Monday, October 22, 2007

சைனைட்டுக்களின் வெளியில்..

_______________________________________
--------------------------கவிதை:தீபச்செல்வன்
__________________________________________

ரண்டு சைனைட்டுக்களிடையே
இந்த தோழமை
வளர்க்கப்பட்டிருக்கிறது
இரண்டு துப்பாக்கிகளிடையே
இந்த தோழமை
வளர்க்கப்பட்டிருக்கிறது
இரண்டு சீருடைகளிற்கிடையே
இந்த தோழமை
வளர்க்கப்பட்டிருக்கிறது
பிரித்துப்பார்க்க முடியாத
சிந்தனையின் தாய்மையில்.

பொதுமைப்பட்ட
உன் புன்னகையின்
அர்த்தத்தை நான் மட்டும்
பிரித்து வாசித்திருக்கிறேன்.
அக்கறையான
உன் அழுகையை
நான் மட்டும்
பிரித்து வாசித்திரக்கிறேன்.
நீயில்லாத
நானில்லாத வெளிகளும்
நெருக்கங்களும்
உள்ள இலக்கின் இணைப்பில்.

உனது முகத்தில்
கசிந்த வாசத்தை
நுகர்ந்திருக்கிறேன்.
உனது விழியில் தெரிந்த
பரிவான பார்வையை
உணர்ந்திருக்கிறேன்.
உனது விரைந்த
செயலின் ஆழத்தை
பார்த்திருக்கிறேன்.
நமது இலக்கின்
ஒருமைக்குள் தாய்மையடைந்து
சுதந்திரத்தை பிரசவிக்கும்
புனிதமான சீருடைக்குள்.

நமது தோழ்களின்
வெளியில்
மக்கள் கண்துங்கிறார்கள்.
நமது சைனைட்டுக்களின்
வெளியில்
மக்கள் புன்னகைக்கிறார்கள்.
நமது துப்பாக்கிகளின்
வெளியில்
மக்கள் கைகளை வீசுகிறார்கள்.
நமது சீருடைகளின்
வெளியில்
கடமை அணிவகுக்கிறது.

நமது பிரிவில்
பாதிஉறவுகள் மீண்டிருக்கிறார்கள்.
உனது மௌனத்தில்
பாதித்தேசம் விடிந்திரக்கிறது.
--------------------------------------------------------------------

Sunday, October 21, 2007

நீ இரத்தம் சிந்திய தெருக்கள்

_______________________________________
--------------------------கவிதை:தீபச்செல்வன்
__________________________________________



நமது சந்திப்புக்கள் ஒவ்வொன்றும்
ஆயுளை விட பெரியன
இடங்களும் சொற்களும்
காயபமல்
தேனீர் கோப்பைகளை
நிரப்பியிருக்கின்றன.

உன்னிடம் தான்
நான் நிறைய சொற்களை
கவிதைகளாயும்
பாடல்களாயும்
வாங்கியிருக்கிறேன்.

ஒவ்வொரு சொற்களிலும்
உனது ஒளிபடர்ந்த முகமும்
கருனை கலந்த குரலும்
அடர்ந்திருந்தன.

குறிப்பாக மாலை நேரங்களில்
உனது முகத்தை
மஞ்சள் வெயிலில் பரப்பி
வீட்டுக்கு வருவாய்
எனது வெள்ளை சீருடைகளில்
எனது புத்தகங்களில்
என்னை மறைத்து வைப்பேன்

உனக்கு ஆறுதலலித்த
எனது வீடும் எனது முகமும்
பாதுகாப்பளித்த விழிகளும்
பெருமையில் அழுகின்றன.

உன்னிடம் தான்
கருனையின் புன்னகையை
பார்த்திருக்கிறேன்
உன்னால் தான்
ஒரு தயைப்போல அணுகமுடியும்.

யாரும் குறித்து வைக்காத
நமது சந்திப்புக்களை
இடங்களை சொற்களை
தூரத்தில் விட்டு
உனது வேளைகளுக்காக
துடிக்கிறேன்.

எல்லாம் தெருக்களில் மறைந்தன.

நீ பகிர்ந்த தாய்மையை
உனது இலட்சியத்தை
துணிவை சாதனையை
தோள்களின் பலத்தை
இழந்து விடுவேனோ
அச்சமடைந்திருக்க
இருளின் கல்லறைக்குள்ளும்
வெளியிலும்
நடமாடுவதைப்போல
உனது முகம் தெரிகிறது.

கடைசிவரைக்கும்
நாம் திரிந்த
குறுக்குத் தெருக்களில்
உனது சைக்கிள் எங்கேனும்
நிறுத்தப்பட்டிருக்கிறதா என்று
தேடியபடி இருப்பேன்.

நீ விரும்பிய பிரதான தெருக்களில்
திரியும் அங்கலாய்ப்பு
நமது நகரின் வாசலுக்கு
மடிந்து கொண்டு வருகிறது
அந்த தெருக்களுக்காக
மரங்களுக்காக
நீ இரத்தம் சிந்தினாய்
நான் வியர்வையேனும் சிந்துவேன்.

என்றேனும் ஒருநாள்
நமதுநகரின் பிரதானதெருவில்
உனது சைக்கிள் நிறுத்தப்பட்டிருக்கம்.
--------------------------------------------------

Friday, October 19, 2007

தேவராசா

_____________________________________
--------------------------கவிதை:தீபச்செல்வன்
__________________________________________


ல்லாச் சிறுவர்களும்
தேவராசா
என்று சிரிக்கிறார்கள்
எல்லோருக்கும்
தேவராசாவின் இயல்பில்
சிரிப்பு வருகிறது
எதையும் அவன்
அறியாது பேசுகிறான்..


தேகத்தில்
புளுதியை அள்ளி தானே
பூசிக்கொண்டிருந்தான்
கையில் ஐந்துரூபாய்
றப்பர் பை ஓட்டையுடனிருந்தது.
அவற்றுள் கிழிந்தும் கிழியாததுமாய்
ஒரு சில புத்தகங்களிருந்தன.

அவனின் மேல் சட்டை
பொத்தான்கள்
மாறி மாறி பூட்டப்பட்டிருந்தன.
அவனின் காற்சட்டை
ஒரு பக்கம் கிழிந்து
கயர் பிரண்டிருந்தது.

வயதாகியும்
அவனுக்குள் சரிப்படாத
தடங்கல் பேச்சு
அதுவும்
பார்ப்பவர்களுக்கு
சிரிப்பூட்டுகிறது.

அப்பாவை ஆமி
சுட்டுட்டான்
அம்மா வேலைக்கு போட்டுது
சோறு கொண்டருமே
நான் திரும்ப திரும்ப கேட்க
விளங்க முடியாத
அவனின் மொழி
கவிதையாடுகிறது.
தன்பாட்டில்
தேவாரங்களை அனுபவித்து
பாடுகிறான்.

தேவராசாவின்
யாருக்கோ எதற்கோவான
நேர்மை
கீழே எறியப்பட்டு
மணலில் புதைந்து தெரியும்
காலாவதியான பென்சில்களை
எடுக்கலாமா என்கிறது.

கொப்பியும் பென்சிலும்
வாங்கித்தரும்படி
கேட்கிறது
என்னுடனான அவனின் உரிமை.

படிப்பு சொல்லித்தரும்படி
கேட்கிறது அவனின்
அவசியமான அக்கறை.

தேவராசா
புத்தகங்களை எடுத்து
வாசிக்கத் தொடங்கிவட்டான்.
--------------------------------------------------------------
19.01.2006 பளையில் தேவராசா என்ற இந்த சிறுவனை சந்தித்தேன்..
-----------------------------------------

மழை நாட்களின்

இரவுகளும் தெருக்களும்..

_______________________________________
--------------------------கவிதை:தீபச்செல்வன்
__________________________________________


மாடுகள் தெரு மரங்களில்
உறைந்திருக்க மழை பெய்யும்
ஓடைகளை தாண்டி
விடுதி அறைகளில்
கூட்டம் பொங்கும்
சூழலைப்பபற்றியும்
மொழியைப்பற்றியும்
சிந்திக்காதபடி
விடுதி அறைகள் கிறுக்கியிருக்கும்.

குறிப்பாக மழை நாட்கள்
தண்ணீரில் புளுதிகிளப்பி
மின் குமிகள் சிரிக்கும்.

சாளரங்களை திறந்து
ரசிப்பவனும்
குளிர் தாங்காது மூடுபவனும்
மின்கம்பிகளின் அடியில்
இருட்ட உருவங்களுக்கு
அஞ்சுபவனும்
சானரங்களோடு கட்டிபுரளுவான்கள்.

எப்படியும் ஒருவன்
இரவு பற்றி நிதானமாயிருப்பான்
கதவுகளை இறுக்கி
பாதுகாப்பான்
இரவை அமத்தும் அவனை மீறி
கூச்சல் போடும் மீதிப்பேரும்
அடிக்கடி தூரத்தில்
துப்பாக்கிகளை
அண்மித்து வருவார்கள்.

முன்னைய மழை நாட்கள்
இரவுகள் தெருக்கள்
என்று ஒருவன் தொடங்குவான்.

புத்தகங்கள் ஒதுங்கிப்போகும்.

குடைவாங்க நனைந்துபோகும்
மழையாய் எப்போதும்
அவன் நனைந்தபடியிருப்பான்
தெருக்குழாய் நீரில்
முகம் கழுவி
உறங்கும் நிறைவும்
எந்த நேரமும் இயங்கும்
சைக்கிளுமாய்
கடைகளில் திரிவான்.

இரவு, மழை, தெருக்கள்
வேறுபாடின்றி
இணைந்திருக்கம்.

யாரும் துப்பாக்கிகளோடு
தொடர்பில்லாதவர்கள்
புத்தகங்களை விரித்து
கல்லிருக்கையிலிருந்து
மரங்களை எண்ணுபவர்கள்.

ஆனாலும் துப்பாக்கிகள் நீண்டன
கதவுகளை தாண்டி
புத்தகங்களை நோக்கி நீண்டன
மழைநாட்களின் இரவில்
மின் விளக்குகள்
அணைந்தது
மழை இரவு இருளை நிரப்பிக்கிடந்தது.
------------------------------------------

அப்பாவின் குளக்கரை..

_______________________________________
--------------------------கவிதை:தீபச்செல்வன்
__________________________________________



னக்கு தேவாரம்
பாடத்தெரியவில்லை
அப்பா குளிக்க மூழ்கிய
குளக்கரையின்
ஏதிர்த்திசையில்
ஆவதானிக்கிறேன்
ஞானப்பாலூட்டுவதற்கு
கடவுளோ
அவரின் மனைவியோ
வருவதாயில்லை..

நான் தொடர்ந்து
அழுது பார்க்கிறேன்
எனது அழுகையின்
பக்கத்தில்
பலரும் போய்வருகிறார்கள்
என் அழுகை குறித்து
விசாரிக்க எவருமில்லை
அவரவர்
தங்கள் வண்டிகளில்
பார்வைகளை செலுத்தியபடி
அதை ஓட்டிப்போகிறார்கள்..

எனக்கு தாகமெடுக்கிறது
ஞானப்பால் குறித்த
நினைவுகளில்
இப்போது
தேனீர் வண்டிக்காரனின்
சில்லரைக்காசுகளின் சத்தம்
வியாபார முழக்கமிடுகிறது...

அந்த தேனீர் வண்டிக்காரனும்
கடவுளாகவோ
அவரின் மனைவியாகவோ
இருக்க முடியாது..

மூன்று வயதின்
ஞானப்பால் நினைவை
அந்தக் குளக்ரையில்
வீசியிருக்கிறேன்..

இப்பொழுதும் அந்த வழியில்
போய்வருகிறேன்
அப்பா குளித்து
கரையேறாத
அந்தக் குளக்கரையில்
எனது பார்வைகளை
செலுத்துவதில்லை..
------------------------------------------------------------

Wednesday, October 17, 2007

பசுமைகள் தலைசிதறின

--------------------------கவிதை:தீபச்செல்வன்
__________________________________________


ந்தத் தென்னை மரத்தின்
தலை சிதறியிருந்தது
அதன் உடல் எல்லாம்
கிழிந்து
இரத்தம் கொட்டியது
துயரத்தை ஏற்றிய
கொடிபோல
அது நின்றுகொண்டிருந்தது.

வீதிகளில் பசுமை
வறண்டுபோய் கிடந்தது
கடைகிளில்
குடிப்பதற்கு குருதிறே
அதுவும் விற்பனையில்..
சதைகதைராசில் போட்டபடி
சிதறிய தலைகளுக்கு
விவாதிதித்தார்கள்.

பசுமை கவிதைகளை
விற்கவந்த நாடோடிகள்
முகங்களை உடைத்து
அழுகைகளை சம்பாதித்தனர்
சிரித்தபடி வந்தவர்கள்
அழுகை கொண்டே போனார்கள்.

அவர்கள் வந்து பார்த்தார்கள்.

எல்லோரும் இரைச்சலுக்காக
விழுந்து கிடந்தோம்
சிலர் சிழுந்த இடங்களிலேயே
கல்லறை எழும்பியது
உறவுகளும் மகிழ்வுகளும்;
தலைசிதறி மயானமாய் கிடந்தன.

என் இரண்டு வயது
பிள்ளையும்
பதுங்கி கிடந்த இடத்தில்
நடு கல்லாயிருந்தாள்
அவளை அணைத்தபடி
என் பசுமையும்
தலை சிதறி கிடந்தது

அதையும் அவர்கள்
பார்த்திருக்க வேண்டும்.



அந்த நெரிசலில்
அவர்கள் என் தொலைந்த
பசுமையை தேடித்தர இயலாது.

போகும் போது
பிணங்களை விலக்கியே
அவர்களால் போக முடிந்தது.

அவர்கள் வரும்போது
நான் நம்பினேன்
எல்லாம் பசுமையாய் இருக்குமென்று

இருந்தாலம்
அவர்கள் நெடுகபார்ப்பார்கள்
போன பிறகும் பார்ப்பார்கள்.

தலைசிதறித்தெரியும் - அந்த
தென்னைமரத்தின் வழியே
தேடப்படும் எங்கள் பசுமையை
-----------------------------------------
09.11.2006 அன்று வாகரையில் பாடசலை-அகதிமுகாம் மீது இலங்கை இராணுவம் நடத்திய எறிகனைத்தாக்குதலில் 50க்கு மேற்பட்ட அப்பாவிப்பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
-------------------------------------

Tuesday, October 16, 2007

இரவு நட்சத்திரங்கள்


----------------------------
கவிதை:தீபச்செல்வன்
---------------------------------------------------------------------------
இந்த இரவு
நட்சத்திரங்கள் பூட்டப்பட்டதைப்போலிருக்கிறது
ஓரு திருப்தியோடு மதுக்கோப்பைகளை
தூக்கி அருந்தமுடிகிறதில்லை
நான் அடிக்கடி வானத்தைப் பார்க்கிறேன்
எங்களால் எப்படி
இந்த செயற்கை மகிழ்ச்சியோடு
வாழ்ந்துவிட முடிகிறது.

ஓரு விருந்து ஓழுங்குசெய்யப்பட்டிருக்கிறது
நாம் பேசுகிறோம்
உன்னைப்பற்றி என்னைப்பற்றி
எங்களைப்பற்றி
எங்களை சூழ்ந்திருப்பவை பற்றி
மனந் திறந்து பேசுகிறோம்.

எங்களோடு கூடியிருந்த நண்பன்
களத்தில் மரணித்ததுபற்றி
நினைவுகொள்கிறோம்
எல்லைகளில் அடிக்கடி
மூளும் போரைப்பற்றி பேசுகிறோம்
துப்பாக்கிகளோடு எந்நேரமும்
எல்லைகளில் விழித்திருக்கும்
போராளிகளைபற்றி பேசுகிறோம.

எங்களால் பாடல்களை இசைக்கமுடிகிறது
சிகரட் விரலிடுக்கில்
புகைந்துகொண்டிருக்கிறது
மதுக்கோப்பபைகள்
சிதறலாக தெரிகின்றன.

எனினும் நாம் எதைப்புரிந்தோம்
நமது தோள்கள்
உதிர்வதைப்போலிருக்கின்றன
நேற்று எங்களோடிருந்த
இந்த மேசையின் நண்பன்
எதுவும் சொல்லாமல் நாட்டைவிட்டு
ஓடிப்போயிருக்கிறான்.

நாம் நிறையவற்றை அறியாதிருக்கிறோம்
மலரவேண்டிய இடத்தில்
மௌனமாயிருந்து உதிருகிறோம்
மதுக்கோப்பைகளின் இருட்டில்
நெருங்கியிருக்கும் நமதன்புகளை
எந்தக்காலையில் உலர்த்தப்போகிறோம்.

நாம் எந்த நிதானத்தை பற்றி
பேசவேண்டும்
எந்த புரிதலும் வார்த்தைளும்
நமக்கு தேவைப்படுகின்றன
பிரகாசமும்
மங்களலும் எங்கிருக்கிறது.

நாம் எந்த பாடல்களை
இசைக்கவேண்டும்
எங்களுக்கு மதுவை
சேவகம் செய்பவனின் வியர்வைத்துளிகள்
பியர்கள்மீது படுகின்றன
அவனிடம் ஒரு நிறைந்த
புன்னகை இருக்கிறது
ஓவ்வொரு காலையிலும்
அவனின் முகம் பிரகாசமடைகிறது.

மதுக்கோப்பைகளிலும்
சிகரட்டுக்களிலும் கலந்துகிடக்கும்
இந்த வெளிச்ச சூழலின்
ஆயுளைப்பற்றி என்ன பேசினேன்?
சிலவேளை நான் தவறாய் பேசலாம்
இந்த மேசையில் நிறைய விடயங்களை
புரியமுடியும்
நெருக்கத்தை பரிமாறமுடியும்
ஆதரவும் பலமும் பிறக்கமுடியம்
வார்த்தைள் கடும் அர்த்தமாயிருக்கும்
நாம் அறியவேண்டியவை
நிறைய இருக்கிறது.

நான் தள்ளாடுகிறேன்
சிகரட்டின் நுனியில் குடிவாழும்
நெருப்பை இழத்தபடி
இரவில் வெளிச்சம் தீர்வதுபோலிருக்கிறது.

பாடல்களை நிறுத்துகிறோம்
வானத்திற்கு காதெறிகிறோம்
வேவு விமானம் சுற்றுகிறது
அவதானத்துக்கான நேரம் வருகிறது
வானத்தில் நட்சத்திரங்களை காணவில்லை
சிகரட்டுகள் அணைகின்றன
மதுதீர்ந்த கோப்பைகளை
சேவகன் எடுத்துப்போகிறான்
மேசை வெளிக்கிறது
நாம் இரவின் நடுவிலிருக்கிறோம்।

பதுங்குகுழியை இன்றும் கூட
சுத்தம்செய்ததுபோலிருக்கிறது.
--------------------------------------------------------
14।10.2007 கிளிநொச்சி 1-9 தங்ககத்தில் ஒரு விருந்து நடைபெற்றது.
---------------------------------------------------------------

கிராமங்களை விட்டு

வெளியேறியவர்களின் பாடல்கள்


-----------------------------------------------------------------கவிதை:தீபச்செல்வன்
___________________________________________________________________________________
தானியங்கள் வீடுகளில்
நிரம்பிக்கிடக்கின்றன
வீடுகள் நிரம்பிய
கிராமங்களைவிட்டு
நாங்கள்
வெளியேறிக்கொண்டிருக்கிறோம்.

துயரத்தின் பாதைகள்
பிரிந்து நீள்கின்றன
எல்லா பாதைகளும்
தலையில்
பொதிகளை சுமந்திருக்கின்றன.

எல்லோரும் ஒருமுறை
நமது கிராமங்களை
திரும்பிப்பாருங்கள்
இப்பொழுதே
தின்னைகள் சிதைந்துவிட்டன
வீடுகள்
வேரோடு அழிந்து விட்டன.

ஒரு துண்டு நிலவுதானே
வானத்தில் எஞ்சியிருக்கிறது
அடர்ந்த மரங்களுக்கிடையில்
காடுகள் வரைந்த வீதிகளில்
நாங்கள் எங்கு போகிறோம்.

எனது அம்மாவும்
ஏதோ ஒரு வழியில்
போய்க்கொண்டிருக்கிறாள்.
நான் எங்காவது
அம்மாவை சந்திக்கலாம்.

எனது வயதிற்கும்
எனது உருவத்திற்கும் ஏற்ற
பொதி ஒன்றை
நான் சுமந்திருக்கிறேன்
எனது அம்மாவும்
தனக்கேற்ற
பொதி ஒன்றை சுமந்தே
போய்க்கொண்டிருக்கிறாள்.

இந்த பொதிகளை
வைத்து
நாம் ஒரு வாழ்வை
தொடங்கப்போகிறோம்
எங்கள் வானம்
பறிக்கப்பட்டு விட்டது
எங்கள் நட்சத்திரங்கள்
பறிக்கப்பட்டு விட்டன.

செல்கள் முற்றங்களை
மேய்கின்றன
முற்றங்கள் சிதைந்து
மணக்கின்றன
விமானங்கள் வானங்களை
பிய்க்கின்றன
கிராமங்களை தின்னுகின்றன
வீதிகளை இராணுவம்
சூறையாடுகிறது.

எங்ள் கிராமங்களை
விடுவித்துக்கொண்டதாக
அரச வானொலி அறிவிக்கிறது.

சாம்பல் நாகரிகத்திற்கு
கிராமங்களை
பறிகொடுத்து விட்டு
போவதைப் போலிருக்கிறது
நதிகள் வற்றிவிட்டன
நமது பறவைகளின்
முட்டைகள்
கரைந்து விட்டன.
வேர் சிதைந்துகொண்டிருக்கிறது

இனி நாங்கள்
ஒரு துண்டு தரப்பாலுக்கு
திரியப்போகிறோம்
ஒரு மரத்தை தேடி
அலையப்போகிறோம்.

உற்றுப்பாருங்கள்….
இங்கு இரவாயிருக்கிறது.

நாங்கள் கறுப்பு மனிதர்கள்
கறுப்பு பொதிகளை
சுமந்தபடி
நிழல் வீடுகளை
பறிகொடுத்து விட்டு
சிறுதுண்டு நிழலுக்காக
எங்கோ போய்க்கொண்டிருக்கிறோம்.
………………………………………………………………………………

Sunday, October 14, 2007

இராப்போசனம்!

_______________________
எழுதியவர்:தீபச்செல்வன்
_______________________

னக்கும் எனக்குமான
சமன்பாடுகளில்
சரிவு வந்துவிட்டது
அசாதாரணங்களின்
அடம்பிடிப்புகளால்.

உன்னை நானும்
என்னை நீயும்
அடியோடு
மறந்துகொள்ள
முயற்சிப்போம்
எங்களுக்கான
மரணங்கள் வரை.

எங்களுக்கான
இறுகிய உறவு
எதையோ
அச்சுறுத்தல் செய்யுமெனில்
அதை அறுத்துவிடல்
நமக்கே நல்லது.

உன்தோள்களில்
நான் கைபோட்டுக்கொண்டதும்
உன்னால்
என் கண்ணீர்
துடைக்கப்பட்டதும்
ஒரு துரதிஸ்டக்காரனாய்
எனக்குள்
நானே கண்ட
கனவாய்போகட்டும்.

அதெப்படி என்னை
சிலுவையில்
அறையப்போகிறார்கள்
என்றதும்
உன்னால் என்னை
உதறமுடிந்தது
நான் இயலாதிருக்க.

எங்களுக்குள்
நிகழ்ந்து முடிந்த
இந்த
இராப்போசனத்தை மட்டும்
அடிக்கடி நினைத்துப்பார்
நாம் நமக்குள் இருப்போம்.
-----------------------------------------------------

கீறல்பட்ட முகங்கள்


கவிதை___________________________
--------------------------தீபச்செல்வன்
________________________________________

------------------------------------------------------------------


ங்கள் கொடிகள்
உயரவே பறக்கிறது
உங்கள்
குரலும் முகமும்
எங்களை கீறீ
நிறையவே வலிமையை
சாதித்துவிட்டது.

குண்டுகளால் காயப்பட்ட
எமது முகங்கள்
மறைக்கப்பட்டிருக்கின்றன
அலறிவிடாமல்
காயங்கள் நசுக்கி
மருந்திடப்பட்டிருக்கின்றன.

நாங்கள் மறைந்திருந்தபடி
மிக தொலைவிலிருந்தே
பேசுகிறோம்
குருதி பீறிட
உங்கள் நகங்களால்
கீறப்பட்ட
எமது முகங்களை
நீங்கள் விரும்பியபடி
யாரும் பார்க்கமுடியாது.

அதனால் தொடர்ந்தும்
நீங்கள் எல்லோரும்
விமானங்களையும்
குண்டுகளையும்
எறிகணைகளையும்
உற்பத்திசெய்யுங்கள்.

எமது முகங்களில்
நீங்கள் செய்த
விஞ்ஞானங்களை
எறிந்து காயப்படுத்தி
சரி பார்த்துக்கொள்ளுங்கள்.

எங்கள் முகங்களுக்காகவே
இன்னும் புதியவைகளை
சிந்தனை செய்தும்
பரிமாறுங்கள்.

உங்கள் சாதனைகளின்
ஒளிப்பதிவுகள்
இதோ வருகிறது
உலகம் முழுவதிலும்
முக்கியமாக
காண்பிக்கப்படுகிறது
உங்கள் உற்பத்தி
குறித்தே எல்லோராலும்
பேசப்படுகிறது
திருப்தியுடன் கைகளைப் பரிமாறி
அதிகாரங்களைப் பகிர்ந்து
புன்னகைத்து
உயர்த்திப் பேசுங்கள்.

மறைக்கப்பட்ட எமது
முகங்களின் கீறல்களிலும்
நசுக்கப்பட்ட எமது குரல்களின்
முனகல்களிலும்
உங்கள் வல்லமை பொருந்திய
கொடிகளை
உயரப்பறக்கவிடுங்கள்.
----------------------------------------------------

இந்தக்கவிதை 11.08.2006 அன்று போர் வெடித்த தருணத்தில் எழுதப்பட்டது. சமாதானம் அன்று ஏ9 பாதையை முறித்தபடி இருந்த உயிரும் இழக்கிறது. கிழக்கில் தொடங்கிய போர் அன்றிலிருந்து வடக்கிலும் பரவத் தொடங்கியது.

Thursday, October 11, 2007

த.மலர்ச்செல்வன்:கவிதைகள்

எழுதியவர்___________________________
--------------------------த.மலர்ச்செல்வன்

------------------------------------------------------------------


இலைகளும் கிளைகளும்
வாய்பொத்திய இரவில்

______________________

ஒரு சனமும் இல்லை
தெருவில்
தூரத்தில் இரண்டு மூன்று கட்டாக்காலிநாய்கள்
மாடுகளைதவிர.
எங்கும் நிலா ஒளயைப் பாய்ச்சுகிறது
குண்டூசி விழுந்தாலும் எடுக்கலாம்.
நாய்கள் மட்டும் உறைந்துபோன மெளனத்தினை
துயில் எழுப்பின.

எப்படியிருந்த ஊர்தெரியுமா?
நேற்றிலிருந்து இதன்முகம் வேறு
இலைகளும் கிளைகளும் வாய்பொத்திய
ஒரு பூனையும் மியாவ் என
அஞ்சுகிற இரவிது.

ஆறு மணிக்குப்பின்
வெளியில் வருவது பூச்சியாயினும்
அது சுடப்படும்.

எனக்கின்று நித்திரை வரவில்லை
புழுக்கமும் அவிச்சலும்
நேற்றைக்கு முன்பு என்றால்
கண்ணகி அம்மன்
வம்மிமர குருத்து மணலில்
அலுப்புப் போக படுத்துறங்கி
புழுக்கமும் அவிச்சலும் விலக வீடு செல்வேன்.

நானும் மதியும்
இருட்டுப்பட்ட பின்
காளிகோவில் றோட்டால்
சைக்கிளை உருட்டி உருட்டி
கதைத்துச் சிரி்த்து வருவது
இனி எப்ப?


___________________________

அழாத பின்னேரம்
_______________________

அழப்போவதில்லை
நேற்றுச்செத்த நண்பனுக்காய்
இன்று நான் அழப்போவதில்லை.

தொண்டையடைக்க
துயர்கொண்டெழ
ஆடுமாடாய் அடைபடப்போவதுமில்லை

இனி என் தருணம் வந்துவிட்டது
எத்தனை நாளைக்கு ஆமை வாழ்வு?
சொல்லுங்கள்.

போகிறேன்
என் ஊர்
என் உறவு
என் பாசம்
நான் வளர்த்த மரங்கள்
யாவற்றையும் விட்டு
......மீட்புக்காய்
நான் போகிறேன்
அம்மா?
என்னை தேடி தெருத்தெருவாய்
அலையவேண்டாம்.

அப்பாச்சி
உணர்ச்சி பொங்கி
உளற வேண்டாம்.

தம்பி தங்கைகளே
பாசம் கொண்டு
கதறியழவேண்டாம்
அண்ணன் வருவான்
ஒருகால்
கங்கச்சிக்குத் தாவனியும் பாவாடையும்
தம்பிக்கு
பச்சைப்புள்ளி போட்ட ரீசேட்டும்
கறுத்தக் காற்சட்டையும் வாங்கி
அண்ணன் ஒருகால் வருவான்.

நான் போகிறேன்
யாரும் தேடவேண்டாம்
மஞ்சந்தொடுவாய் சோதனைச் சாவடியில்
நேற்றுச்செத்துப்போன நண்பனாய்
நானும் மாள விரும்பவில்லை.

என் தேசம்
என் இனம் நோக்கிப்போகிறேன்
யாரும் தேடவேண்டாம்
_________________________________________
மலர்ச்செல்வன்:ஈழத்தின் மட்டக்களப்பு ஆரையம்பதியை சேர்ந்தவர்
கவிதை சிறுகதைகள் எழுதிவருகிறார்
தனித்துத் திரிதல் என்ற கவிதைத்தொகுதியை வெளியிட்டுள்ளார்
மறுகா என்ற இதழை இயக்குகிறார்
_____________________________________________________
நன்றி:தனித்துத் திரிதல்:த.மலர்ச்செல்வன்கவிதைகள்
_________________________________________________________

நெருப்பின் கல்லறைவெளி..

_______________________
எழுதியவர்:தீபச்செல்வன்
_______________________


பிணங்கள் அவர்களின்
தொலைந்த முகங்களைப் பார்த்து
கேள்வி கேட்டன
காயப்பட்ட முகங்கள்
அவர்களை பார்த்து
புன்னகைத்தன
ஆனால்
அவர்கள் மரணத்தின் பாடலுக்காக
மன்றாடினார்கள்.

அவர்கள் சொன்னார்கள்
மரணங்களை
எங்கள் மீது
ஏவி விடுங்கள் என்று
அதனால் நிலங்களுக்காக
குணத்தை வெறிப்படித்தினார்கள்.

அவர்கள் சொன்னார்கள்
எங்கள் உரிமைகளை
உரித்து கேவல் செய்யுங்கள் என்று
அதனால் எமது அடையாளம்
அதிகாரங்களின்
காலடியில் போடப்பட்டது.

இன்று அவர்கள்
ஒரு வெளிச்சத்தின்
முகவரியிலிருந்து புறப்படும்
மரணங்களின் பாடலுக்காக
காத்திருக்க வேண்டியிருக்கிறது.

மரணங்களுக்கு
ஏவல் செய்தவர்கள்
இருளை அறுவடை செய்து
ஓய்ந்திருக்கிறார்கள்
தீயிட்டவர்களுக்கு
நெருப்பிற்கு பஞ்சம் ஏற்பட்டிருக்கிறது.

முகங்களை கொழுத்த
வந்தவர்களின்
முகங்கள் கருகிப்போயின
குரலை திருக முற்பட்டவர்கள்
குரல் தீர்ந்து
வார்த்தைக்கு கை ஏந்தி
பிச்சை கேட்டனர்.

பிணங்களுக்கு
ஆசைப்பட்டு அணிவகுக்க
தொடங்கியவர்கள்
பிணங்களாகினர்
உயிர்களைப் பறிக்க
அதிகாரம் செய்தவர்கள்
உயிர் தீர்ந்து அலைந்தனர்.

முகங்களை தொலைத்தனர்.

வெளிச்சத்தின் சந்தையில்
கைகளில் இருள் காசுகளுடன்
நெருப்பின்
கல்லைறை வெளியிலிருந்து
புறப்படும் மரணத்தின் பாடலுக்காக
காத்திருக்கிறார்கள்.
-------------------------------------------------------------

விடுதலை சிருஸ்டிப்போம்

_______________________
எழுதியவர்:தீபச்செல்வன்
_______________________


ணர்வுகளால் பகிர்வோம்
மகிழ்வுகளால் பகிர்வோம்
வலிகளால் பகிர்வோம்.

நாம் நிலவின்
வெளிச்சத்தில் பகிர்வோம்
களங்கமில்லாத
நமது குழந்தை முகங்களை.

நாம் சூரியனின்
ஒளியில் பகிர்வோம்
தாய்மையடைந்த
நமது மடியின் குரல்களை.

உனது கையை பிடித்து
பயணம் செய்தும்
உனது தோள்களில் சாய்ந்து
தூங்கியும்
ஏன் மடியில்
நீ வேர் விட்டும்
தாய்மையை
நமக்குள் பகிர்வோம்.

பிணைந்த நமது
விரலிடுக்குகளில்
சமத்துவ வலிமையில்
எங்களை நாங்களாய்
சுமப்போம்
உன்னை நான் சுமக்கையில்
நான் தாயாகிறேன்
என்னை நீ சுமக்கையில்
நீ தாயாகிறாய்.

எனது சிறகு
பறிக்கப்படாதவரை
உனது சிறகும் பறிக்கப்படாது
நான் சிறைவைக்கப்படாதவரை
நீயும் சிறைப்படமாட்டாய்.

சொற்களின் ஈரத்தால்
குளிர்ந்த எண்ணங்களால்
வெள்ளை புன்னகையால்
நாம் இணைந்து
அழகிய வாழ்வு நெய்வோம்.

பூமியின் வேரில்
ஓளியின் அடியில்
நாம் விடுதலை சிருஸ்டிப்போம்

நாம் நமக்குள்
போராடத்தேவையில்லை
நாம் நமக்குள்
வதைபடத்தேவையில்லை
மகிழ்வை புதைக்கத்தேவையில்லை
கோப்பைகளை பரிமாறுவோம்.

உன்னிடமும் என்னிடமும்தான்
நமக்கான விடுதலை இருக்கிறது
நம்மை நாமே
விடுதலை செய்வோம்.

வா…அழகிய நமது விடுதலையுடன்
வாழ்க்கையை பகிர்வோம்.
---------------------------------------------------------

Wednesday, October 10, 2007

நிலவிலே பேசுவோம்

_______________________
எழுதியவர்:தீபச்செல்வன்
_______________________


நிலவு உடைந்துவிடவில்லை
உனது திசை கறுத்திருக்கிறது
பகிரவேன்டிய சமாச்சாரங்களுக்கு
அப்பால் சுருங்கிய
வழியின் இடைநடுவில்
உனது பயணம் தள்ளாடுகிறது
உனது புன்னகையின்
கலவரம் புரியாது
உதடுகளை கணக்கெடுத்த
குழந்தைகள் முகங்களை
பொத்திக்கொள்கின்றனர்.

எங்களுக்கு ஒளிவீசும்
நிலவுமீது
கூரிய கத்தியை வீசிவிட்ட
உனதுதிசை இருளாகிறது.

உனது குரலில் யதார்த்தமும்
செயல்களில் கருணையும்
ஒரு போதும்இருக்கப்போவதில்லை
இதுவரையிலும்
உனது செயற்கைமழை
பெரியளவில்
அடித்து ஓய்ந்திருக்கிறது.

எந்தவிதமான குளிச்சியும்
அடங்கியிருக்காத
நிரந்தரமும் உறுயும் இல்லாத
உனது அதிகரத்தின்
செயற்கை மழையில்

எனது சிறகுகள்
ஒடுங்கிவிடவிலை
நான் நேசிக்கும் வழிகள்
கரைந்து விடவில்லை
எனது வேர்கள் அழிந்துவிடவில்லை.

உனது மலைதான் சிதைகிறது.

வெளிகளை தடைசெய்து
முகங்களை சிறைப்பிடித்த
உனது பாரியமலை
அதிவேகமாக சிதைய
மிகப் பெரும்கற்கள்
உனது முகத்தை
நோக்கியபடி வருகின்றன.
நீ உருவாக்கிய கிளர்ச்சியில்
உனது இருப்பு வெடித்து சிதறுகிறது
எனது அடையாளம் ஒளிர்கிறது
நம்பிக்கை சிவக்கிறது.

எந்த பதற்றமுமின்றி
மிக அமைதியாக இருகிறது
எங்கள் நிலவு.
இருப்புக்கான புரட்சியுடன்
நாங்கள் போராடுவோம்
எங்கள் அழகிய
விடுதலை பற்றி
எல்லோருமாக பேசுவோம்
உரிமையுடன் செயற்படுவோம்
குற்றமில்லாத நிலவின்
மிக நீணடவெளி
எல்லையற்று இருக்கிறது

அவசியம்
எங்களுக்கு தேவையான
கருணைக்கும் விடுதலைக்குமாக.
--------------------------------------------------

புதியதோர் வீதி

______________________
எழுதியவர்:தீபச்செல்வன்
_______________________

நீ எனக்காக
ஓருநல்ல வீதி செய்துதந்திருக்கிறாய்
நீ தெரிவு செய்து அனிந்திருக்கும்
நிம்மதி தருகிற
கௌரவம் தருகிற
அங்கிகளையே நானும் அணிந்து
நீ செய்து தந்த வீதியில்
உன்னோடு வருகிறேன்.

மிகுந்த ஆவல்கள்
ஊட்டப்பட்ட
நமது தோட்டம் இன்னும்
பசுமை துளிர்த்து வருகிறது
நீ தேர்வு செய்த
பாடல்களை பாடியபடி
தோட்டத்தை அடையலாம்.

முதலில் தோட்டத்தில
புசிக்கத்தகாது விலக்கப்பட்ட
கனிகளை
தேடிஅழிப்போம்
நமது சந்ததியின்
அமைதியான வாழ்விற்காய்
ஆரொக்கியம் தரும் நல்ல
கனிகளை உற்பத்தி செய்வோம்.

நமது நாகரீகங்கள்
அழிந்துவிட்டது
என்று நமது
முகங்கள் மீது
கரிபூச சாத்தான்கள்
படையெடுக்கின்றன.

எல்லோராலும்
புறக்கனிக்கப்பட்ட
இரவொன்றில்
மிக அதிகதூரத்தில்
மங்கி எரியும் விளக்கைச்சுற்றி
நமது புத்தகம்
மிகுந்த பற்றுடன்
வாசிக்கப்படுகின்றது.

ஒவ்வொரு இராத்திரியிலும்
கூடுகளை அடைந்தபிறகு
வீதியின் பாடலுக்காக
தவமிருக்கும் கால்கள்
உதிர்ந்தும் கிடக்கின்றன
தோட்டத்தின் பசுமைக்காக
காத்திருக்கும் கண்கள்
விழித்தும் கிடக்கின்றன.

நமக்காக எழுதப்பட்ட
புனித புத்தகத்தை
வாசித்தபடி
பயணங்களில்
மிகுந்த அக்கறை செலுத்துவோம்.

உன்னால் திட்டமிடப்பட்ட
வீதிகளின்
இனிய வாசனையுடன்
நீ மூட்டும்
அழகியதோட்டத்தின்
இதமான பசுமையில்
புதியவாழ்வு
பரிசளிக்கப்பட இருக்கிறது
அப்பொழுது
நீ எடுத்து வரும் சூரியவிளக்குகளில்
நமது புத்தகம் வாசிக்கப்படும்
நல்ல கனிகளை புசித்தபடி.
--------------------------------------------------------------

ஊர்திரும்பிய படகுகள்

_______________________
எழுதியவர்:தீபச்செல்வன்
_______________________

டகுகள் ஊரைப்பிரிந்து
புறப்படத் தொடங்கின
கொலை செய்யப்பட்ட
மீன்களின்
அஞ்சலிக்கூட்டத்திலிருந்து
மீன் கூட்டங்கள்
திரும்பிக்கொண்டிருந்தன.

கடலின் ஆழம்
சுருங்கத் தொடங்கியது
நதிகளின்
சுறுசுறுப்புகளும்
ஓட்டங்களும் காயந்தன.

கடலின் வெளி
அலைகளை இழந்து