Blogger இயக்குவது.
| புதிய நூல்கள்: பயங்கரவாதி - டிஸ்வரி புக்பேலஸ் | நான் ஸ்ரீலங்கன் இல்லை - யாவரும் பப்ளிசர்ஸ் | நடுகல் டிஸ்வரிபுக் பேலஸ் | deebachelvan@gmail.com | 0772487257

புதன், 10 அக்டோபர், 2007

நிலவிலே பேசுவோம்

_______________________
எழுதியவர்:தீபச்செல்வன்
_______________________


நிலவு உடைந்துவிடவில்லை
உனது திசை கறுத்திருக்கிறது
பகிரவேன்டிய சமாச்சாரங்களுக்கு
அப்பால் சுருங்கிய
வழியின் இடைநடுவில்
உனது பயணம் தள்ளாடுகிறது
உனது புன்னகையின்
கலவரம் புரியாது
உதடுகளை கணக்கெடுத்த
குழந்தைகள் முகங்களை
பொத்திக்கொள்கின்றனர்.

எங்களுக்கு ஒளிவீசும்
நிலவுமீது
கூரிய கத்தியை வீசிவிட்ட
உனதுதிசை இருளாகிறது.

உனது குரலில் யதார்த்தமும்
செயல்களில் கருணையும்
ஒரு போதும்இருக்கப்போவதில்லை
இதுவரையிலும்
உனது செயற்கைமழை
பெரியளவில்
அடித்து ஓய்ந்திருக்கிறது.

எந்தவிதமான குளிச்சியும்
அடங்கியிருக்காத
நிரந்தரமும் உறுயும் இல்லாத
உனது அதிகரத்தின்
செயற்கை மழையில்

எனது சிறகுகள்
ஒடுங்கிவிடவிலை
நான் நேசிக்கும் வழிகள்
கரைந்து விடவில்லை
எனது வேர்கள் அழிந்துவிடவில்லை.

உனது மலைதான் சிதைகிறது.

வெளிகளை தடைசெய்து
முகங்களை சிறைப்பிடித்த
உனது பாரியமலை
அதிவேகமாக சிதைய
மிகப் பெரும்கற்கள்
உனது முகத்தை
நோக்கியபடி வருகின்றன.
நீ உருவாக்கிய கிளர்ச்சியில்
உனது இருப்பு வெடித்து சிதறுகிறது
எனது அடையாளம் ஒளிர்கிறது
நம்பிக்கை சிவக்கிறது.

எந்த பதற்றமுமின்றி
மிக அமைதியாக இருகிறது
எங்கள் நிலவு.
இருப்புக்கான புரட்சியுடன்
நாங்கள் போராடுவோம்
எங்கள் அழகிய
விடுதலை பற்றி
எல்லோருமாக பேசுவோம்
உரிமையுடன் செயற்படுவோம்
குற்றமில்லாத நிலவின்
மிக நீணடவெளி
எல்லையற்று இருக்கிறது

அவசியம்
எங்களுக்கு தேவையான
கருணைக்கும் விடுதலைக்குமாக.
--------------------------------------------------

0 கருத்துகள்:

வன்னி வளைப்புப் பற்றிய கவிதைகள்

# ஆட்களை இழந்த வெளி
# அடருகிற இரவொன்றில் தின்னப்பட்ட கடல்
# பதுங்குகுழியைவிட்டு அலைகிற வெளி
# பந்துகள் கொட்டுகிற காணி
# மணலில் தீருகிற துயர்
# நிலம் பெயர்ந்தலைய வந்துவிடு
# பயமுறுத்துகிற இருள்
# சுற்றி வளைக்கப்பட்ட பாதுகாப்பு வலயம்
# ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்
# எலும்புக்கூடுகளை வெளியேற்றுவதற்கான வழி
# கடல் நுழைகிற மணற் பதுங்குகுழி
# அறிவிக்கப்பட்ட வலயத்தில் நிறைகிற சுடுமணல்
# தாகம் பாய்கிற நதிக்கான கனவு
# யாருமற்ற நகரின் தெருவினை மிதிக்கிற கொடு நிழல்
# சொற்ப எண்ணிக்கையாக்கப்பட்ட குழந்தைகள்
# சுற்றி வளைக்கப்பட்ட கிராமத்தின் சரணடைகிற பொதிகள்
# மரண நெடில் வெளி இரவு
# கைப்பற்றப்பட்ட நகரம் பற்றியெழுகிற பெருந்துயர்
# மற்றொரு நகரத்தை நோக்கி நடைபெறுகிற படையெடுப்புகள்
# மலைப்பாம்பு காப்பாற்றப்போகிற முட்டைகள்
# மாதா அழைத்து வைத்திருந்த மாடுகள்
# நீர் அறிந்திருக்காத சிலுவைகள்
# தேங்காய்களை தின்று அசைகிற கொடி
#முற்றுகையிடப்பட்ட நகரத்தின் பதுங்குகுழி
#மனிதாபிமானத்திற்கான படைநடவடிக்கை
#அண்மையில் மிதிபடுகிற கடல்
#மரங்கள் பின்வாங்குகிற இன்றிரவு
#நம்மைத் தொடருகிற போர்
#குழந்தைகளை இழுத்துச் செல்லும் பாம்புகள்
#அழிப்பதற்கு பிரகடனம் செய்யப்பட்ட நகரத்தின் கதிரைகள...
#அவகாசத்திற்குப் பிறகான படைநடவடிக்கை.
#பெரிய நகரை தின்கிற படைகள்
#போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்
#போர் தொடங்கும் குழந்தைகளின் கனவுகள்

வலைப்பதிவு பட்டியல்

Related Posts Plugin for WordPress, Blogger...