Blogger இயக்குவது.
| புதிய நூல்கள்: பயங்கரவாதி - டிஸ்வரி புக்பேலஸ் | நான் ஸ்ரீலங்கன் இல்லை - யாவரும் பப்ளிசர்ஸ் | நடுகல் டிஸ்வரிபுக் பேலஸ் | deebachelvan@gmail.com | 0772487257

செவ்வாய், 27 ஜனவரி, 2009

சொற்ப எண்ணிக்கையாக்கப்பட்ட குழந்தைகள்


----------------------------------------------------------------------------
தீபச்செல்வன்
____________________________________

எல்லாவற்றையும் நமது மண்ணிலிருந்து
துரத்தபடுகிற நாட்களில்
சுதந்திரம் பெருமனதுடன்
மரணத்தை வழங்க காத்திருக்கிறது.
இனவாதம் வடிவமைத்த
போர் நம்மை ஊடுருவி ஆளுகிறது.
வெல்ல முடியாதிருந்து
நமக்கெதிராயிருக்கிற யுத்தம்
ஆட்களற்ற நகரத்தை தோற்கடிக்கிறது.

கடலில் குதிக்கிற நகரத்தின்
சொற்பமற்ற எண்ணிகையான சனங்களுக்கு
எல்லாம் இத்தோடு முடிந்து போகிறது.
அகலமான கால்களினால் ஆக்கிரமிக்கிற யுத்தம்
சமாதானத்தை பேசுகிறது.

நாம் சொற்ப எண்ணிக்கையானவர்களாக
ஒதுக்கி முடிக்கப்படுகையில்
அழித்து முடிக்கப்படுகிற பயங்கரவாதிகளானோம்.
இனம் பற்றி வளர்த்த பேரெடுப்பு முடிகிற
கடைசி நிமிடத்திற்கென வருகிற
இனவாதப் புன்னகை
மனிதர்களை தின்றுகொண்டு வருகிற யுத்தமாகி
மனிதாபிமானம் பேசுகிறது.

கடைசியில் நமது சுயநலமும்
நமதினத்தை வாழ்நாள் சிறையிலடைத்தது.
இலங்கை ஈழத்தை கடலில் தாட்டு
தமிழர்களை புதைத்து கொடி ஏற்றுகிறது.
கடலில் இனி பொதிகள் சுமக்க விதிப்பட்டோம்.

நமது வாழ்வுரிமை முழுவதும் பலியிடப்படுகிறது.
துரோகங்கள் பிரித்தாடப்பட்டு
உலகம் பலிவாங்குகிறது.
நமது தேசம் முழுவதும் புதைக்கப்படுகிற
நடவடிக்கையில் நமதாயிருந்த வாழ்வு
பயங்கரவாதம் எனப்படுகிறது.

இனவாதம் சிறைக்குள் இழுத்துக்கொண்டு
கிட்டிய தூரத்தில் விடுவிக்கப்படுகிற
நாம் நிரந்தர அடிமைகளாக்கப்பட
காயமடைந்த உடலிலிருந்து
துண்டு மனம் வெளியேறுகிறது.

இனி எதையும் மனதின் ஆழத்திலும்
தேட முடியாதவர்களாக விதிப்படுகிறது.
ஏற்கடிமுடியாத அரசின்
ஆட்சியின் தாழ்வாரத்தில்
நிலத்திற்கான பெரும் வெறி மழையில் ஒதுங்குகிறோம்.
எல்லாம் இழந்தவர்களாக மாற்றப்படுகிறது.

வரலாறு மறந்தவர்களாக நிர்பந்திக்கப்பட
நமது குழந்தைகள் சொற்ப
எண்ணிக்கை ஆக்கப்பட்டனர்.
இனி நமக்கில்லை வாழுகிற தேசமும்
தொன்மையான பொருட்களும்
மிகவும் பசுமையான சொற்களும்.
எல்லாம் துரத்தப்பட
நமது இனம் பெரிய அகதியாக
அதனுடன் நிலமும் அழிகிறது.
-----------------------------------------------------------------------------
14.02.2009

3 கருத்துகள்:

தேவன் மாயம் சொன்னது…

இந்த நேரத்தில்,ஜாலியா எழுத முடியல.
பின் வரும் கவிதையை,நிறைய இடத்தில்
அழுது கொண்டே எழுதினேங்க!
ஒரு சிறு குழந்தையின் பார்வையில்....

King... சொன்னது…

இன்னமும் எப்படி எழுத முடிகிறது தோழா உன்னால்...

பிளாட்டினம் சொன்னது…

இலங்கை ஈழத்தை கடலில் தாட்டு
தமிழர்களை புதைத்து கொடி ஏற்றுகிறது.

முற்றிலும் உண்மை.

வன்னி வளைப்புப் பற்றிய கவிதைகள்

# ஆட்களை இழந்த வெளி
# அடருகிற இரவொன்றில் தின்னப்பட்ட கடல்
# பதுங்குகுழியைவிட்டு அலைகிற வெளி
# பந்துகள் கொட்டுகிற காணி
# மணலில் தீருகிற துயர்
# நிலம் பெயர்ந்தலைய வந்துவிடு
# பயமுறுத்துகிற இருள்
# சுற்றி வளைக்கப்பட்ட பாதுகாப்பு வலயம்
# ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்
# எலும்புக்கூடுகளை வெளியேற்றுவதற்கான வழி
# கடல் நுழைகிற மணற் பதுங்குகுழி
# அறிவிக்கப்பட்ட வலயத்தில் நிறைகிற சுடுமணல்
# தாகம் பாய்கிற நதிக்கான கனவு
# யாருமற்ற நகரின் தெருவினை மிதிக்கிற கொடு நிழல்
# சொற்ப எண்ணிக்கையாக்கப்பட்ட குழந்தைகள்
# சுற்றி வளைக்கப்பட்ட கிராமத்தின் சரணடைகிற பொதிகள்
# மரண நெடில் வெளி இரவு
# கைப்பற்றப்பட்ட நகரம் பற்றியெழுகிற பெருந்துயர்
# மற்றொரு நகரத்தை நோக்கி நடைபெறுகிற படையெடுப்புகள்
# மலைப்பாம்பு காப்பாற்றப்போகிற முட்டைகள்
# மாதா அழைத்து வைத்திருந்த மாடுகள்
# நீர் அறிந்திருக்காத சிலுவைகள்
# தேங்காய்களை தின்று அசைகிற கொடி
#முற்றுகையிடப்பட்ட நகரத்தின் பதுங்குகுழி
#மனிதாபிமானத்திற்கான படைநடவடிக்கை
#அண்மையில் மிதிபடுகிற கடல்
#மரங்கள் பின்வாங்குகிற இன்றிரவு
#நம்மைத் தொடருகிற போர்
#குழந்தைகளை இழுத்துச் செல்லும் பாம்புகள்
#அழிப்பதற்கு பிரகடனம் செய்யப்பட்ட நகரத்தின் கதிரைகள...
#அவகாசத்திற்குப் பிறகான படைநடவடிக்கை.
#பெரிய நகரை தின்கிற படைகள்
#போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்
#போர் தொடங்கும் குழந்தைகளின் கனவுகள்

வலைப்பதிவு பட்டியல்

Related Posts Plugin for WordPress, Blogger...