Blogger இயக்குவது.
| புதிய நூல்கள்: பயங்கரவாதி - டிஸ்வரி புக்பேலஸ் | நான் ஸ்ரீலங்கன் இல்லை - யாவரும் பப்ளிசர்ஸ் | நடுகல் டிஸ்வரிபுக் பேலஸ் | deebachelvan@gmail.com | 0772487257

புதன், 10 அக்டோபர், 2007

புதியதோர் வீதி

______________________
எழுதியவர்:தீபச்செல்வன்
_______________________

நீ எனக்காக
ஓருநல்ல வீதி செய்துதந்திருக்கிறாய்
நீ தெரிவு செய்து அனிந்திருக்கும்
நிம்மதி தருகிற
கௌரவம் தருகிற
அங்கிகளையே நானும் அணிந்து
நீ செய்து தந்த வீதியில்
உன்னோடு வருகிறேன்.

மிகுந்த ஆவல்கள்
ஊட்டப்பட்ட
நமது தோட்டம் இன்னும்
பசுமை துளிர்த்து வருகிறது
நீ தேர்வு செய்த
பாடல்களை பாடியபடி
தோட்டத்தை அடையலாம்.

முதலில் தோட்டத்தில
புசிக்கத்தகாது விலக்கப்பட்ட
கனிகளை
தேடிஅழிப்போம்
நமது சந்ததியின்
அமைதியான வாழ்விற்காய்
ஆரொக்கியம் தரும் நல்ல
கனிகளை உற்பத்தி செய்வோம்.

நமது நாகரீகங்கள்
அழிந்துவிட்டது
என்று நமது
முகங்கள் மீது
கரிபூச சாத்தான்கள்
படையெடுக்கின்றன.

எல்லோராலும்
புறக்கனிக்கப்பட்ட
இரவொன்றில்
மிக அதிகதூரத்தில்
மங்கி எரியும் விளக்கைச்சுற்றி
நமது புத்தகம்
மிகுந்த பற்றுடன்
வாசிக்கப்படுகின்றது.

ஒவ்வொரு இராத்திரியிலும்
கூடுகளை அடைந்தபிறகு
வீதியின் பாடலுக்காக
தவமிருக்கும் கால்கள்
உதிர்ந்தும் கிடக்கின்றன
தோட்டத்தின் பசுமைக்காக
காத்திருக்கும் கண்கள்
விழித்தும் கிடக்கின்றன.

நமக்காக எழுதப்பட்ட
புனித புத்தகத்தை
வாசித்தபடி
பயணங்களில்
மிகுந்த அக்கறை செலுத்துவோம்.

உன்னால் திட்டமிடப்பட்ட
வீதிகளின்
இனிய வாசனையுடன்
நீ மூட்டும்
அழகியதோட்டத்தின்
இதமான பசுமையில்
புதியவாழ்வு
பரிசளிக்கப்பட இருக்கிறது
அப்பொழுது
நீ எடுத்து வரும் சூரியவிளக்குகளில்
நமது புத்தகம் வாசிக்கப்படும்
நல்ல கனிகளை புசித்தபடி.
--------------------------------------------------------------

0 கருத்துகள்:

வன்னி வளைப்புப் பற்றிய கவிதைகள்

# ஆட்களை இழந்த வெளி
# அடருகிற இரவொன்றில் தின்னப்பட்ட கடல்
# பதுங்குகுழியைவிட்டு அலைகிற வெளி
# பந்துகள் கொட்டுகிற காணி
# மணலில் தீருகிற துயர்
# நிலம் பெயர்ந்தலைய வந்துவிடு
# பயமுறுத்துகிற இருள்
# சுற்றி வளைக்கப்பட்ட பாதுகாப்பு வலயம்
# ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்
# எலும்புக்கூடுகளை வெளியேற்றுவதற்கான வழி
# கடல் நுழைகிற மணற் பதுங்குகுழி
# அறிவிக்கப்பட்ட வலயத்தில் நிறைகிற சுடுமணல்
# தாகம் பாய்கிற நதிக்கான கனவு
# யாருமற்ற நகரின் தெருவினை மிதிக்கிற கொடு நிழல்
# சொற்ப எண்ணிக்கையாக்கப்பட்ட குழந்தைகள்
# சுற்றி வளைக்கப்பட்ட கிராமத்தின் சரணடைகிற பொதிகள்
# மரண நெடில் வெளி இரவு
# கைப்பற்றப்பட்ட நகரம் பற்றியெழுகிற பெருந்துயர்
# மற்றொரு நகரத்தை நோக்கி நடைபெறுகிற படையெடுப்புகள்
# மலைப்பாம்பு காப்பாற்றப்போகிற முட்டைகள்
# மாதா அழைத்து வைத்திருந்த மாடுகள்
# நீர் அறிந்திருக்காத சிலுவைகள்
# தேங்காய்களை தின்று அசைகிற கொடி
#முற்றுகையிடப்பட்ட நகரத்தின் பதுங்குகுழி
#மனிதாபிமானத்திற்கான படைநடவடிக்கை
#அண்மையில் மிதிபடுகிற கடல்
#மரங்கள் பின்வாங்குகிற இன்றிரவு
#நம்மைத் தொடருகிற போர்
#குழந்தைகளை இழுத்துச் செல்லும் பாம்புகள்
#அழிப்பதற்கு பிரகடனம் செய்யப்பட்ட நகரத்தின் கதிரைகள...
#அவகாசத்திற்குப் பிறகான படைநடவடிக்கை.
#பெரிய நகரை தின்கிற படைகள்
#போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்
#போர் தொடங்கும் குழந்தைகளின் கனவுகள்

வலைப்பதிவு பட்டியல்

Related Posts Plugin for WordPress, Blogger...