Blogger இயக்குவது.
| புதிய நூல்கள்: பயங்கரவாதி - டிஸ்வரி புக்பேலஸ் | நான் ஸ்ரீலங்கன் இல்லை - யாவரும் பப்ளிசர்ஸ் | நடுகல் டிஸ்வரிபுக் பேலஸ் | deebachelvan@gmail.com | 0772487257

ஞாயிறு, 14 அக்டோபர், 2007

இராப்போசனம்!

_______________________
எழுதியவர்:தீபச்செல்வன்
_______________________

னக்கும் எனக்குமான
சமன்பாடுகளில்
சரிவு வந்துவிட்டது
அசாதாரணங்களின்
அடம்பிடிப்புகளால்.

உன்னை நானும்
என்னை நீயும்
அடியோடு
மறந்துகொள்ள
முயற்சிப்போம்
எங்களுக்கான
மரணங்கள் வரை.

எங்களுக்கான
இறுகிய உறவு
எதையோ
அச்சுறுத்தல் செய்யுமெனில்
அதை அறுத்துவிடல்
நமக்கே நல்லது.

உன்தோள்களில்
நான் கைபோட்டுக்கொண்டதும்
உன்னால்
என் கண்ணீர்
துடைக்கப்பட்டதும்
ஒரு துரதிஸ்டக்காரனாய்
எனக்குள்
நானே கண்ட
கனவாய்போகட்டும்.

அதெப்படி என்னை
சிலுவையில்
அறையப்போகிறார்கள்
என்றதும்
உன்னால் என்னை
உதறமுடிந்தது
நான் இயலாதிருக்க.

எங்களுக்குள்
நிகழ்ந்து முடிந்த
இந்த
இராப்போசனத்தை மட்டும்
அடிக்கடி நினைத்துப்பார்
நாம் நமக்குள் இருப்போம்.
-----------------------------------------------------

0 கருத்துகள்:

வன்னி வளைப்புப் பற்றிய கவிதைகள்

# ஆட்களை இழந்த வெளி
# அடருகிற இரவொன்றில் தின்னப்பட்ட கடல்
# பதுங்குகுழியைவிட்டு அலைகிற வெளி
# பந்துகள் கொட்டுகிற காணி
# மணலில் தீருகிற துயர்
# நிலம் பெயர்ந்தலைய வந்துவிடு
# பயமுறுத்துகிற இருள்
# சுற்றி வளைக்கப்பட்ட பாதுகாப்பு வலயம்
# ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்
# எலும்புக்கூடுகளை வெளியேற்றுவதற்கான வழி
# கடல் நுழைகிற மணற் பதுங்குகுழி
# அறிவிக்கப்பட்ட வலயத்தில் நிறைகிற சுடுமணல்
# தாகம் பாய்கிற நதிக்கான கனவு
# யாருமற்ற நகரின் தெருவினை மிதிக்கிற கொடு நிழல்
# சொற்ப எண்ணிக்கையாக்கப்பட்ட குழந்தைகள்
# சுற்றி வளைக்கப்பட்ட கிராமத்தின் சரணடைகிற பொதிகள்
# மரண நெடில் வெளி இரவு
# கைப்பற்றப்பட்ட நகரம் பற்றியெழுகிற பெருந்துயர்
# மற்றொரு நகரத்தை நோக்கி நடைபெறுகிற படையெடுப்புகள்
# மலைப்பாம்பு காப்பாற்றப்போகிற முட்டைகள்
# மாதா அழைத்து வைத்திருந்த மாடுகள்
# நீர் அறிந்திருக்காத சிலுவைகள்
# தேங்காய்களை தின்று அசைகிற கொடி
#முற்றுகையிடப்பட்ட நகரத்தின் பதுங்குகுழி
#மனிதாபிமானத்திற்கான படைநடவடிக்கை
#அண்மையில் மிதிபடுகிற கடல்
#மரங்கள் பின்வாங்குகிற இன்றிரவு
#நம்மைத் தொடருகிற போர்
#குழந்தைகளை இழுத்துச் செல்லும் பாம்புகள்
#அழிப்பதற்கு பிரகடனம் செய்யப்பட்ட நகரத்தின் கதிரைகள...
#அவகாசத்திற்குப் பிறகான படைநடவடிக்கை.
#பெரிய நகரை தின்கிற படைகள்
#போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்
#போர் தொடங்கும் குழந்தைகளின் கனவுகள்

வலைப்பதிவு பட்டியல்

Related Posts Plugin for WordPress, Blogger...