Blogger இயக்குவது.
| புதிய நூல்கள்: பயங்கரவாதி - டிஸ்வரி புக்பேலஸ் | நான் ஸ்ரீலங்கன் இல்லை - யாவரும் பப்ளிசர்ஸ் | நடுகல் டிஸ்வரிபுக் பேலஸ் | deebachelvan@gmail.com | 0772487257

திங்கள், 8 அக்டோபர், 2007

விசம் நிரம்பிய தேநீர்கோப்பைகள்

_______________________
எழுதியவர்:தீபச்செல்வன்
_______________________


நீ நீட்டிய தேநீர்க் கோப்பையை
உதடுகள் வரை
எடுத்;து வாசித்து விட்டு
எச்சரிக்கையை உணர்ந்தேன்
கோப்பையில்
விசம் நிரம்பியிருந்தது.

நீ தேநீர் பருகவே
என்னை அழைத்தாய்
என்று கருதி
தயாரிக்கப்பட்ட
மாலை நேரம்
இரத்தம் வடிய எட்டிப்போகிறது.
சூரியனில் இரத்தம்
சிந்திக் கொண்டிருக்க
காலைகளை
நானிழந்து விடவும் நேரிட்டது.

தேநீர்க் கோப்பையின்
விசத்தில்
நீ மறைத்து எழுதிய
வாசகத்தை நான் படித்தேன்
சாம்பலில் எழும்பிய
நகரத்தில்
நீ கொடியேற்ற கனவு காண்பதாய்
எழுதியிருந்தாய்.

பயங்கர ஆயுதங்களை
கையாண்டு
எமது நகரங்களை அள்ளி
சவப்பெட்டிகளில்
நிரப்பவும் நினைத்தாய்
எனது குரல் எரிந்து
சாம்பலாகிப்போகும்
அதில் நீ நடந்து வரலாம்
என்றும் நீ நம்பினாய்
நான் அதிக எச்சரிக்கையாக இருந்தேன்.

என்குள் நீ
அடிக்கடி எழுப்பிய
ஒலியின் அதிர்வு
எனக்கென்று ஒரு பாடலை எழுதியது
என் மீது அடிக்கடி நீ
பிரயோகித்த ஒளி
எனக்கென்ற வெளிச்சமாகி
ஒரு திசையைத் திறந்து விட்டது.

நீ காணும்
சாம்பல் நகரம்
பற்றிய அதீத கனவிலிருந்து
உன்னை
தூக்கி எறியவும்
நான் வருகிறேன்
எந்த நிறம்
உதிர்ந்து போகும்
என்று நீ கருதினாயோ
அந்த நிறமே உன்மீது
படையெடுத்து வருகின்றது
எந்த சொற்கள்
சாம்பலாகிப்போகும்
என்று நீ நம்பினாயோ
அந்தச் சொற்களே
உன்னைத்திருக வருகின்றன.

உனது சாம்பல் வண்டி
உதிர்ந்தபடி வருகின்றது.
நான் நன்கு வாசித்த
உனது விசம் நிரம்பிய
தேநீர்க்கோப்பைகள்
நமக்கிடையில்
எரிந்து கிடக்கின்றன.

எனது வண்டி
வெற்றியின் சீருடையை அணிந்து
கம்பீரமாகப் புறப்படுகினறது.
-------------------------------------------------

0 கருத்துகள்:

வன்னி வளைப்புப் பற்றிய கவிதைகள்

# ஆட்களை இழந்த வெளி
# அடருகிற இரவொன்றில் தின்னப்பட்ட கடல்
# பதுங்குகுழியைவிட்டு அலைகிற வெளி
# பந்துகள் கொட்டுகிற காணி
# மணலில் தீருகிற துயர்
# நிலம் பெயர்ந்தலைய வந்துவிடு
# பயமுறுத்துகிற இருள்
# சுற்றி வளைக்கப்பட்ட பாதுகாப்பு வலயம்
# ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்
# எலும்புக்கூடுகளை வெளியேற்றுவதற்கான வழி
# கடல் நுழைகிற மணற் பதுங்குகுழி
# அறிவிக்கப்பட்ட வலயத்தில் நிறைகிற சுடுமணல்
# தாகம் பாய்கிற நதிக்கான கனவு
# யாருமற்ற நகரின் தெருவினை மிதிக்கிற கொடு நிழல்
# சொற்ப எண்ணிக்கையாக்கப்பட்ட குழந்தைகள்
# சுற்றி வளைக்கப்பட்ட கிராமத்தின் சரணடைகிற பொதிகள்
# மரண நெடில் வெளி இரவு
# கைப்பற்றப்பட்ட நகரம் பற்றியெழுகிற பெருந்துயர்
# மற்றொரு நகரத்தை நோக்கி நடைபெறுகிற படையெடுப்புகள்
# மலைப்பாம்பு காப்பாற்றப்போகிற முட்டைகள்
# மாதா அழைத்து வைத்திருந்த மாடுகள்
# நீர் அறிந்திருக்காத சிலுவைகள்
# தேங்காய்களை தின்று அசைகிற கொடி
#முற்றுகையிடப்பட்ட நகரத்தின் பதுங்குகுழி
#மனிதாபிமானத்திற்கான படைநடவடிக்கை
#அண்மையில் மிதிபடுகிற கடல்
#மரங்கள் பின்வாங்குகிற இன்றிரவு
#நம்மைத் தொடருகிற போர்
#குழந்தைகளை இழுத்துச் செல்லும் பாம்புகள்
#அழிப்பதற்கு பிரகடனம் செய்யப்பட்ட நகரத்தின் கதிரைகள...
#அவகாசத்திற்குப் பிறகான படைநடவடிக்கை.
#பெரிய நகரை தின்கிற படைகள்
#போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்
#போர் தொடங்கும் குழந்தைகளின் கனவுகள்

வலைப்பதிவு பட்டியல்

Related Posts Plugin for WordPress, Blogger...