Wednesday, October 10, 2007

ஊர்திரும்பிய படகுகள்

_______________________
எழுதியவர்:தீபச்செல்வன்
_______________________

டகுகள் ஊரைப்பிரிந்து
புறப்படத் தொடங்கின
கொலை செய்யப்பட்ட
மீன்களின்
அஞ்சலிக்கூட்டத்திலிருந்து
மீன் கூட்டங்கள்
திரும்பிக்கொண்டிருந்தன.

கடலின் ஆழம்
சுருங்கத் தொடங்கியது
நதிகளின்
சுறுசுறுப்புகளும்
ஓட்டங்களும் காயந்தன.

கடலின் வெளி
அலைகளை இழந்து
தாண்டு கொண்டிருந்தது
மேகங்கள் காய்ந்து
அண்டம் வெளித்தது .

எனினும் மீன்கள்
நீந்தியபடி இருந்தன.

ஊரைவிட்டுப்புறப்பட்ட
படகுகள்
நீரின்றிய கடலின் ஆழத்தில்
தத்தளித்த போது
படகுகளை
மீன்கள் சுமந்து நீந்தின.

மீன்களின் கண்ணீரில்
மீண்டும்
கடல் பாரிய
சமுத்திரம் கொள்ள ஆரம்பித்தது.

படகுகள் ஊர்வந்து சேர்ந்தன
------------------------------------

0 கருத்துகள்: