதவர்களாக அடைக்கப்பட்டிருந்தோம்.
-------------------------------------------------------
13.01.2009

0 கருத்துகள்:

வன்னி வளைப்புப் பற்றிய கவிதைகள்

# ஆட்களை இழந்த வெளி
# அடருகிற இரவொன்றில் தின்னப்பட்ட கடல்
# பதுங்குகுழியைவிட்டு அலைகிற வெளி
# பந்துகள் கொட்டுகிற காணி
# மணலில் தீருகிற துயர்
# நிலம் பெயர்ந்தலைய வந்துவிடு
# பயமுறுத்துகிற இருள்
# சுற்றி வளைக்கப்பட்ட பாதுகாப்பு வலயம்
# ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்
# எலும்புக்கூடுகளை வெளியேற்றுவதற்கான வழி
# கடல் நுழைகிற மணற் பதுங்குகுழி
# அறிவிக்கப்பட்ட வலயத்தில் நிறைகிற சுடுமணல்
# தாகம் பாய்கிற நதிக்கான கனவு
# யாருமற்ற நகரின் தெருவினை மிதிக்கிற கொடு நிழல்
# சொற்ப எண்ணிக்கையாக்கப்பட்ட குழந்தைகள்
# சுற்றி வளைக்கப்பட்ட கிராமத்தின் சரணடைகிற பொதிகள்
# மரண நெடில் வெளி இரவு
# கைப்பற்றப்பட்ட நகரம் பற்றியெழுகிற பெருந்துயர்
# மற்றொரு நகரத்தை நோக்கி நடைபெறுகிற படையெடுப்புகள்
# மலைப்பாம்பு காப்பாற்றப்போகிற முட்டைகள்
# மாதா அழைத்து வைத்திருந்த மாடுகள்
# நீர் அறிந்திருக்காத சிலுவைகள்
# தேங்காய்களை தின்று அசைகிற கொடி
#முற்றுகையிடப்பட்ட நகரத்தின் பதுங்குகுழி
#மனிதாபிமானத்திற்கான படைநடவடிக்கை
#அண்மையில் மிதிபடுகிற கடல்
#மரங்கள் பின்வாங்குகிற இன்றிரவு
#நம்மைத் தொடருகிற போர்
#குழந்தைகளை இழுத்துச் செல்லும் பாம்புகள்
#அழிப்பதற்கு பிரகடனம் செய்யப்பட்ட நகரத்தின் கதிரைகள...
#அவகாசத்திற்குப் பிறகான படைநடவடிக்கை.
#பெரிய நகரை தின்கிற படைகள்
#போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்
#போர் தொடங்கும் குழந்தைகளின் கனவுகள்

வலைப்பதிவு பட்டியல்

Related Posts Plugin for WordPress, Blogger...