Blogger இயக்குவது.
| புதிய நூல்கள்: பயங்கரவாதி - டிஸ்வரி புக்பேலஸ் | நான் ஸ்ரீலங்கன் இல்லை - யாவரும் பப்ளிசர்ஸ் | நடுகல் டிஸ்வரிபுக் பேலஸ் | deebachelvan@gmail.com | 0772487257

ஞாயிறு, 21 அக்டோபர், 2007

நீ இரத்தம் சிந்திய தெருக்கள்

_______________________________________
--------------------------கவிதை:தீபச்செல்வன்
__________________________________________



நமது சந்திப்புக்கள் ஒவ்வொன்றும்
ஆயுளை விட பெரியன
இடங்களும் சொற்களும்
காயபமல்
தேனீர் கோப்பைகளை
நிரப்பியிருக்கின்றன.

உன்னிடம் தான்
நான் நிறைய சொற்களை
கவிதைகளாயும்
பாடல்களாயும்
வாங்கியிருக்கிறேன்.

ஒவ்வொரு சொற்களிலும்
உனது ஒளிபடர்ந்த முகமும்
கருனை கலந்த குரலும்
அடர்ந்திருந்தன.

குறிப்பாக மாலை நேரங்களில்
உனது முகத்தை
மஞ்சள் வெயிலில் பரப்பி
வீட்டுக்கு வருவாய்
எனது வெள்ளை சீருடைகளில்
எனது புத்தகங்களில்
என்னை மறைத்து வைப்பேன்

உனக்கு ஆறுதலலித்த
எனது வீடும் எனது முகமும்
பாதுகாப்பளித்த விழிகளும்
பெருமையில் அழுகின்றன.

உன்னிடம் தான்
கருனையின் புன்னகையை
பார்த்திருக்கிறேன்
உன்னால் தான்
ஒரு தயைப்போல அணுகமுடியும்.

யாரும் குறித்து வைக்காத
நமது சந்திப்புக்களை
இடங்களை சொற்களை
தூரத்தில் விட்டு
உனது வேளைகளுக்காக
துடிக்கிறேன்.

எல்லாம் தெருக்களில் மறைந்தன.

நீ பகிர்ந்த தாய்மையை
உனது இலட்சியத்தை
துணிவை சாதனையை
தோள்களின் பலத்தை
இழந்து விடுவேனோ
அச்சமடைந்திருக்க
இருளின் கல்லறைக்குள்ளும்
வெளியிலும்
நடமாடுவதைப்போல
உனது முகம் தெரிகிறது.

கடைசிவரைக்கும்
நாம் திரிந்த
குறுக்குத் தெருக்களில்
உனது சைக்கிள் எங்கேனும்
நிறுத்தப்பட்டிருக்கிறதா என்று
தேடியபடி இருப்பேன்.

நீ விரும்பிய பிரதான தெருக்களில்
திரியும் அங்கலாய்ப்பு
நமது நகரின் வாசலுக்கு
மடிந்து கொண்டு வருகிறது
அந்த தெருக்களுக்காக
மரங்களுக்காக
நீ இரத்தம் சிந்தினாய்
நான் வியர்வையேனும் சிந்துவேன்.

என்றேனும் ஒருநாள்
நமதுநகரின் பிரதானதெருவில்
உனது சைக்கிள் நிறுத்தப்பட்டிருக்கம்.
--------------------------------------------------

1 கருத்துகள்:

தாசன் சொன்னது…

(தோழனே எல்லாம்
கடைசி என்றாகி விட்டது
இவை கடைசி உணவாகிவிட்டது.

நீயும் நானும் கூடியிருக்கவே
விரும்புகிறோம்
நான் விலகியிருக்கிறேன்
எனக்கு சிலுவை காத்திருக்கிறது
எனக்கு ஆணிகள் காத்திருக்கின்றன
எனது குருதி
பகிர்ந்துண்ணப்படவிருக்கிறது.)

நலல வரிகள் வாழ்த்துக்கள்

வன்னி வளைப்புப் பற்றிய கவிதைகள்

# ஆட்களை இழந்த வெளி
# அடருகிற இரவொன்றில் தின்னப்பட்ட கடல்
# பதுங்குகுழியைவிட்டு அலைகிற வெளி
# பந்துகள் கொட்டுகிற காணி
# மணலில் தீருகிற துயர்
# நிலம் பெயர்ந்தலைய வந்துவிடு
# பயமுறுத்துகிற இருள்
# சுற்றி வளைக்கப்பட்ட பாதுகாப்பு வலயம்
# ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்
# எலும்புக்கூடுகளை வெளியேற்றுவதற்கான வழி
# கடல் நுழைகிற மணற் பதுங்குகுழி
# அறிவிக்கப்பட்ட வலயத்தில் நிறைகிற சுடுமணல்
# தாகம் பாய்கிற நதிக்கான கனவு
# யாருமற்ற நகரின் தெருவினை மிதிக்கிற கொடு நிழல்
# சொற்ப எண்ணிக்கையாக்கப்பட்ட குழந்தைகள்
# சுற்றி வளைக்கப்பட்ட கிராமத்தின் சரணடைகிற பொதிகள்
# மரண நெடில் வெளி இரவு
# கைப்பற்றப்பட்ட நகரம் பற்றியெழுகிற பெருந்துயர்
# மற்றொரு நகரத்தை நோக்கி நடைபெறுகிற படையெடுப்புகள்
# மலைப்பாம்பு காப்பாற்றப்போகிற முட்டைகள்
# மாதா அழைத்து வைத்திருந்த மாடுகள்
# நீர் அறிந்திருக்காத சிலுவைகள்
# தேங்காய்களை தின்று அசைகிற கொடி
#முற்றுகையிடப்பட்ட நகரத்தின் பதுங்குகுழி
#மனிதாபிமானத்திற்கான படைநடவடிக்கை
#அண்மையில் மிதிபடுகிற கடல்
#மரங்கள் பின்வாங்குகிற இன்றிரவு
#நம்மைத் தொடருகிற போர்
#குழந்தைகளை இழுத்துச் செல்லும் பாம்புகள்
#அழிப்பதற்கு பிரகடனம் செய்யப்பட்ட நகரத்தின் கதிரைகள...
#அவகாசத்திற்குப் பிறகான படைநடவடிக்கை.
#பெரிய நகரை தின்கிற படைகள்
#போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்
#போர் தொடங்கும் குழந்தைகளின் கனவுகள்

வலைப்பதிவு பட்டியல்

Related Posts Plugin for WordPress, Blogger...