Blogger இயக்குவது.
| புதிய நூல்கள்: பயங்கரவாதி - டிஸ்வரி புக்பேலஸ் | நான் ஸ்ரீலங்கன் இல்லை - யாவரும் பப்ளிசர்ஸ் | நடுகல் டிஸ்வரிபுக் பேலஸ் | deebachelvan@gmail.com | 0772487257

திங்கள், 22 அக்டோபர், 2007

சைனைட்டுக்களின் வெளியில்..

_______________________________________
--------------------------கவிதை:தீபச்செல்வன்
__________________________________________

ரண்டு சைனைட்டுக்களிடையே
இந்த தோழமை
வளர்க்கப்பட்டிருக்கிறது
இரண்டு துப்பாக்கிகளிடையே
இந்த தோழமை
வளர்க்கப்பட்டிருக்கிறது
இரண்டு சீருடைகளிற்கிடையே
இந்த தோழமை
வளர்க்கப்பட்டிருக்கிறது
பிரித்துப்பார்க்க முடியாத
சிந்தனையின் தாய்மையில்.

பொதுமைப்பட்ட
உன் புன்னகையின்
அர்த்தத்தை நான் மட்டும்
பிரித்து வாசித்திருக்கிறேன்.
அக்கறையான
உன் அழுகையை
நான் மட்டும்
பிரித்து வாசித்திரக்கிறேன்.
நீயில்லாத
நானில்லாத வெளிகளும்
நெருக்கங்களும்
உள்ள இலக்கின் இணைப்பில்.

உனது முகத்தில்
கசிந்த வாசத்தை
நுகர்ந்திருக்கிறேன்.
உனது விழியில் தெரிந்த
பரிவான பார்வையை
உணர்ந்திருக்கிறேன்.
உனது விரைந்த
செயலின் ஆழத்தை
பார்த்திருக்கிறேன்.
நமது இலக்கின்
ஒருமைக்குள் தாய்மையடைந்து
சுதந்திரத்தை பிரசவிக்கும்
புனிதமான சீருடைக்குள்.

நமது தோழ்களின்
வெளியில்
மக்கள் கண்துங்கிறார்கள்.
நமது சைனைட்டுக்களின்
வெளியில்
மக்கள் புன்னகைக்கிறார்கள்.
நமது துப்பாக்கிகளின்
வெளியில்
மக்கள் கைகளை வீசுகிறார்கள்.
நமது சீருடைகளின்
வெளியில்
கடமை அணிவகுக்கிறது.

நமது பிரிவில்
பாதிஉறவுகள் மீண்டிருக்கிறார்கள்.
உனது மௌனத்தில்
பாதித்தேசம் விடிந்திரக்கிறது.
--------------------------------------------------------------------

0 கருத்துகள்:

வன்னி வளைப்புப் பற்றிய கவிதைகள்

# ஆட்களை இழந்த வெளி
# அடருகிற இரவொன்றில் தின்னப்பட்ட கடல்
# பதுங்குகுழியைவிட்டு அலைகிற வெளி
# பந்துகள் கொட்டுகிற காணி
# மணலில் தீருகிற துயர்
# நிலம் பெயர்ந்தலைய வந்துவிடு
# பயமுறுத்துகிற இருள்
# சுற்றி வளைக்கப்பட்ட பாதுகாப்பு வலயம்
# ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்
# எலும்புக்கூடுகளை வெளியேற்றுவதற்கான வழி
# கடல் நுழைகிற மணற் பதுங்குகுழி
# அறிவிக்கப்பட்ட வலயத்தில் நிறைகிற சுடுமணல்
# தாகம் பாய்கிற நதிக்கான கனவு
# யாருமற்ற நகரின் தெருவினை மிதிக்கிற கொடு நிழல்
# சொற்ப எண்ணிக்கையாக்கப்பட்ட குழந்தைகள்
# சுற்றி வளைக்கப்பட்ட கிராமத்தின் சரணடைகிற பொதிகள்
# மரண நெடில் வெளி இரவு
# கைப்பற்றப்பட்ட நகரம் பற்றியெழுகிற பெருந்துயர்
# மற்றொரு நகரத்தை நோக்கி நடைபெறுகிற படையெடுப்புகள்
# மலைப்பாம்பு காப்பாற்றப்போகிற முட்டைகள்
# மாதா அழைத்து வைத்திருந்த மாடுகள்
# நீர் அறிந்திருக்காத சிலுவைகள்
# தேங்காய்களை தின்று அசைகிற கொடி
#முற்றுகையிடப்பட்ட நகரத்தின் பதுங்குகுழி
#மனிதாபிமானத்திற்கான படைநடவடிக்கை
#அண்மையில் மிதிபடுகிற கடல்
#மரங்கள் பின்வாங்குகிற இன்றிரவு
#நம்மைத் தொடருகிற போர்
#குழந்தைகளை இழுத்துச் செல்லும் பாம்புகள்
#அழிப்பதற்கு பிரகடனம் செய்யப்பட்ட நகரத்தின் கதிரைகள...
#அவகாசத்திற்குப் பிறகான படைநடவடிக்கை.
#பெரிய நகரை தின்கிற படைகள்
#போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்
#போர் தொடங்கும் குழந்தைகளின் கனவுகள்

வலைப்பதிவு பட்டியல்

Related Posts Plugin for WordPress, Blogger...