Blogger இயக்குவது.
| புதிய நூல்கள்: பயங்கரவாதி - டிஸ்வரி புக்பேலஸ் | நான் ஸ்ரீலங்கன் இல்லை - யாவரும் பப்ளிசர்ஸ் | நடுகல் டிஸ்வரிபுக் பேலஸ் | deebachelvan@gmail.com | 0772487257

புதன், 5 செப்டம்பர், 2007

ஊருக்குப்போகலாம்...

_______________________
எழுதியவர்:தீபச்செல்வன்
______________________

பெருங்காடுகளின் நடுவே
நீண்ட வழியில்
எனது ஊருக்கு
பேரூந்து
போய்கொண்டிருக்கிறது.

சகபயணிகளில்
யாருடையதும்
தெரிந்த முகங்களில்லை
காடுகளின்
பசுமையை
உச்சி துளிர்க்கும் ஆர்வத்தை
இடைஇடையே
உச்சி கருகிய மரங்களை
பட்டமரங்களை
எல்லாம்
விழிகள் மேய்கிறது.

எத்தனை தடவை
பயணம் செய்தாலும்
காடுகளின் வனப்பை
வீதியின்
ஏற்ற இறக்கங்களை
அலுக்காமல்
ரசிக்க முடிகிறது.

இடை இடையே வரும்
மைற் கற்களை
எண்ணியபடி இருக்க
எங்காவது ஒரு சிறு இடத்திலிருக்கும்
தேனீர்க்கடையில்
பேரூந்து ஓய்வெடுக்கும் .
அறிமுகமில்லாத தோள்களில்
சாய்ந்து
தூங்கி விட்டு
மன்னிப்பு தடுமாறும்
சிலமுகங்களில்
பாசமும்
தொடர்ந்துபேச
ஆர்வமும் பிறக்கும்.

வழியில் பெருங்காட்டில்
ஒரு பெரியமரத்தடியில்
வண்டி பழுதுபட்டுவிட
ஓட்டுனர்
நடத்துனர் பயணிகள் சேர்ந்து
வண்டியை
திருத்திக் கொண்டிருப்பார்கள்.

அப்போது அந்த முகத்துடன்
அறிமுகம் பலப்படும்
முகவரிகள்
விசாரித்து கொள்ளப்படும்
நன்மை தீமைகள்
பகிரப்படும்
அப்படியே
சிறுதூரம் நடக்கவும்
மரத்தடியில் அமர்ந்து பேசவும்
நல்ல நண்பர்களாகிகூட விடலாம்.

பேரூந்து தயாராகிவிடும்.

வழியில் பெரிய காட்டுமரம்
முறிந்து கிடக்க
யானைகள் பாதை மாறிவிட்ட
அடையாளங்கள் கிடக்கும்
அதையும் தாண்டி
பேரூந்து ஊரை நோக்கி
போய்க் கொண்டிருக்கும்।
____________________________

0 கருத்துகள்:

வன்னி வளைப்புப் பற்றிய கவிதைகள்

# ஆட்களை இழந்த வெளி
# அடருகிற இரவொன்றில் தின்னப்பட்ட கடல்
# பதுங்குகுழியைவிட்டு அலைகிற வெளி
# பந்துகள் கொட்டுகிற காணி
# மணலில் தீருகிற துயர்
# நிலம் பெயர்ந்தலைய வந்துவிடு
# பயமுறுத்துகிற இருள்
# சுற்றி வளைக்கப்பட்ட பாதுகாப்பு வலயம்
# ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்
# எலும்புக்கூடுகளை வெளியேற்றுவதற்கான வழி
# கடல் நுழைகிற மணற் பதுங்குகுழி
# அறிவிக்கப்பட்ட வலயத்தில் நிறைகிற சுடுமணல்
# தாகம் பாய்கிற நதிக்கான கனவு
# யாருமற்ற நகரின் தெருவினை மிதிக்கிற கொடு நிழல்
# சொற்ப எண்ணிக்கையாக்கப்பட்ட குழந்தைகள்
# சுற்றி வளைக்கப்பட்ட கிராமத்தின் சரணடைகிற பொதிகள்
# மரண நெடில் வெளி இரவு
# கைப்பற்றப்பட்ட நகரம் பற்றியெழுகிற பெருந்துயர்
# மற்றொரு நகரத்தை நோக்கி நடைபெறுகிற படையெடுப்புகள்
# மலைப்பாம்பு காப்பாற்றப்போகிற முட்டைகள்
# மாதா அழைத்து வைத்திருந்த மாடுகள்
# நீர் அறிந்திருக்காத சிலுவைகள்
# தேங்காய்களை தின்று அசைகிற கொடி
#முற்றுகையிடப்பட்ட நகரத்தின் பதுங்குகுழி
#மனிதாபிமானத்திற்கான படைநடவடிக்கை
#அண்மையில் மிதிபடுகிற கடல்
#மரங்கள் பின்வாங்குகிற இன்றிரவு
#நம்மைத் தொடருகிற போர்
#குழந்தைகளை இழுத்துச் செல்லும் பாம்புகள்
#அழிப்பதற்கு பிரகடனம் செய்யப்பட்ட நகரத்தின் கதிரைகள...
#அவகாசத்திற்குப் பிறகான படைநடவடிக்கை.
#பெரிய நகரை தின்கிற படைகள்
#போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்
#போர் தொடங்கும் குழந்தைகளின் கனவுகள்

வலைப்பதிவு பட்டியல்

Related Posts Plugin for WordPress, Blogger...