Blogger இயக்குவது.
| புதிய நூல்கள்: பயங்கரவாதி - டிஸ்வரி புக்பேலஸ் | நான் ஸ்ரீலங்கன் இல்லை - யாவரும் பப்ளிசர்ஸ் | நடுகல் டிஸ்வரிபுக் பேலஸ் | deebachelvan@gmail.com | 0772487257

புதன், 5 செப்டம்பர், 2007

சிறகு முளைத்த வானம்


பதுங்கு குழியின் ஓரத்தில்
இடிந்து கிடந்த  வானம்
நிமிர்ந்து வெளிக்கிறது
திடுக்கிட்டு
சிறுபள்ளங்களில் விழுந்து பதுங்கிய குழந்தைகள்
பார்க்க மறுத்த வானம் நோக்கி
கை தட்ட
புன்னகையால் நிரம்பிற்று வானம்.

செடிகளில் புன்னகை அரும்ப
நெடுநாட்களின் பின்
சூரியன் வருகிறான் கம்பீரமாய்
இருள் துடைக்கப்பட்ட
நிலவின் ஒளியில்
விண்மீன்களை எண்ணுகின்றனர்
இரவுப் பொழுதின்
முற்றத்தில் படுத்திருக்கும் குழந்தைகள்

நள்ளிரவில் குழந்தைகள்
கண்ணயரும்போது
நாட்டைச் சிதைக்க
வானத்தை உழும் பயங்கரப் பறவைகள்
காவிச்செல்வதெல்லாம்
பிய்த்துவிட்ட குழந்தைகளின் உடல்களை

அதன் அசுரச்சிறகுகளை
பிடுங்கி எறிந்துவிட
துரத்தின போராளிகளின் பீரங்கிகள்

அவை உறங்கும்
அசுரக்குகையை
நெருப்பை பொழிந்து அழித்துவிட
விரிந்தன ஈகம் சுமந்த சிறகுகள்

தான் எறிந்த கல்லில் விமானம்
வீழ்ந்ததென துள்ளிக் குதிக்கும்
ஒரு சிறுவனின்
குதூகலத்தில் இருந்தது விடுதலை

தான் எறிந்த நெருப்புக் கொள்ளியில்
விமான நிலையம் அழிந்ததென
சொல்லித் திரியும் சிறுமியின்
கொண்டாத்தில் இருந்தது வாழ்வின் கனவு

சிறகு முளைத்த வானத்தில்
பறவைகளைப் போல
இறக்கையபடித்துப் பறந்தனர் குழந்தைகள்.
0

தீபச்செல்வன்

2007


ஜூலை 2007இல் வன்னியில் விடுதலைப் புலிப் போராளிகளால் விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டது. அதே காலத்தில் புலிகளின் விமானங்கள் இலங்கை தலைநகரில் தாக்குதல்களை மேற்கொண்டன. மேற்போந்த பின்னணியுடன் புலிகளின் வீரம் செறிந்த தாக்குதல்களில் ஒன்றான  2001இல் நடைாத்தப்பட்ட கட்டுநாயக்கா விமான நிலைய அழிப்பு உள்ளிட்ட “போராளிகளின் விமானத்துறை“ பின்னணிகளில் இக் கவிதை எழுதப்பட்டது. 2016இல் திருத்தம் செய்யப்பட்டது. 

பிரசுரம் - ஈழநாதம்

0 கருத்துகள்:

வன்னி வளைப்புப் பற்றிய கவிதைகள்

# ஆட்களை இழந்த வெளி
# அடருகிற இரவொன்றில் தின்னப்பட்ட கடல்
# பதுங்குகுழியைவிட்டு அலைகிற வெளி
# பந்துகள் கொட்டுகிற காணி
# மணலில் தீருகிற துயர்
# நிலம் பெயர்ந்தலைய வந்துவிடு
# பயமுறுத்துகிற இருள்
# சுற்றி வளைக்கப்பட்ட பாதுகாப்பு வலயம்
# ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்
# எலும்புக்கூடுகளை வெளியேற்றுவதற்கான வழி
# கடல் நுழைகிற மணற் பதுங்குகுழி
# அறிவிக்கப்பட்ட வலயத்தில் நிறைகிற சுடுமணல்
# தாகம் பாய்கிற நதிக்கான கனவு
# யாருமற்ற நகரின் தெருவினை மிதிக்கிற கொடு நிழல்
# சொற்ப எண்ணிக்கையாக்கப்பட்ட குழந்தைகள்
# சுற்றி வளைக்கப்பட்ட கிராமத்தின் சரணடைகிற பொதிகள்
# மரண நெடில் வெளி இரவு
# கைப்பற்றப்பட்ட நகரம் பற்றியெழுகிற பெருந்துயர்
# மற்றொரு நகரத்தை நோக்கி நடைபெறுகிற படையெடுப்புகள்
# மலைப்பாம்பு காப்பாற்றப்போகிற முட்டைகள்
# மாதா அழைத்து வைத்திருந்த மாடுகள்
# நீர் அறிந்திருக்காத சிலுவைகள்
# தேங்காய்களை தின்று அசைகிற கொடி
#முற்றுகையிடப்பட்ட நகரத்தின் பதுங்குகுழி
#மனிதாபிமானத்திற்கான படைநடவடிக்கை
#அண்மையில் மிதிபடுகிற கடல்
#மரங்கள் பின்வாங்குகிற இன்றிரவு
#நம்மைத் தொடருகிற போர்
#குழந்தைகளை இழுத்துச் செல்லும் பாம்புகள்
#அழிப்பதற்கு பிரகடனம் செய்யப்பட்ட நகரத்தின் கதிரைகள...
#அவகாசத்திற்குப் பிறகான படைநடவடிக்கை.
#பெரிய நகரை தின்கிற படைகள்
#போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்
#போர் தொடங்கும் குழந்தைகளின் கனவுகள்

வலைப்பதிவு பட்டியல்

Related Posts Plugin for WordPress, Blogger...