Blogger இயக்குவது.
| புதிய நூல்கள்: பயங்கரவாதி - டிஸ்வரி புக்பேலஸ் | நான் ஸ்ரீலங்கன் இல்லை - யாவரும் பப்ளிசர்ஸ் | நடுகல் டிஸ்வரிபுக் பேலஸ் | deebachelvan@gmail.com | 0772487257

திங்கள், 8 அக்டோபர், 2007

குருதிவிதிப்பட்ட புன்னகை

_______________________
எழுதியவர்:தீபச்செல்வன்
_______________________


எனக்கென்று ஒரு
புன்னகை இருந்தது
அது எனது அடையாளமும்கூட.
எனது மகிழ்வும் அழுகையும்
ஊட்டப்பட்ட ஒலியில்
எனது புன்னகை ஒளிர்ந்தது.

இன்னாளில் விலக்கப்பட்ட
புன்னகையாய்
முகத்திற்கு அதிதூரப்படுகையில்
உதடுகள்
பூனையைப்போல
பதுங்கிக்கொள்கின்றன.

எனக்கென்று உரிமையுடைய
வார்த்தைகள் எவற்றையும்
விரித்து வாசிக்கமுடியாது போயிற்று.
நான் என்னை மூடிப்போகிறேன்
வேற்று ஆடைப்போர்வையில்
எனது உருவம் ஒடுங்கியிருக்கிறது.

எனது புன்னகையில்
குருதிதான்வடிகிறது
உதடுகள் உதிர்ந்து
மிதிபட தெருக்கள்
எதையும் கவனிக்காது
மௌனமாய் கிடக்கிறது.

காயப்பட்ட எனது உதடுகளில்
என்னை மீறி
குருதியின் வாசனையுடைய
புன்னகை வெளிவருகிறது.

எனது புன்னகையை
யாரோ களவாடிவிட்டார்களா?
அல்லது எனது புன்னகை
தனது வேருடன் அழிந்துவிட்டதா?
களவாடப்பட்ட எனக்குரிய
ஓலிகளை தேடுகையில்
காற்று தீர்ந்துவிட
கண்கள் இரவாப்போகின்றன.

எனது புன்னகை மிதிபட
எழும் ஒலியை இரசித்து
சக்கரங்கள் உருள்கின்னறன.

குருதியுடன் சம்பந்தப்பட்ட
புன்னகை பிறண்ட
வார்த்தைகள்
தடைசெய்யப்பட்ட காலத்தில்
முகத்தை கழற்றி
ஏறிந்துவிட்டு வருகிறேன்.

ஒருநாள் தெருவெளிக்கையில்
பதுங்கிய உதடுகள்
மீள வந்துசேரும்
எனது புன்னகையியின்
வேர் தளைக்கும்
எனது புன்னகை
வானமாய் விரிந்து வெளிக்கும்..
-------------------------------------------------------------

0 கருத்துகள்:

வன்னி வளைப்புப் பற்றிய கவிதைகள்

# ஆட்களை இழந்த வெளி
# அடருகிற இரவொன்றில் தின்னப்பட்ட கடல்
# பதுங்குகுழியைவிட்டு அலைகிற வெளி
# பந்துகள் கொட்டுகிற காணி
# மணலில் தீருகிற துயர்
# நிலம் பெயர்ந்தலைய வந்துவிடு
# பயமுறுத்துகிற இருள்
# சுற்றி வளைக்கப்பட்ட பாதுகாப்பு வலயம்
# ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்
# எலும்புக்கூடுகளை வெளியேற்றுவதற்கான வழி
# கடல் நுழைகிற மணற் பதுங்குகுழி
# அறிவிக்கப்பட்ட வலயத்தில் நிறைகிற சுடுமணல்
# தாகம் பாய்கிற நதிக்கான கனவு
# யாருமற்ற நகரின் தெருவினை மிதிக்கிற கொடு நிழல்
# சொற்ப எண்ணிக்கையாக்கப்பட்ட குழந்தைகள்
# சுற்றி வளைக்கப்பட்ட கிராமத்தின் சரணடைகிற பொதிகள்
# மரண நெடில் வெளி இரவு
# கைப்பற்றப்பட்ட நகரம் பற்றியெழுகிற பெருந்துயர்
# மற்றொரு நகரத்தை நோக்கி நடைபெறுகிற படையெடுப்புகள்
# மலைப்பாம்பு காப்பாற்றப்போகிற முட்டைகள்
# மாதா அழைத்து வைத்திருந்த மாடுகள்
# நீர் அறிந்திருக்காத சிலுவைகள்
# தேங்காய்களை தின்று அசைகிற கொடி
#முற்றுகையிடப்பட்ட நகரத்தின் பதுங்குகுழி
#மனிதாபிமானத்திற்கான படைநடவடிக்கை
#அண்மையில் மிதிபடுகிற கடல்
#மரங்கள் பின்வாங்குகிற இன்றிரவு
#நம்மைத் தொடருகிற போர்
#குழந்தைகளை இழுத்துச் செல்லும் பாம்புகள்
#அழிப்பதற்கு பிரகடனம் செய்யப்பட்ட நகரத்தின் கதிரைகள...
#அவகாசத்திற்குப் பிறகான படைநடவடிக்கை.
#பெரிய நகரை தின்கிற படைகள்
#போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்
#போர் தொடங்கும் குழந்தைகளின் கனவுகள்

வலைப்பதிவு பட்டியல்

Related Posts Plugin for WordPress, Blogger...