Blogger இயக்குவது.
| புதிய நூல்கள்: பயங்கரவாதி - டிஸ்வரி புக்பேலஸ் | நான் ஸ்ரீலங்கன் இல்லை - யாவரும் பப்ளிசர்ஸ் | நடுகல் டிஸ்வரிபுக் பேலஸ் | deebachelvan@gmail.com | 0772487257

புதன், 30 ஏப்ரல், 2008

ஒரு கமரா ஒளித்துக்கொண்டிருக்கிறது.

எழுதியவர்_____________________________
--------------------------தீபச்செல்வன்

------------------------------------------------------------------


குழந்தைகள் பூக்களை நிரப்பி
உன்னை வணங்கிச் செல்கிறார்கள்
தெயவம் என்ற பக்தியோடு
உன்மீது
சனங்கள் பாடி ஏற்றுகிறார்கள்
குருதி பிறண்ட
கமராவோடு இருக்கிறது உனது அறை.


சனங்கள் சனங்கள் பாடிய
எனது அன்புத்தோழனே
ஒரு நாள் நான் வருவேன்
சனங்களின்
கனவு நிரம்பிய நீயான கல்லறைக்கு.

சனங்களின் ஏக்கங்களை
அள்ளி நிரப்பி வரும்
உனது கமரா
களத்தில் தோளிலிருந்து
உதிர்ந்து விழுந்ததை
நான் நம்பாமலிருக்கிறேன்.

சனங்கள் துரத்தப்பட்ட கிராமத்தில்
ஒரு துப்பாக்கியோடும்
உனதான கமராவோடும்
நீ சமராடிய நிமிடங்களை
நான் நினைத்துப் பார்க்கிறேன்.

நஞ்சு நிரப்பிய
உனது சயனைட் குப்பியில்
பதுங்குகுழிச்சனங்களின்
கண்ணீரையும் கோபத்தையும்கூட
நிரப்பிவைத்திருந்தாய்
அது உனது கழுத்தில் தொங்கியபடியிருந்தது.

உனது ஒரு சூரியனின் முகத்தையும்
குழந்தையாய்
நெருங்கி வருகிற முகத்தையும்
உனது அறையில் நிரம்பியிருந்த
நமது வார்த்தைகளையும்
நான் எந்த களமுனையில் தேடுவேன்.

சீருடைகயையும்
துப்பாக்கியையும்
கமராவையும் இவைகளுடனான
உனது கடமையையும்
உனது அறையில் நான் தேடித்திரிகிறேன்
நாம் பருகிய தேனீர்க்கோப்பைகள்
அழுது கிடக்கிறது.

நீ களப்பலியானாய்
என்ற செய்தியை சொல்லிவிட்டு
ஒரு பறவை துடிக்கிறது
கனவில் நிரம்பிவிட்ட
கல்லறைகளில்
நான் உன்னை தேடியலைகிறேன்.

உனது கமராவிற்குள்
இன்னும் கேட்டுக்கொண்டேயிருக்கிறது
பதுங்குகுழிச்சனங்களின் அழுகை.

--------------------------------------------------------

மன்னார் களமுனையில் கார்த்திகை14 2007 இலங்கை இராணுவத்தினருடனான சமரில் எனது அன்புத்தோழன் கமராப் போராளி மேஜர் அன்பழகன் களப்பலியாகினான்.
-------------------------------------------------------------------

2 கருத்துகள்:

ஃபஹீமாஜஹான் சொன்னது…

தீபச் செல்வன்

"சீருடைகயையும்
துப்பாக்கியையும்
கமராவையும் இவைகளுடனான
உனது கடமையையும்
உனது அறையில் நான் தேடித்திரிகிறேன்
நாம் பருகிய தேனீர்க்கோப்பைகள்
அழுது கிடக்கிறது.

நீ களப்பலியானாய்
என்ற செய்தியை சொல்லிவிட்டு
ஒரு பறவை துடிக்கிறது
கனவில் நிரம்பிவிட்ட
கல்லறைகளில்
நான் உன்னை தேடியலைகிறேன்"

மரண ஓலங்கள் சதா அலையும் மண்ணிலிருந்து வரும் வரிகளின் அவலக் காட்சிகள் எம் கண் முன்னே விரிகின்றன.
ஆறுதல் தரக் கூடிய எந்ந வார்த்தையும் எம்மிடத்தில் இல்லை.
மன்னியுங்கள்.
கவிதையைப் படித்து விட்டு பேயறைந்தமாதிரி கணினித் திரையைப் பார்த்துக் கொண்டிருக்கத்தான் முடிகிறது

Theepachelvan சொன்னது…

அன்புடன் பஹீமாஜஹான்

உங்கள் தொடர்ந்த கருத்துக்கு நன்றி

அன்புடன் தீபச்செல்வன்.

வன்னி வளைப்புப் பற்றிய கவிதைகள்

# ஆட்களை இழந்த வெளி
# அடருகிற இரவொன்றில் தின்னப்பட்ட கடல்
# பதுங்குகுழியைவிட்டு அலைகிற வெளி
# பந்துகள் கொட்டுகிற காணி
# மணலில் தீருகிற துயர்
# நிலம் பெயர்ந்தலைய வந்துவிடு
# பயமுறுத்துகிற இருள்
# சுற்றி வளைக்கப்பட்ட பாதுகாப்பு வலயம்
# ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்
# எலும்புக்கூடுகளை வெளியேற்றுவதற்கான வழி
# கடல் நுழைகிற மணற் பதுங்குகுழி
# அறிவிக்கப்பட்ட வலயத்தில் நிறைகிற சுடுமணல்
# தாகம் பாய்கிற நதிக்கான கனவு
# யாருமற்ற நகரின் தெருவினை மிதிக்கிற கொடு நிழல்
# சொற்ப எண்ணிக்கையாக்கப்பட்ட குழந்தைகள்
# சுற்றி வளைக்கப்பட்ட கிராமத்தின் சரணடைகிற பொதிகள்
# மரண நெடில் வெளி இரவு
# கைப்பற்றப்பட்ட நகரம் பற்றியெழுகிற பெருந்துயர்
# மற்றொரு நகரத்தை நோக்கி நடைபெறுகிற படையெடுப்புகள்
# மலைப்பாம்பு காப்பாற்றப்போகிற முட்டைகள்
# மாதா அழைத்து வைத்திருந்த மாடுகள்
# நீர் அறிந்திருக்காத சிலுவைகள்
# தேங்காய்களை தின்று அசைகிற கொடி
#முற்றுகையிடப்பட்ட நகரத்தின் பதுங்குகுழி
#மனிதாபிமானத்திற்கான படைநடவடிக்கை
#அண்மையில் மிதிபடுகிற கடல்
#மரங்கள் பின்வாங்குகிற இன்றிரவு
#நம்மைத் தொடருகிற போர்
#குழந்தைகளை இழுத்துச் செல்லும் பாம்புகள்
#அழிப்பதற்கு பிரகடனம் செய்யப்பட்ட நகரத்தின் கதிரைகள...
#அவகாசத்திற்குப் பிறகான படைநடவடிக்கை.
#பெரிய நகரை தின்கிற படைகள்
#போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்
#போர் தொடங்கும் குழந்தைகளின் கனவுகள்

வலைப்பதிவு பட்டியல்

Related Posts Plugin for WordPress, Blogger...