Blogger இயக்குவது.
| புதிய நூல்கள்: பயங்கரவாதி - டிஸ்வரி புக்பேலஸ் | நான் ஸ்ரீலங்கன் இல்லை - யாவரும் பப்ளிசர்ஸ் | நடுகல் டிஸ்வரிபுக் பேலஸ் | deebachelvan@gmail.com | 0772487257

செவ்வாய், 2 அக்டோபர், 2007

ஒளியின் சுவடு

_____________________________
எழுதியவர்:தீபச்செல்வன்
_____________________________


ஒளியை நோக்கி இருட்டில்
கண்ள் படையெடுக்கின்றன
பூமியில் இருள்
முளைக்கத்தொடங்கியது
மண்ணின் இருளுக்குள்
இருளின் வேருக்குள்
தளைத்த பாரிய மரங்களில்
அரும்பிய
இருள் பழங்களை
புசிக்க முடியாது
கைகள் தடுமாறி அலைந்தன.

விபத்துக்களில் மோதி
தலைசிதரிய
பயணங்களின்
முதலாவது அடியெடுப்புக்கள்
தோழ்வியின் மீது மீளமீள
படித்து கொண்டிருந்தது.

எங்கேனும் தெரிகிற
ஒருதுளி வெளிச்சத்திற்காக
கண்கள் அடியெடுத்துவைக்கமுடியாத
இருளின் இடஞ்சலுக்குள்
கொலை செய்யப்பட்ட
மின்மினிகள்
ஒளியின் ஆதாரமற்று
தரையில் புதைந்துகிடந்தன.

மின்மினிளின்
துணையிலாவது
வீட்டை அடையாளம்
என்ற நம்பிக்கை
மின்மின்களின் சிறகுகள் மீது
உக்கிக் கிடந்தது.

கனவுகளில் வருகிற
ஒளியை நெருங்க
நினைகையில்
மறைந்து போகிற
மெழுகுவர்த்தியில்
அணிவகுப்புக்களில்
கனவின் ஒளி உருகிக் கொண்டிருந்தது.

ஒளியின் சாஸ்திரங்கள்
சாலை ஓர கால்வாய்களில்
அசிங்க இருட்டில்
போப்பட்டிருக்க
கண்ககள் கறுப்பாகின
வெள்ளை மனிதர்கள்
கறுப்hக்கப்பட்டனர்.

ஒளியை மிச்சம் வைக்காது
ஒளியை சேமிக்காது
விரயம் செய்தவனை
ஏசிக்கொண்டிருந்தது தெரு.

எனினும் கால்கள்
இருட்டை மோதி
முன்னேறிக் கொண்டிருந்தது.

நெருப்பின் சுவடு
அழிந்துவிட்டது என்னுருனைக்கையில்
ஒரு முதியவர்
பூட்டப்பட்ட கடையின்
தாழ்வாரத்திலிருந்து
புகைவிட்டுக் கொண்டிருந்தார்।

விளக்குகள் தீர்ந்தது என்று நினைக்கையில்
மிகவும் நினைவு கூரப்படுகிற
ஒரு கல்லறை மீது
விளக்கு எரிந்துகொண்டிருந்தது.
----------------------------------------------------------

0 கருத்துகள்:

வன்னி வளைப்புப் பற்றிய கவிதைகள்

# ஆட்களை இழந்த வெளி
# அடருகிற இரவொன்றில் தின்னப்பட்ட கடல்
# பதுங்குகுழியைவிட்டு அலைகிற வெளி
# பந்துகள் கொட்டுகிற காணி
# மணலில் தீருகிற துயர்
# நிலம் பெயர்ந்தலைய வந்துவிடு
# பயமுறுத்துகிற இருள்
# சுற்றி வளைக்கப்பட்ட பாதுகாப்பு வலயம்
# ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்
# எலும்புக்கூடுகளை வெளியேற்றுவதற்கான வழி
# கடல் நுழைகிற மணற் பதுங்குகுழி
# அறிவிக்கப்பட்ட வலயத்தில் நிறைகிற சுடுமணல்
# தாகம் பாய்கிற நதிக்கான கனவு
# யாருமற்ற நகரின் தெருவினை மிதிக்கிற கொடு நிழல்
# சொற்ப எண்ணிக்கையாக்கப்பட்ட குழந்தைகள்
# சுற்றி வளைக்கப்பட்ட கிராமத்தின் சரணடைகிற பொதிகள்
# மரண நெடில் வெளி இரவு
# கைப்பற்றப்பட்ட நகரம் பற்றியெழுகிற பெருந்துயர்
# மற்றொரு நகரத்தை நோக்கி நடைபெறுகிற படையெடுப்புகள்
# மலைப்பாம்பு காப்பாற்றப்போகிற முட்டைகள்
# மாதா அழைத்து வைத்திருந்த மாடுகள்
# நீர் அறிந்திருக்காத சிலுவைகள்
# தேங்காய்களை தின்று அசைகிற கொடி
#முற்றுகையிடப்பட்ட நகரத்தின் பதுங்குகுழி
#மனிதாபிமானத்திற்கான படைநடவடிக்கை
#அண்மையில் மிதிபடுகிற கடல்
#மரங்கள் பின்வாங்குகிற இன்றிரவு
#நம்மைத் தொடருகிற போர்
#குழந்தைகளை இழுத்துச் செல்லும் பாம்புகள்
#அழிப்பதற்கு பிரகடனம் செய்யப்பட்ட நகரத்தின் கதிரைகள...
#அவகாசத்திற்குப் பிறகான படைநடவடிக்கை.
#பெரிய நகரை தின்கிற படைகள்
#போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்
#போர் தொடங்கும் குழந்தைகளின் கனவுகள்

வலைப்பதிவு பட்டியல்

Related Posts Plugin for WordPress, Blogger...