_____________________________
எழுதியவர்:தீபச்செல்வன்
_____________________________
புத்தரின் புதல்வர்களும்
நாங்களும்
அழைக்கப்படுகிறோம்
வெள்ளைபுத்தகங்களை
ஓதுவதற்கு.
ஏற்கனவே
புத்தரின்புதல்வர்கள்
சில புத்தகங்களை
வாசித்திருக்கிறார்கள்
அவைகள்
இனித்திருக்கின்றன
நாங்கள் அவைகளோடு
வேறு சிலபுத்தகங்களையும்
வாசித்திருக்கிறோம்
அவைகள்
திடமாயிருந்தன.
நாங்கள் இருசாராரும்
வெள்ளைபுத்தகங்களின்
கோடுகளை
வாசிக்கவேண்டும்.
வெள்ளைபுத்தகங்களின்
கோடுகளின் வழிகளை
அவர்கள் விசே~மாக
அளந்து பார்க்கிறார்கள்
அந்தக்கோடுகள்
அவர்களுக்கு
புதிதாயிருக்கின்றன
வேறுசிலகோடுகளையே
அவர்கள் அறிந்திருக்கிறார்கள்
முன்பெல்லாம்
இந்த கோடுகள்குறித்து
நிறையவே புத்தருடன்
பகிர்ந்திருக்கிறோம்
நிறையவே புதுமையான
கோடுகள் போட்டும்
காட்டியிருக்கிறோம்
புத்தர் அவைகளை பற்றி
அடிக்கடி தன் புதல்வர்களுக்கு
கற்பித்திருக்கவேண்டும்
திரும்ப புத்தரை
கூப்பிட்டு
கோடுபோட்டு காட்டுவோம்
அவர் தன்புதல்வர்களுக்கு
புத்திகூறட்டும்.
------------------------------
மீள்எழுத்து:கனையாழி।2006செப்ரம்பர்.
_____________________________________
பதுங்குகுழியில் கொல்லப்பட்ட குழந்தை
3 வாரங்கள் முன்பு

0 கருத்துகள்:
கருத்துரையிடுக