Blogger இயக்குவது.
| புதிய நூல்கள்: பயங்கரவாதி - டிஸ்வரி புக்பேலஸ் | நான் ஸ்ரீலங்கன் இல்லை - யாவரும் பப்ளிசர்ஸ் | நடுகல் டிஸ்வரிபுக் பேலஸ் | deebachelvan@gmail.com | 0772487257

புதன், 16 ஜனவரி, 2008

யுத்தத்தின் பின்னரான நிறுத்தமும் பிரகடனமும்


தூங்க மறுக்கும் குழந்தைமீது
தாயின் பாடல்
மிக மெல்லியதாக படர்கிறது.

நள்ளிரவு அதிரக் கூவுகிற
வெளுறிய கொண்டையுடைய சேவலின்
தொண்டைக்குழியில்
எறிகனைபோய்
சிக்கிக்கொள்கிறது.

தறிக்கப்பட்ட
பனைமரங்களில் வழியும் சொற்களை
சூன்யப்பிரதேசத்தில் திரியும்
குட்டையடைந்த நாய்
முகர்ந்து பார்க்கிறது.

குழந்தைகள்
தூக்கி எறியப்பட்ட நாட்டிலிருந்து
சூரியன் விலகுகிறது.

திசைகளை விழுங்கும் இராணுவ
தொலைத்தொடர்பு கோபுரத்தில்
திடுக்கிட்டு எழும்பும்  குழந்தையின்
அதிர்வு நிரம்பிய பாடல்
பதிவாகிக்கொண்டிருந்தது.

அதில்
குரல் பிடுங்கி எறியப்பட
பேசும் பறவையின்
வேகமும் சிறகுகளும்
காயப்பட வீழ்கிறது.

இடைவெளிகளில் மிதக்கும்
நாற்காலிகளில்
இருள் வந்து குந்தியிருக்கிறது.

கருவாடுகளை குத்தி குருதி
உறிஞ்ச முனையும் நுளம்புகளை
பூனைகள் பிடித்துச் சாப்பிடுகின்றன.

தலைகளை பிடுங்கி எறிகிற
அதிவேகத்தோடு
மக்களின் குடிமனைகளிற்குளிருந்து
எறிகனைகள் எழும்பி பறக்கின்றன.

முழு யுத்தத்திற்கான பிரகடனமாக
குட்டையடைந்த நாய்
பெரியதாய் ஊழையிடுகிறது.

வீட்டு வாசலில்
வந்து நின்ற போர்
கதவை சத்தமாக தட்டுகிறது.

குழந்தை ஒலி அடங்கி அழுகிறது.
0

16.01.2008

இன்று இரவு ஏழு மணியுடன், இலங்கை அரசாங்கம்  தமிழீழ விடுதலைப்புலிகளுடன், 2002இல் செய்துகொண்ட போர் நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து ஒருதலைப்பட்டசமாக விலகிக்கொள்வதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது. தமிழ்மக்கள்மீதான பாரிய இன அழிப்புப் போர் ஒன்றையே இலங்கை அரசு பிரகடனப்படுத்தியுள்ளது. பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற போர்வையில் இவ் இன அழிப்புப் போரை மேற்குலகம் மௌனத்தால் ஆதரிக்கிறது.

1 கருத்துகள்:

M.Rishan Shareef சொன்னது…

//16.01.2008 இன்று இரவு ஏழு மணியுடன் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும், இலங்கை அரசாங்கத்திறிகும் இடையில் இருந்த-வெற்று வார்த்தையில் அடைக்கப்பட்டிருந்த யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை இலங்கை ஒருதலைப்பட்டசமாக முறித்துக்கொள்கிறது. தமிழ்மக்கள்மீது பாரிய போர் ஒன்றை இலங்கை அரசு பிரகடனத்துடன் திணிக்கத்தொடங்குகிறது. இந்தப்போரினால் தமிழர்களுடன். அப்பாவி முஸ்லீம்மக்கள்,அப்பாவிசிங்களமக்கள் கூட பாதிக்கப்படப்போகிறார்கள். பங்கரவாதத்திற்கு எதிரானது என்ற போர்வையில் இந்தப்போரை மேற்குலகம் ஆதரிக்கிறது என்றே கருதுகிறோம்.//

நிர்க்கதி நிலையில் நாம் அனைவரும்.
ஒரு மனிதனுக்குப் பயந்து இன்னொருவன் ஓடி...
சக மனிதனையே சந்தேகங்கொள்ள வைத்து...
இயந்திரப் பிசாசுகளின் ஒவ்வொரு ஓசைகளுக்கும் அடிமனதில் ஆழப்பயங்கொண்டு...

என்று தீரும் இந்நிலை?

//வீட்டு வாசலில்
வந்து நின்ற போர்
கதவை சத்தமாக தட்டுகிறது.//

கவிதையை மேலும் ஆழப்படுத்துகிறது இவ்வரிகள்.
பாராட்டுக்கள்.

வன்னி வளைப்புப் பற்றிய கவிதைகள்

# ஆட்களை இழந்த வெளி
# அடருகிற இரவொன்றில் தின்னப்பட்ட கடல்
# பதுங்குகுழியைவிட்டு அலைகிற வெளி
# பந்துகள் கொட்டுகிற காணி
# மணலில் தீருகிற துயர்
# நிலம் பெயர்ந்தலைய வந்துவிடு
# பயமுறுத்துகிற இருள்
# சுற்றி வளைக்கப்பட்ட பாதுகாப்பு வலயம்
# ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்
# எலும்புக்கூடுகளை வெளியேற்றுவதற்கான வழி
# கடல் நுழைகிற மணற் பதுங்குகுழி
# அறிவிக்கப்பட்ட வலயத்தில் நிறைகிற சுடுமணல்
# தாகம் பாய்கிற நதிக்கான கனவு
# யாருமற்ற நகரின் தெருவினை மிதிக்கிற கொடு நிழல்
# சொற்ப எண்ணிக்கையாக்கப்பட்ட குழந்தைகள்
# சுற்றி வளைக்கப்பட்ட கிராமத்தின் சரணடைகிற பொதிகள்
# மரண நெடில் வெளி இரவு
# கைப்பற்றப்பட்ட நகரம் பற்றியெழுகிற பெருந்துயர்
# மற்றொரு நகரத்தை நோக்கி நடைபெறுகிற படையெடுப்புகள்
# மலைப்பாம்பு காப்பாற்றப்போகிற முட்டைகள்
# மாதா அழைத்து வைத்திருந்த மாடுகள்
# நீர் அறிந்திருக்காத சிலுவைகள்
# தேங்காய்களை தின்று அசைகிற கொடி
#முற்றுகையிடப்பட்ட நகரத்தின் பதுங்குகுழி
#மனிதாபிமானத்திற்கான படைநடவடிக்கை
#அண்மையில் மிதிபடுகிற கடல்
#மரங்கள் பின்வாங்குகிற இன்றிரவு
#நம்மைத் தொடருகிற போர்
#குழந்தைகளை இழுத்துச் செல்லும் பாம்புகள்
#அழிப்பதற்கு பிரகடனம் செய்யப்பட்ட நகரத்தின் கதிரைகள...
#அவகாசத்திற்குப் பிறகான படைநடவடிக்கை.
#பெரிய நகரை தின்கிற படைகள்
#போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்
#போர் தொடங்கும் குழந்தைகளின் கனவுகள்

வலைப்பதிவு பட்டியல்

Related Posts Plugin for WordPress, Blogger...