Blogger இயக்குவது.
| புதிய நூல்கள்: பயங்கரவாதி - டிஸ்வரி புக்பேலஸ் | நான் ஸ்ரீலங்கன் இல்லை - யாவரும் பப்ளிசர்ஸ் | நடுகல் டிஸ்வரிபுக் பேலஸ் | deebachelvan@gmail.com | 0772487257

புதன், 29 ஆகஸ்ட், 2007

நல்லதோர் வீடுசெய்வோம்

_______________________
எழுதியவர்:தீபச்செல்வன்
______________________

உடைந்து துண்டு துண்டாக
கிடக்கிறது
உனக்காக நான்
கட்டிவைத்த வீடு
நீயும் நானும்
பேசிக்கொள்ளவும்
சுயங்களை
பரிமாறி நமக்குள்
உறவை ஏற்படுத்தவும்
வீடு கட்டப்பட்டிருந்தது..

உனக்காக சில
விசேஷ சாளரங்களை
அமைத்து
பல்வேறுவிதமான
காட்சிகளையும்
மாட்டியிருந்தேன்..
நமது நலனுக்காகவே
சில சாளரங்களை பூட்டி
சில காட்சிகளை
காணாமலும்
வழி திறந்தேன்..

கதவுகள் இல்லாத
வாசல்களை
நிறையவே செய்துவைத்தேன்
உனக்கு பிடித்த
பல்வேறு வரவுகளால்
உனக்கேற்ற
தூரங்களால்
எனது வாசல்
மிக அகல விரிந்து
உன்னை வரவேற்றது.

நீ என்னோடு
பேசிக்கொண்டிருக்கையில்
எனது வீட்டின் கூரையை
சுவரை
ஜன்னல்களை
வாசலை
படம் பிடிப்பது போல
நோட்டமிட்டு வேவெடுத்தாய்..

எனது கூரையை
சிதைத்து
எனது சுவர்களை
சரித்து
எனக்கான பசுமையை
அழித்து
உனது பார்வையில்
வெறியூட்டி
எனது வீட்டின் நிழலை
குழப்பியடித்திருக்கிறாய்..

இனி நாம் நமக்கென்ற
வீடு பற்றிய
எண்ணத்திலிருந்து விடுபடுவோம்;.
நீ உனக்கான
வீட்டை கட்டு
நான் என்கான
வீட்டை கட்டுகிறேன்
யாரும் யாருடைய வீடுகளையும்
சிதைக்கத்தேவையில்லை
கட்சிகளை குழப்பத்தேவையில்லை
அவரவர் நிழல்களை
விடுவித்து
அவரவர் சுயத்துடன் வாழ்வதற்கு
நல்லதோர் வீடுசெய்வோம்
அவரவர் வீட்டின்
சாளரங்களை திறந்து
பொருத்தமான
காட்சிகளை பார்ப்போம்।
____________________________

0 கருத்துகள்:

வன்னி வளைப்புப் பற்றிய கவிதைகள்

# ஆட்களை இழந்த வெளி
# அடருகிற இரவொன்றில் தின்னப்பட்ட கடல்
# பதுங்குகுழியைவிட்டு அலைகிற வெளி
# பந்துகள் கொட்டுகிற காணி
# மணலில் தீருகிற துயர்
# நிலம் பெயர்ந்தலைய வந்துவிடு
# பயமுறுத்துகிற இருள்
# சுற்றி வளைக்கப்பட்ட பாதுகாப்பு வலயம்
# ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்
# எலும்புக்கூடுகளை வெளியேற்றுவதற்கான வழி
# கடல் நுழைகிற மணற் பதுங்குகுழி
# அறிவிக்கப்பட்ட வலயத்தில் நிறைகிற சுடுமணல்
# தாகம் பாய்கிற நதிக்கான கனவு
# யாருமற்ற நகரின் தெருவினை மிதிக்கிற கொடு நிழல்
# சொற்ப எண்ணிக்கையாக்கப்பட்ட குழந்தைகள்
# சுற்றி வளைக்கப்பட்ட கிராமத்தின் சரணடைகிற பொதிகள்
# மரண நெடில் வெளி இரவு
# கைப்பற்றப்பட்ட நகரம் பற்றியெழுகிற பெருந்துயர்
# மற்றொரு நகரத்தை நோக்கி நடைபெறுகிற படையெடுப்புகள்
# மலைப்பாம்பு காப்பாற்றப்போகிற முட்டைகள்
# மாதா அழைத்து வைத்திருந்த மாடுகள்
# நீர் அறிந்திருக்காத சிலுவைகள்
# தேங்காய்களை தின்று அசைகிற கொடி
#முற்றுகையிடப்பட்ட நகரத்தின் பதுங்குகுழி
#மனிதாபிமானத்திற்கான படைநடவடிக்கை
#அண்மையில் மிதிபடுகிற கடல்
#மரங்கள் பின்வாங்குகிற இன்றிரவு
#நம்மைத் தொடருகிற போர்
#குழந்தைகளை இழுத்துச் செல்லும் பாம்புகள்
#அழிப்பதற்கு பிரகடனம் செய்யப்பட்ட நகரத்தின் கதிரைகள...
#அவகாசத்திற்குப் பிறகான படைநடவடிக்கை.
#பெரிய நகரை தின்கிற படைகள்
#போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்
#போர் தொடங்கும் குழந்தைகளின் கனவுகள்

வலைப்பதிவு பட்டியல்

Related Posts Plugin for WordPress, Blogger...