Blogger இயக்குவது.
| புதிய நூல்கள்: பயங்கரவாதி - டிஸ்வரி புக்பேலஸ் | நான் ஸ்ரீலங்கன் இல்லை - யாவரும் பப்ளிசர்ஸ் | நடுகல் டிஸ்வரிபுக் பேலஸ் | deebachelvan@gmail.com | 0772487257

புதன், 29 ஆகஸ்ட், 2007

பதுங்குகுழி வாழ்வு

கவிதை___________________________
--------------------------தீபச்செல்வன்
________________________________________

------------------------------------------------------------------

பதுங்குகுழியினூளான வாழ்வு
மனித நாகரீகத்தை
வியந்துகொண்டிருக்கிறது
நமது நகரின் பதுங்குகுழி
பற்றிய விளம்பரங்களோடு.

வீதியில் நடந்துகொண்டிருக்கையில்
வேலியோர
கால்வாய்களை அண்டியபடி
அன்றாட வாழ்வு
சென்றுகொண்டிருக்கிறது.

வெள்ளைச்சீருடைகளை
அணிந்துகொண்டு
புத்தகங்களை
பதுங்கு குழிகளில் நிரப்பி
அதன் சுவர்களில்
பாடத்தை எழுதி
படித்துக்கொண்டிருக்கிறார்கள்
மாணவர்கள்.

அடிக்கடி திடுக்கிட்டு
சிறுசிறு பள்ளங்களில்
விழுந்து கிடக்கும்
குழந்தைகள்
சத்தமிடாமல் மூச்சிட்டு
பதுங்கு குழியின் மூலைகளில்
ஒளிந்துகொண்டு
செவிகளை அறுத்து வீசினார்கள்.

காற்றைக்கேட்டுப் பயந்துகொண்டார்கள்
வானத்தை பார்க்க மறுத்து
குப்புற விழுந்தார்கள்.

வீடுகட்டத் தேவையில்லை
பள்ளிக்கூடம்
கட்டத் தேவையில்லை
வீதிசெய்யத் தேவையில்லை?
மண்ணைக் கிண்டியே
வாழ்ந்துகொண்டிருக்கவேண்டும்
மண்ணைக்கீறியே
பயணம்செய்யவேண்டும்.
நிலத்தின்கீழ்
இயல்பான தேவைகள்
அடங்கிக் கிடக்கின்றன.
உரிமைகளும் அடையாளங்களும்
புதைந்துபோகின்றன.

ஒவ்வொருவரும் தங்களுக்கான
பதுங்கு குழிகளைப்பற்றியே
தீவிரமாக செயற்படவேண்டியிருக்கிறது
தூக்கிப் புதைப்பதற்கு
யாரும் மிஞ்சியிருக்க மாட்டார்கள்
மொத்த வாழ்வும்
பதுங்கு குழியில் அடங்கி
புதைகுழிகளாகவும் மாறலாம்.

மனித வாழ்வு மண்ணைக்கிண்டி
பூமியின் அடியைநோக்கி
சென்றுகொண்டிருக்கிறதே?
புதிய நாகரீகத்தின்
வாழ்க்கை முறையா?
விஞ்ஞானங்களின் பிரதிபலிப்பா?
மனித உரிமைகளும் சிறுவர் உரிமைகளும்
உக்கித்தொலைகின்றன
வாழ்வும் கேள்விகளும்
பதுங்கு குழியில் புதைகின்றன.
_______________________
மீள்எழுத்து:தினக்குரல்
__________________________

0 கருத்துகள்:

வன்னி வளைப்புப் பற்றிய கவிதைகள்

# ஆட்களை இழந்த வெளி
# அடருகிற இரவொன்றில் தின்னப்பட்ட கடல்
# பதுங்குகுழியைவிட்டு அலைகிற வெளி
# பந்துகள் கொட்டுகிற காணி
# மணலில் தீருகிற துயர்
# நிலம் பெயர்ந்தலைய வந்துவிடு
# பயமுறுத்துகிற இருள்
# சுற்றி வளைக்கப்பட்ட பாதுகாப்பு வலயம்
# ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்
# எலும்புக்கூடுகளை வெளியேற்றுவதற்கான வழி
# கடல் நுழைகிற மணற் பதுங்குகுழி
# அறிவிக்கப்பட்ட வலயத்தில் நிறைகிற சுடுமணல்
# தாகம் பாய்கிற நதிக்கான கனவு
# யாருமற்ற நகரின் தெருவினை மிதிக்கிற கொடு நிழல்
# சொற்ப எண்ணிக்கையாக்கப்பட்ட குழந்தைகள்
# சுற்றி வளைக்கப்பட்ட கிராமத்தின் சரணடைகிற பொதிகள்
# மரண நெடில் வெளி இரவு
# கைப்பற்றப்பட்ட நகரம் பற்றியெழுகிற பெருந்துயர்
# மற்றொரு நகரத்தை நோக்கி நடைபெறுகிற படையெடுப்புகள்
# மலைப்பாம்பு காப்பாற்றப்போகிற முட்டைகள்
# மாதா அழைத்து வைத்திருந்த மாடுகள்
# நீர் அறிந்திருக்காத சிலுவைகள்
# தேங்காய்களை தின்று அசைகிற கொடி
#முற்றுகையிடப்பட்ட நகரத்தின் பதுங்குகுழி
#மனிதாபிமானத்திற்கான படைநடவடிக்கை
#அண்மையில் மிதிபடுகிற கடல்
#மரங்கள் பின்வாங்குகிற இன்றிரவு
#நம்மைத் தொடருகிற போர்
#குழந்தைகளை இழுத்துச் செல்லும் பாம்புகள்
#அழிப்பதற்கு பிரகடனம் செய்யப்பட்ட நகரத்தின் கதிரைகள...
#அவகாசத்திற்குப் பிறகான படைநடவடிக்கை.
#பெரிய நகரை தின்கிற படைகள்
#போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்
#போர் தொடங்கும் குழந்தைகளின் கனவுகள்

வலைப்பதிவு பட்டியல்

Related Posts Plugin for WordPress, Blogger...