Blogger இயக்குவது.
| புதிய நூல்கள்: பயங்கரவாதி - டிஸ்வரி புக்பேலஸ் | நான் ஸ்ரீலங்கன் இல்லை - யாவரும் பப்ளிசர்ஸ் | நடுகல் டிஸ்வரிபுக் பேலஸ் | deebachelvan@gmail.com | 0772487257

வெள்ளி, 19 அக்டோபர், 2007

தேவராசா

_____________________________________
--------------------------கவிதை:தீபச்செல்வன்
__________________________________________


ல்லாச் சிறுவர்களும்
தேவராசா
என்று சிரிக்கிறார்கள்
எல்லோருக்கும்
தேவராசாவின் இயல்பில்
சிரிப்பு வருகிறது
எதையும் அவன்
அறியாது பேசுகிறான்..


தேகத்தில்
புளுதியை அள்ளி தானே
பூசிக்கொண்டிருந்தான்
கையில் ஐந்துரூபாய்
றப்பர் பை ஓட்டையுடனிருந்தது.
அவற்றுள் கிழிந்தும் கிழியாததுமாய்
ஒரு சில புத்தகங்களிருந்தன.

அவனின் மேல் சட்டை
பொத்தான்கள்
மாறி மாறி பூட்டப்பட்டிருந்தன.
அவனின் காற்சட்டை
ஒரு பக்கம் கிழிந்து
கயர் பிரண்டிருந்தது.

வயதாகியும்
அவனுக்குள் சரிப்படாத
தடங்கல் பேச்சு
அதுவும்
பார்ப்பவர்களுக்கு
சிரிப்பூட்டுகிறது.

அப்பாவை ஆமி
சுட்டுட்டான்
அம்மா வேலைக்கு போட்டுது
சோறு கொண்டருமே
நான் திரும்ப திரும்ப கேட்க
விளங்க முடியாத
அவனின் மொழி
கவிதையாடுகிறது.
தன்பாட்டில்
தேவாரங்களை அனுபவித்து
பாடுகிறான்.

தேவராசாவின்
யாருக்கோ எதற்கோவான
நேர்மை
கீழே எறியப்பட்டு
மணலில் புதைந்து தெரியும்
காலாவதியான பென்சில்களை
எடுக்கலாமா என்கிறது.

கொப்பியும் பென்சிலும்
வாங்கித்தரும்படி
கேட்கிறது
என்னுடனான அவனின் உரிமை.

படிப்பு சொல்லித்தரும்படி
கேட்கிறது அவனின்
அவசியமான அக்கறை.

தேவராசா
புத்தகங்களை எடுத்து
வாசிக்கத் தொடங்கிவட்டான்.
--------------------------------------------------------------
19.01.2006 பளையில் தேவராசா என்ற இந்த சிறுவனை சந்தித்தேன்..
-----------------------------------------

0 கருத்துகள்:

வன்னி வளைப்புப் பற்றிய கவிதைகள்

# ஆட்களை இழந்த வெளி
# அடருகிற இரவொன்றில் தின்னப்பட்ட கடல்
# பதுங்குகுழியைவிட்டு அலைகிற வெளி
# பந்துகள் கொட்டுகிற காணி
# மணலில் தீருகிற துயர்
# நிலம் பெயர்ந்தலைய வந்துவிடு
# பயமுறுத்துகிற இருள்
# சுற்றி வளைக்கப்பட்ட பாதுகாப்பு வலயம்
# ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்
# எலும்புக்கூடுகளை வெளியேற்றுவதற்கான வழி
# கடல் நுழைகிற மணற் பதுங்குகுழி
# அறிவிக்கப்பட்ட வலயத்தில் நிறைகிற சுடுமணல்
# தாகம் பாய்கிற நதிக்கான கனவு
# யாருமற்ற நகரின் தெருவினை மிதிக்கிற கொடு நிழல்
# சொற்ப எண்ணிக்கையாக்கப்பட்ட குழந்தைகள்
# சுற்றி வளைக்கப்பட்ட கிராமத்தின் சரணடைகிற பொதிகள்
# மரண நெடில் வெளி இரவு
# கைப்பற்றப்பட்ட நகரம் பற்றியெழுகிற பெருந்துயர்
# மற்றொரு நகரத்தை நோக்கி நடைபெறுகிற படையெடுப்புகள்
# மலைப்பாம்பு காப்பாற்றப்போகிற முட்டைகள்
# மாதா அழைத்து வைத்திருந்த மாடுகள்
# நீர் அறிந்திருக்காத சிலுவைகள்
# தேங்காய்களை தின்று அசைகிற கொடி
#முற்றுகையிடப்பட்ட நகரத்தின் பதுங்குகுழி
#மனிதாபிமானத்திற்கான படைநடவடிக்கை
#அண்மையில் மிதிபடுகிற கடல்
#மரங்கள் பின்வாங்குகிற இன்றிரவு
#நம்மைத் தொடருகிற போர்
#குழந்தைகளை இழுத்துச் செல்லும் பாம்புகள்
#அழிப்பதற்கு பிரகடனம் செய்யப்பட்ட நகரத்தின் கதிரைகள...
#அவகாசத்திற்குப் பிறகான படைநடவடிக்கை.
#பெரிய நகரை தின்கிற படைகள்
#போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்
#போர் தொடங்கும் குழந்தைகளின் கனவுகள்

வலைப்பதிவு பட்டியல்

Related Posts Plugin for WordPress, Blogger...