Blogger இயக்குவது.
| புதிய நூல்கள்: பயங்கரவாதி - டிஸ்வரி புக்பேலஸ் | நான் ஸ்ரீலங்கன் இல்லை - யாவரும் பப்ளிசர்ஸ் | நடுகல் டிஸ்வரிபுக் பேலஸ் | deebachelvan@gmail.com | 0772487257

புதன், 5 செப்டம்பர், 2007

அண்டங்காக்கைகளின் ஓலம்

_______________________
எழுதியவர்:தீபச்செல்வன்
______________________

அண்டங்காக்கைகள்
வீட்டு முற்றத்திலிருந்த
மாமரத்திலும்
வேலி ஓரத்திலிருந்த
பனைமரத்திலும்
இருந்து கரைகின்றன.

அவம் மணப்பதாக
நெருப்பை காட்டி
அம்மா
காக்கைகளை கலைக்கிறாள்.

எனினும்
வீட்டை நோக்கி
தூரத்திலிருந்தபடி
காக்கைகள்
கரைந்தபடி இருந்தன.

எதுவும் நடக்கலாம்
என்ற அவத்தின் மீதான
நம்பபிக்கையில்
காக்கைகளை ஏசியபடி
அம்மா திண்ணையிலிருந்தாள்
காக்கைகள்
தமது இறக்கைகளின் பகுதிகளை
கழற்றி போட்டிருக்கலாம்
அவைகளில்
அவத்தின் நாக்குகள்;
காவப்பட்டு அசையலாம்
என்று அம்மா யோசித்தாள்.

சனிக்கிழமைகளில்
இந்த திண்ணையை மெழுகி
விரதமிருந்து
சனியன்கள் தீரும் என்று
நம்புவாள்
காக்கைகளை தேடிப்போய்
கூவி கூப்பிட்டு
சாப்பாடு வைப்பாள்.

அம்மாவிடம்
இப்போது திணிந்திருக்கும்
கொடிய விரதத்தை,
அச்சமூட்டும்படி ஓலமிட்டு
வீடுகளை
எச்சரிக்கும் காக்கைகளின்
கண்மூடித்தனமான
அசிங்கத்தை
வெறித்தபடி கலைத்தாள்.

புற்கள் மண்டி
சருகு நிறைந்து கிடந்த
ஊரின் பிரதான தெருவை
பார்த்துக் கொண்டு
மருந்து தீர்ந்த
வெறும் குப்பிகளை
அள்ளிகட்டினாள்.

சமைத்து நீண்டநாளாகிய
சமையல் பாத்திரங்களை
கழுவி காயவிட்டாள்
அவசிய உணவுப் பொருட்கள்
தீர்ந்தபைகளை
உதறி சுருட்டிவைத்தாள்.

பயன்தரும் பெருமரங்களும்
மூலிகைச் செடிகளும்
சற்று வாடிக்கிடந்தன
அடுப்பை எரித்து
தண்ணீரை வைத்துவிட்டு
அம்மா காக்கைகளை
மறந்து கொண்டாள்.
_________________________

0 கருத்துகள்:

வன்னி வளைப்புப் பற்றிய கவிதைகள்

# ஆட்களை இழந்த வெளி
# அடருகிற இரவொன்றில் தின்னப்பட்ட கடல்
# பதுங்குகுழியைவிட்டு அலைகிற வெளி
# பந்துகள் கொட்டுகிற காணி
# மணலில் தீருகிற துயர்
# நிலம் பெயர்ந்தலைய வந்துவிடு
# பயமுறுத்துகிற இருள்
# சுற்றி வளைக்கப்பட்ட பாதுகாப்பு வலயம்
# ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்
# எலும்புக்கூடுகளை வெளியேற்றுவதற்கான வழி
# கடல் நுழைகிற மணற் பதுங்குகுழி
# அறிவிக்கப்பட்ட வலயத்தில் நிறைகிற சுடுமணல்
# தாகம் பாய்கிற நதிக்கான கனவு
# யாருமற்ற நகரின் தெருவினை மிதிக்கிற கொடு நிழல்
# சொற்ப எண்ணிக்கையாக்கப்பட்ட குழந்தைகள்
# சுற்றி வளைக்கப்பட்ட கிராமத்தின் சரணடைகிற பொதிகள்
# மரண நெடில் வெளி இரவு
# கைப்பற்றப்பட்ட நகரம் பற்றியெழுகிற பெருந்துயர்
# மற்றொரு நகரத்தை நோக்கி நடைபெறுகிற படையெடுப்புகள்
# மலைப்பாம்பு காப்பாற்றப்போகிற முட்டைகள்
# மாதா அழைத்து வைத்திருந்த மாடுகள்
# நீர் அறிந்திருக்காத சிலுவைகள்
# தேங்காய்களை தின்று அசைகிற கொடி
#முற்றுகையிடப்பட்ட நகரத்தின் பதுங்குகுழி
#மனிதாபிமானத்திற்கான படைநடவடிக்கை
#அண்மையில் மிதிபடுகிற கடல்
#மரங்கள் பின்வாங்குகிற இன்றிரவு
#நம்மைத் தொடருகிற போர்
#குழந்தைகளை இழுத்துச் செல்லும் பாம்புகள்
#அழிப்பதற்கு பிரகடனம் செய்யப்பட்ட நகரத்தின் கதிரைகள...
#அவகாசத்திற்குப் பிறகான படைநடவடிக்கை.
#பெரிய நகரை தின்கிற படைகள்
#போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்
#போர் தொடங்கும் குழந்தைகளின் கனவுகள்

வலைப்பதிவு பட்டியல்

Related Posts Plugin for WordPress, Blogger...