Blogger இயக்குவது.
| புதிய நூல்கள்: பயங்கரவாதி - டிஸ்வரி புக்பேலஸ் | நான் ஸ்ரீலங்கன் இல்லை - யாவரும் பப்ளிசர்ஸ் | நடுகல் டிஸ்வரிபுக் பேலஸ் | deebachelvan@gmail.com | 0772487257

திங்கள், 8 அக்டோபர், 2007

கடவுளின் படுகொலை

_______________________
எழுதியவர்:தீபச்செல்வன்
_______________________


டவுள் கொஞ்சம் கொஞ்சமாய்
செத்துக்கொண்டிருக்கிறார்
அவரின் கழுத்து
நெரிக்கப்பட்ட பின்பும்
வெள்ளைக் கயிற்றில்
சுருக்கிலிடப்பட்டிருக்கிறார்.

அவர் தான் வளர்த்த
சேடிகளைப்பார்த்து
ஏதோ பேச
ஏத்தனிக்கிறார்
அவரின் கண்கள்
வெள்ளைத் துணியினால்
கட்டப்பட்டும்
ஓளி வெளியில் பீறிடுகிறது
அதில் செடிகள்
மூச்சிடுகின்றன.

இப்போது
யாரோ ஒருவனின்
கறுத்த முகத்தில்
கடவுள் என்று
சிவப்பு மையால்
எழுதப்பட்டிருக்கிறது
அவன் சிரிக்கிறான்
அவனின் பற்களில்
அழுகுரல்கள் காய்ந்து
சொருகியிருக்கின்றன
படிந்திருக்கின்றன.

அவன் செடிகளை
முண்டியடித்து
கடவுளின் முகத்தை
மறைத்தபடி
அவர் மரணிக்கிறார்
என்று கதறி அழுகிறான்
அடியில் சிரிப்பெழுகிறது.

அவனின் முகராசியில்
செடிகள்
பீறிட்டு அழுகின்றன
கடவுளைப்பார்த்தும்
அவனின் முகத்தில்
எழுதப்பட்டவைகளைப் பார்த்தும்.

அவன் குடுமில்
காயாத வேர்களை
முடிந்திருக்கிறான்
வாடாத குருத்துக்களை
வாயில் போட்டு
சப்பியபடி
கடவுள் வளர்த்த
செடிகளை
தொட்டு அழுகிறான்.

எல்லா செடிகளையும்
வேரோடு பிடுங்கி
இனி மயானத்தில் நடுவான்.

கடவுளின் உருவம்
தூரப்படுகிறது
அவரின் ஒளிமட்டும்
மற்றொரு புதிய திசையில்
தனித்துத்தெரிகிறது
செடிகளை சுடலைவாசி
படைத்துக்கொள்கிறான்
தன் வாசத்தில்.
-------------------------------------------------------------

0 கருத்துகள்:

வன்னி வளைப்புப் பற்றிய கவிதைகள்

# ஆட்களை இழந்த வெளி
# அடருகிற இரவொன்றில் தின்னப்பட்ட கடல்
# பதுங்குகுழியைவிட்டு அலைகிற வெளி
# பந்துகள் கொட்டுகிற காணி
# மணலில் தீருகிற துயர்
# நிலம் பெயர்ந்தலைய வந்துவிடு
# பயமுறுத்துகிற இருள்
# சுற்றி வளைக்கப்பட்ட பாதுகாப்பு வலயம்
# ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்
# எலும்புக்கூடுகளை வெளியேற்றுவதற்கான வழி
# கடல் நுழைகிற மணற் பதுங்குகுழி
# அறிவிக்கப்பட்ட வலயத்தில் நிறைகிற சுடுமணல்
# தாகம் பாய்கிற நதிக்கான கனவு
# யாருமற்ற நகரின் தெருவினை மிதிக்கிற கொடு நிழல்
# சொற்ப எண்ணிக்கையாக்கப்பட்ட குழந்தைகள்
# சுற்றி வளைக்கப்பட்ட கிராமத்தின் சரணடைகிற பொதிகள்
# மரண நெடில் வெளி இரவு
# கைப்பற்றப்பட்ட நகரம் பற்றியெழுகிற பெருந்துயர்
# மற்றொரு நகரத்தை நோக்கி நடைபெறுகிற படையெடுப்புகள்
# மலைப்பாம்பு காப்பாற்றப்போகிற முட்டைகள்
# மாதா அழைத்து வைத்திருந்த மாடுகள்
# நீர் அறிந்திருக்காத சிலுவைகள்
# தேங்காய்களை தின்று அசைகிற கொடி
#முற்றுகையிடப்பட்ட நகரத்தின் பதுங்குகுழி
#மனிதாபிமானத்திற்கான படைநடவடிக்கை
#அண்மையில் மிதிபடுகிற கடல்
#மரங்கள் பின்வாங்குகிற இன்றிரவு
#நம்மைத் தொடருகிற போர்
#குழந்தைகளை இழுத்துச் செல்லும் பாம்புகள்
#அழிப்பதற்கு பிரகடனம் செய்யப்பட்ட நகரத்தின் கதிரைகள...
#அவகாசத்திற்குப் பிறகான படைநடவடிக்கை.
#பெரிய நகரை தின்கிற படைகள்
#போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்
#போர் தொடங்கும் குழந்தைகளின் கனவுகள்

வலைப்பதிவு பட்டியல்

Related Posts Plugin for WordPress, Blogger...