Blogger இயக்குவது.
| புதிய நூல்கள்: பயங்கரவாதி - டிஸ்வரி புக்பேலஸ் | நான் ஸ்ரீலங்கன் இல்லை - யாவரும் பப்ளிசர்ஸ் | நடுகல் டிஸ்வரிபுக் பேலஸ் | deebachelvan@gmail.com | 0772487257

சனி, 16 மே, 2009

மணலில் தீரும் வீர யுகம்



ஒவ்வொன்றாய் விழுகின்றன மண்மேடுகள் 
மரணக் கிடங்கில் துயர் கொண்டலையும் 
பிணதேசத்தின் குழந்தைகள்

இதற்கு முன்பு பூமி பார்த்திராத 
கண்ணீர், குருதி
இதற்கு முன்பு பூமி பார்த்திராத 
வீரயுகம், தோல்வி

எல்லோருக்கும் கேட்கும் விதமாய்
எஞ்சியிருக்கும் குழந்தைகள்
என்ன சொல்லி அழுகின்றனர்?

கடல்கரையோரமாய் பெயர்ந்தலைந்து
மீள அதே இடத்திற்குத் திரும்பிய
வானம் பெயர்ந்து சுருங்கி வீழ்கிறது.

யாரிடமும் இல்லை கருணை
குழந்தைகளின் விழிகள் 
புதையுண்டன மணலில்

இன்று பின்னிரவிலும் ஆயிரம் பிணங்கள்
மண்மேடுகளின் பின்பக்கமாய் விழுந்தன
மீற்றர்களினால் முன்னேறுகிற
படைகள் பிணங்களின் குழந்தைகளை
மீட்டு படம் பிடித்தனர்.

கீழே வைக்கப்பட்ட ஆயுதங்களின் காட்சிகளுடன்
மூளும் தாக்குதல்களில்
மேலும் சுருங்குகிறது மண்
கைப்பற்றப்பட்ட மண்ணரணுள்
மூடப்பட்டிருக்கின்றன உயிரிருக்கும் பிணங்கள்.

வீழ்கிறது மண்
குழந்தைகள் மீளமீள மோதுகின்றனர் மணலில்
யுத்தத்தில் துயரமில்லை என்றனர்
குருதியில் தோய்ந்த வெற்றியை உண்டு மகிழ்ந்தனர்
இறுதிக் கட்டமாகவே
கழுத்து நெறிக்கப்படுகிறது  என்றனர்
அதன் பின்னர் குருதியும் இல்லை
உயிரும் இல்லை என்றனர்

இரண்டு இராணுவ அணிகள் சந்தித்து
கொடிகளை அசைத்தனர்
மூச்சடங்கிய குழந்தைகளின்மீது
பிணங்களைப் பற்றிப் பிடித்தனர் குழந்தைகள்
இன்னும் சற்று நேரத்தில் ஓய்ந்தடங்கும்
வீர யுகம் தீர்கிறது மணலில்
தீருகின்றனர் சனங்கள்
ஒவ்வொன்றாய் விழ்கின்றன
பாதுகாத்திருந்த மண்மேடுகள்.

தீபச்செல்வன்

15.05.2009

1 கருத்துகள்:

உமா சொன்னது…

//சுற்றிக்கொண்டிருக்கிற தாக்குதல்களில்
அடைந்த வெற்றியின் களிப்பில்
கிலோமீற்றர்கள் மேலும் சுருங்குகின்றன.//

இன்று ஒரு பிரபாகரனைப் பிடித்துவிடலாம் அதற்காக பல்லாயிரம் பேரை பலியிடலாம் ஆனால் மிஞ்சியிருக்கும் ஒவ்வொறு அணுவும் ஓராயிரம் பிரபாகரனையல்லவா உருவாக்கிவிடும். எனது வருத்தமெல்லாம் இலங்கை ஈராக்கைப் போன்று இன்னொரு நிரந்தர யுத்த பூமியாகிவிடக்கூடாதே என்பதுதான். யுத்தத்திலேபிறந்து யுத்தத்திலே பிழைத்து வளரும் குழந்தைகள் மனதில் அன்பை யார் விதைப்பது. இன்றய தினம் இங்கு அவரவர் தங்கள் நாற்காலியைப் பிடித்துவிட்டார்கள். அவர்கள் கவனம் இலங்கைப் பக்கம் திரும்ப எவ்வளவு நாட்களாகும்? திரும்புமா?

வரலாறு திரும்பும்,சக்கரம் சுழலும்,துவக்கப்பட்ட எதற்கும் முடிவு உண்டு என்ற நம்பிக்கையில் மட்டும் நம்பிக்கைக்கொண்டு நெஞ்சில் பாரத்தோடு...

வன்னி வளைப்புப் பற்றிய கவிதைகள்

# ஆட்களை இழந்த வெளி
# அடருகிற இரவொன்றில் தின்னப்பட்ட கடல்
# பதுங்குகுழியைவிட்டு அலைகிற வெளி
# பந்துகள் கொட்டுகிற காணி
# மணலில் தீருகிற துயர்
# நிலம் பெயர்ந்தலைய வந்துவிடு
# பயமுறுத்துகிற இருள்
# சுற்றி வளைக்கப்பட்ட பாதுகாப்பு வலயம்
# ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்
# எலும்புக்கூடுகளை வெளியேற்றுவதற்கான வழி
# கடல் நுழைகிற மணற் பதுங்குகுழி
# அறிவிக்கப்பட்ட வலயத்தில் நிறைகிற சுடுமணல்
# தாகம் பாய்கிற நதிக்கான கனவு
# யாருமற்ற நகரின் தெருவினை மிதிக்கிற கொடு நிழல்
# சொற்ப எண்ணிக்கையாக்கப்பட்ட குழந்தைகள்
# சுற்றி வளைக்கப்பட்ட கிராமத்தின் சரணடைகிற பொதிகள்
# மரண நெடில் வெளி இரவு
# கைப்பற்றப்பட்ட நகரம் பற்றியெழுகிற பெருந்துயர்
# மற்றொரு நகரத்தை நோக்கி நடைபெறுகிற படையெடுப்புகள்
# மலைப்பாம்பு காப்பாற்றப்போகிற முட்டைகள்
# மாதா அழைத்து வைத்திருந்த மாடுகள்
# நீர் அறிந்திருக்காத சிலுவைகள்
# தேங்காய்களை தின்று அசைகிற கொடி
#முற்றுகையிடப்பட்ட நகரத்தின் பதுங்குகுழி
#மனிதாபிமானத்திற்கான படைநடவடிக்கை
#அண்மையில் மிதிபடுகிற கடல்
#மரங்கள் பின்வாங்குகிற இன்றிரவு
#நம்மைத் தொடருகிற போர்
#குழந்தைகளை இழுத்துச் செல்லும் பாம்புகள்
#அழிப்பதற்கு பிரகடனம் செய்யப்பட்ட நகரத்தின் கதிரைகள...
#அவகாசத்திற்குப் பிறகான படைநடவடிக்கை.
#பெரிய நகரை தின்கிற படைகள்
#போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்
#போர் தொடங்கும் குழந்தைகளின் கனவுகள்

வலைப்பதிவு பட்டியல்

Related Posts Plugin for WordPress, Blogger...