Sunday, October 7, 2007

வயிறுதீர்ந்த பசியில்A-9

_______________________
எழுதியவர்:தீபச்செல்வன்
_______________________


ஒட்டிய வயிறுகளுடன்
தேசிய நெடுஞ்சாலையின்
ஆடர்ந்த
இராணுவ சருகுவெளியில் நின்று
ஆறுலட்சம் பேரும்
பசிக்கிறது என்றார்கள்.

ஆக்கிரமிப்பு பசிக்காக
வுpரதமிரந்தவர்கள்
பசியின் அழுகையையும்
பலவீனத்தையும்
தராசில் நிறுத்தி
வயிற்று வெளிகளுக்கு
விலைபேசினார்கள்.

ஆறுலட்சம் மக்களின்
மோத்த பசியின் கீழ்
இராணுவ பாதுகாப்பும் தீர்வும்.

ஏக்கங்கள்
அழுகைகள்
மரணங்கள்..என்று
பசிக்கான கட்டணத்தை
செலுத்தியபடி மக்கள்
வயிறுகளின்றி தீர்ந்து
உணவு கேட்டனர்.

யாருக்குப் பசிக்கப்போகிறது.

பசியில் துடித்து
வெறுமையை நிரப்பி
வயிறு முட்டியவர்களுக்கு
தீர்வின் தலைநகரத்திலிருந்து
பசியாற்றும் பாடல்
வெளியிடப்பட்டது.

நகரில்லை..
தெருவில்லை..
வீடில்லை..
உணவில்லை..
பசியின் அடியில்
சிருஸ்டித்து
சித்திரவதைக்குட்பட்ட
வாழ்வு
நசிங்கி மறைந்தது.

துப்பாக்கிகளாலும்
இராணுவ சீருடைகளாலும்
செய்யப்பட்ட
பயங்கர நகரத்தில்
பசி நிரம்பிய வயிறுகள்
காட்சிக்காக
வைக்கப்பட்டன.

பசியின் அழுகையில்தான்
அவர்களது
பாதுகாப்பும் இருப்பும்
அதன் நிழலில்
ஒட்டிய வயிறுகளை
இராணுவ தீர்வால் ஊதி
பசி போக்கிவிட்டு
பன்னகையால்
பதிலளிக்கிறது
அவர்களின் நகரம்.
--------------------------------------

0 கருத்துகள்: